Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

குரு உபதேசம் – 3401

தானமும், தியானமும் செய்கின்ற மக்களுக்கு இடையூறு செய்யவல்ல நவக்கிரகங்களே தமது குறைபாடுகளால், அவர்களுக்கு எந்த பாதகமும் வராது காத்து, சாதகமாக செயல்பட்டு, அவர்களுக்கு நலவாழ்வை அருளும். பாவிகளுக்கு பாதகமாகவும், நவக்கிரகங்கள் புண்ணியவான்களுக்கு சாதகமாகவும் இருக்கும்.

குரு உபதேசம் – 3400

முருகப்பெருமான்தான் முதன் முதலில் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை பெற்றவனென்றும், மரணமிலாப் பெருவாழ்வை “ஜீவ தயவு” எனும் கொள்கையை கடைபிடித்ததால்தான் பெற முடிந்தது என்பதையும், ஜீவதயவே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதையும் அறியலாம். முருகனது அருளைப் பெற்று, ஜீவதயவினை கடைப்பிடித்து நாமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3399

தோன்றிய உயிர்கள் அனைத்தும் அழிவது இயல்பே. ஆனால் அருந்தவ முயற்சியினால் என்றும் அழியாத நிலையினை பெற்ற முதல் தலைவன், ஆற்றல் பொருந்திய முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.