Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

News

Our Gurunathar is so compassionate that he wishes every human being should attain liberation in this or ensuing rebirths. Our Gurunathar has blessed us with so many ways to achieve this like doing annathaanam (food donation to poor) at Ongarakudil, Thuraiyur as well as our branches all over the world like Malaysia, London and other disctricts of Tamil Nadu, conducting Thiru Vilakku Poojai, providing herbal nutritious porridge (arutkanji), feeding animals, eye camp, ambulance services etc.

MAY 2025

Back
5th May 2025
குரு உபதேசம் 4386

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….

பிறவா பெருநிலையை, மரணமிலாப் பெருவாழ்வை அடைகின்றதான ஞானம்தனை பெறுதல் முருகனருளால் மட்டுமே இயலும். அப்படிப்பட்ட ஞானம் என்ற சொல்லே ஜீவதயவினை அடிப்படையாகக் கொண்டதுதான். ஜீவதயவை பெற வேண்டுமாயின் ஜீவதயவே வடிவான முருகனது அருளைப் பெற்றாலன்றி நம்முள் ஜீவதயவு தோன்றாது. முருகன் அருளை பெறபெற ஜீவதயவும் நம்முள் தோன்றி பெருகும். முருகனது அருள் கூடிட கூடிட ஜீவதயவு மேல்மேலும் பெருகி ஜீவதயவே வடிவான முருகப்பெருமானின் அன்பிற்கு பாத்திரமாகி நாமும் ஜீவதயவுடையோராய் மாறி முருகனது திருவடிக்கு ஆளாகி மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம். ஆக ஜீவதயவை பெறுவதற்கான முதல்படியாக உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். ஜீவதயவின் தலைவனான முருகனது திருவடிகளைப் பற்றி காலை பத்து நிமிடமும் மாலை பத்து நிமிடமும் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ முருகனின் திருநாமங்களை மனமுருகி சொல்லி பூஜைகள் செய்தும் மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வந்தால் முருகனது அருளைப் பெற்று ஜீவதயவைப் பெறலாம்.

……………..

செந்தில் ஆண்டவன் திருவடியை போற்றிட

வந்திட்ட காலனும் வருந்தியே நடுங்குவான்.