News
MAY 2025

குரு உபதேசம் 4398
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞானயுகமான ஞானசித்தர்கள் ஆட்சியிலே ஞானிகளின் மூத்த தலைவனும், முதல்வனுமான ஞானபண்டிதனே நேரில் அவதாரமாக தோன்றி அருள்பாலிப்பதை அறிந்து கொள்வதோடு ஞான ஆட்சி காலமதிலே பண்புடையோர், பத்தினி பெண்கள், ஆதரவற்றோர், பஞ்சபராரிகள் என அனைவரும் ஞானவான் முருகனாலும் சித்தர்களாலும் காக்கப்படுவார்கள் என்பதையும் அராஜகம் செய்வோர், பொது சொத்தை அபகரிப்போர், லஞ்சம் வாங்குவோர், கலப்படம் செய்வோர், வஞ்சனை செய்வோர், நீதிக்கு புறம்பாக நடப்பதும், தீமைகள் புரிகின்ற அனைவரும் ஞானிகளால் கட்டுப்படுத்தப்பட்டு இவ்வுலகம் காக்கப்படும் என்பதை அறியலாம்.
……………..
யுகம் பல கடந்த உத்தம வேலனை
அகம் மகிழ போற்றிட ஆனந்தமாமே.
போற்றுதற்குரிய புண்ணிய வேலனை
ஏற்றி ஏற்றி தொழுவோம் நாமே.
