News
FEBRUARY 2022

எது ஆன்மீகம்?
பசியாற்றக்கூடிய எண்ணம் எங்கிருக்கிறதோ? அது அறம். அந்த சிந்தனையே கடவுள் வாழுகின்ற இடம். பிறருக்கு பசியாற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலே அங்கே கடவுள் இருக்கிறான். கடவுளை எங்கேயும் தேடிப்போக வேண்டியதில்லை. தூயமனம் உள்ளவனே கடவுள். உண்மைப் பொருளுணர்ந்தவன் எந்த அளவுக்கு பிறர் மகிழ நடந்து கொள்கின்றானோ? அதுவே அறம், அதுவே தவம், அதுவே ஞானம், அதுவே முக்தி. அதுவே உண்மை ஆன்மீகம்.
