News
MAY 2023

குரு உபதேசம் – 3679
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனே தமிழை உருவாக்கியவன், முருகனே ஞானத்தையும் உண்டாக்கியவன், முருகனே அனைத்து கலைகளுக்கும் தலைவன், தமிழே ஞான மொழி, தமிழ் கற்றால்தான் ஞானம் பெற முடியும் எனும் சிறப்பறிவை பெறலாம்.
தமிழ் கடவுள் முருகனே ஞானபண்டிதனாக இருப்பதையும், முருகப்பெருமான் திருவடி பற்றி மனமுருகி பூஜித்து வணங்க வணங்க உயிர்க்கொலை செய்து புலால் உண்டதால்தான் நமக்கு ஞானம் தடைபட்டதை உணர்வார்கள். புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டாலன்றி ஞானத்தில் முன்னேற முடியாது என்பதையும் அறிந்து, சைவ உணவினை மேற்கொண்டு முருகனது திருவடி பற்றி பூஜித்து எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ள முருகனது ஆசிபெற மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைக்கு பசியாற்றுவித்தும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தியும் ஆசியை பெற்றால் ஞானம் பெறலாம் என்பதையும் அறிந்து முருகனது கருணையாலே ஞானவழிக்குரிய மார்க்கமும் அதற்குரிய தக்க துணையான சொற்குருவையும், சற்குருவையும் முருகனருளால் பெறுவார்கள்.
சொற்குரு வழிகாட்டலினாலே சற்குருவை கண்டுகொண்டு ஞானவழிதனிலே சென்று ஞானமும் பெறுவார்கள் என்பதை அறியலாம்.
