News
OCTOBER 2023

குரு உபதேசம் – 3830
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞானிகள் திருவடிகளை வணங்க வணங்க ஞானியர் கூட்ட தலைவன் சித்தர்கோன் அகத்தியரே சரியை, கிரியை, யோக, ஞானம் குறித்த அறிவை தருபவர் என்பதும், அவரே சித்தர் சபை தலைவன் என்பதும் உணர்த்தப்படும். அகத்தியர் திருவடி பற்றி வணங்க வணங்க ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்றும், முருகனே சரியை, கிரியை, யோக, ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அறியவும், அறிந்து தெளியவும், தெளிந்து பின்பற்றவும், பின்பற்றி கடைப்பிடிக்கவும், கடைப்பிடித்து கடைத்தேறவும் அருள் செய்து நம்மையும் தம்மை போலவே ஆக்கிக் கொள்ளும் வல்லமை பெற்றவன் என்பதும் தெளிவாகும்.
