News
SEPTEMBER 2024

குரு உபதேசம் – 4151
முருகனை வணங்கிட : தன்னை அறிந்து தகைமை பெற தமிழே துணை என்பதை அறியலாம். என்றும் இளமையாக மரணமற்று முருகப்பெருமான் இருப்பது போலவே முருகனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழும் என்றும் இளமையாகவே இருப்பதையும், என்றும் அழியாமலும் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம். தமிழ் ஞானமொழியாகும். உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள விரும்பினால் தமிழைக் கற்றால் அன்றி வேறு மார்க்கமில்லை. தமிழ் மொழி மட்டுமே உடம்பையும், உயிரையும் பற்றி விளக்கி மரணமிலாப் பெருவாழ்வை அடைய உதவும் மொழியாகும். வேறெந்த மொழிக்கும் இந்த வாய்ப்பில்லை.
