News
SEPTEMBER 2024

குரு உபதேசம் – 4167
முருகனை வணங்கிட: இருவினையும் அறிந்து வென்று இனி பிறவா மார்க்கத்தையும் அடையலாம்.
அண்டத்தை காக்கவே அவதரித்தான் முருகனென்றே
கண்டு கொண்டாலே போதும் காணுமே உண்மை.
அற்புதம் நிறைந்த கற்பக திருவே
ஆறுமுகப் பெருமானே போற்றி போற்றி
முருகப்பெருமான் ஆசியை பெற விரும்புகின்ற மக்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும் இரவு பன்னிரண்டு மணிக்கு முடிந்தால் பத்து நிமிடமும் நாமஜெபத்தினை சலிப்பில்லாமல் செய்து வந்தால் முருகன் அருள் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
ஆற்றலாம் முருகனின் அருளை தினமும்
போற்றியே மகிழ்ந்தேன் புண்ணியன் ஆனேன்.
இகவாழ்விற்கு துணையாய் இருக்கின்ற உடம்பே
பரவாழ்விற்கும் துணையென்றே பகர்.
