News
MAY 2025

குரு உபதேசம் 4384
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
இகவாழ்வை செம்மையாக நடத்திட ஆசி பெறலாம், பரவாழ்வையும் செம்மையாக நடத்திட ஆசி பெறலாம்.
……………..
தேற்றமாம் முருகனின் திருவடி போற்றிட
மாற்றமும் உண்டு மனமும் செம்மையே.
செம்மையாம் முருகனின் திருவடியை போற்றிட
இம்மைக்கும் மறுமைக்கும் இணையடி துணையே.
துணையாம் இணையடி தோத்திரம் செய்திட
வினையுமில்லை விவேகம் உண்டாம்.
உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட
கண்டவர் கண்ட கருத்து இதுவாம்.
