News
SEPTEMBER 2025

குரு உபதேசம் 4525
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
காமக்கனல், யோகக்கனல், மூலக்கனல், பசிக்கனல், கோபக்கனல் என்கிற ஐந்து வகையான கனல்களையும் அளவு மீறாது சமமாக வைத்துக் கொள்ளும் நுட்பமான பயிற்சியே, நுட்பமான அறிவே யோகமாகும் என்பதையும், இந்த பயிற்சிகளை தாங்குவதான தேகம் யோகதேகமாக இருக்க வேண்டும் என்பதாலும், அது யோகிகளுக்கே அமையும் என்பதாலும், இந்த ஐந்து கனல்களையும் கட்டுப்படுத்தும் முறை யோகிகளால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதாலும், இல்லறத்தானால் இதை செயல்படுத்த முடியாது என்பதாலும், அதற்குரிய தேகம் இல்லறத்தானிடத்து இல்லை என்பதாலும், யோகம் என்பது அகத்தியபெருமானால் அங்கீகரிக்கப்பட்ட யோகிகளுக்கு மட்டுமே உரியது என்பதையும் அறியலாம். அகத்தியபெருமான் அங்கீகாரம் பெற்று ஞானிகள் துணையுடன் ஞானிகள் சுட்டி காண்பிக்கும் சொற்குரு துணையுடன் செயல்பட்டாலன்றி யோகம் வாய்க்காது என்பதையும் அறியலாம்.
