News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் மகான் இராமலிங்க சுவாமிகள் 02
2. அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
அருட் சிவநெறி சார் அருட்பெருநிலை வாழ்
அருட் சிவபதியாம் அருட்பெருஞ்ஜோதி !
அருட்சிவ நெறி : இதுவே சுத்த சன்மார்க்கம்.
இங்கு ‘சிவம்’ என்பது அழியாத பேரின்ப நிலையைக் குறிக்கிறது.
அருட்பெருநிலை : மரணமில்லாப் பெருவாழ்வு நிலை, முத்தி நிலை.
அருட் சிவபதி : இறைவன் இந்த உயர்ந்த நெறிக்கும், அந்த அழிவற்ற நிலைக்கும் தலைவன்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இறைவன்தான், ஞானிகள் அடைய விரும்பும் மேலான நிலையான அருள்நிலையில் என்றும் நிலைத்திருக்கிறார்.


