News
MAY 2025

குரு உபதேசம் 4405
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகனது திருவடி பற்றி ஆசிபெற்று ஆட்சி பொறுப்பிலே அமர்ந்து ஆட்சி செய்வோர் முருகனது பிரதிநிதிகளாக செயல்படுவதினாலே அந்த ஆட்சியிலே மக்கள் அரசிற்கு கட்டும் வரிப்பணமெல்லாம் சிவன் கொடுத்த பொருளாய் எண்ணி, சிவன் சொத்தாக போற்றப்படும். பொது சொத்தை அபகரித்தல் என்பது சிவன் சொத்தை அபகரிப்பதாக எண்ணப்பட்டு கடும் தண்டனை கிடைக்கும் என்பதை உணர்ந்து பொது சொத்தை சிவன் சொத்தாகவும், மக்கள் வரிப்பணத்தை சிவன் சொத்தாகவும் போற்றி பாதுகாப்பார்கள். முருகனது திருவடிக் கீழ் நடக்கும் நல்லாட்சியிலே பருவமழை தவறாது பெய்யும், மிகை மழை பெய்து வெள்ளம் ஏற்படாது, மழையற்று போய் பஞ்சமும் வராது. எல்லாம்வல்ல முருகன் அருளினாலே பஞ்ச பூதங்களும் ஆட்சி புரிவோர் தம்மின் பொதுநலம் சார்ந்த நியாயமான வேண்டுகோளிற்கு கட்டுப்பட்டு நடக்கும்.
இத்தகைய பேராற்றல் வாய்ந்த ஆட்சியை ஞானிகள் தலைமையேற்கும் ஞானபண்டிதனின் ஞானயுக ஆட்சியில்தான் காண முடியுமே தவிர இதுவரை உலகம் இப்படிப்பட்ட இவ்வித ஆட்சியை கண்டதுமில்லை, இனி காணப் போவதுமில்லை.
மக்கள் அனைவரும் முருகனது திருவடியைப் பற்றி பூஜிக்க பூஜிக்க இவ்வித பொற்கால ஆட்சி விரைந்து இவ்வுலகினில் அமைவதை காணலாம்.
