News
MAY 2025

குரு உபதேசம் 4410
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞானிகள் தலைமையில் உருவாகும் ஞானசித்தர்கள் காலத்தில், ஞானசித்தர்கள் ஆட்சியிலே பதவிக்கும், அரசியல் சார்ந்த அரசு அதிகாரிகளும், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களும் தேர்ந்தெடுக்கும் போது புலால் உண்ணாத மாண்புடையோராய்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முக்கிய பொறுப்புகளில் உள்ளோர் மது அருந்தாதவராயும், புலால் உண்ணாதவராயும், பொருள் பற்று அற்றவர்களாயும் உள்ளவர்களே ஆட்சி பொறுப்பிற்கு ஞானிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், மற்றவர்க்கு அந்த வாய்ப்புகள் ஒருபோதும் தரப்படமாட்டாது என்பதையும் அறியலாம்.
……………..
அகிலத்தலைவன் ஆறுமுகன் ஆட்சியால்
மகிழ்வார் மக்கள் மண்ணுலகம் செழிக்கும்.
ஜோதி சுடராய் தோன்றும் முருகனை
நீதியாய் போற்றிட நிலைக்கும் சித்தியே!
