News
JUNE 2025

குரு உபதேசம் 4425
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
சைவத் தலைவன் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்தாலன்றி எது உண்மை? எது பொய்? என்று புரியாது. மக்களை வழிநடத்த உண்மை அறிவே வேண்டும். ஆதலினாலே சைவத்தலைவன் முருகப்பெருமானை வணங்கிட உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். நாட்டினை வளமுள்ளதாக மாற்றிட முதலில் அதிகாரத்தில் உள்ளோரும், பதவியில் உள்ளோரும், நாட்டை வழிநடத்தும் அதிகாரிகளும், மக்களை காக்கின்ற பணிகளிலே, வழிநடத்தும் பணிகளிலே என நாட்டில் உள்ள அத்துணை அதிகாரிகளும் பாவசுமையற்றவராய் இருந்திடல் வேண்டும். குறைந்தபட்சம் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாதவராகவாவது இருந்திடல் வேண்டும். இல்லையெனில் நாட்டினை, மக்களை இயற்கையிடமிருந்து காப்பது என்பது கடினமாகும் என்பதை உணரலாம்.
……………..
இன்பமாம் முருகனின் இணையடி போற்றிட
துன்பமும் இல்லை துணையாம் இணையடி.
தஞ்சமாம் முருகனின் தாளினை போற்றிட
வஞ்சகம் இல்லை வாழ்வும் செம்மையே.
