News
JANUARY 2026
தினம் ஒரு அகவல் மகான் இராமலிங்க சுவாமிகள் 01
“அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை !!”
1. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
இறைவனின் உண்மை வடிவம் பேரொளியான அருட்பெருஞ்ஜோதியாகும். அந்த ஒளியின் தன்மை ஜீவகாருண்யமான பெருங்கருணையாகும்.
இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் கருணையோடு அன்பு செலுத்துவதே இறைவனின் தனித்தன்மையாகும். இதை மனிதன் உணர்ந்து கடைப்பிடித்து செயலாற்றுவதே மீண்டும் பிறவாமையான மரணமில்லாப் பெருவாழ்வு நிலைக்கு அழைத்துச் செல்லும்.
இறைவன் வடிவம் : பேரொளி (அருட்பெருஞ்ஜோதி).
இறைவன் தன்மை : எல்லையற்ற கருணை (தனிப்பெருங்கருணை).
அடையும் வழி : எல்லா உயிர்களிடத்தும் கருணையோடு
அன்பு செலுத்திச் செயலாற்றுதல் (ஜீவகாருண்ய ஒழுக்கம்).
இலக்கு : மீண்டும் பிறவாத, அழியாத, நித்தியமான
மரணமில்லாப் பெருவாழ்வு நிலை.


