News
APRIL 2026
தினம் ஒரு அகவல் 84
84. சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி
லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக எனத் தொழில்
ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி !
மனதில் உள்ள எல்லாத் துன்பங்களையும் முற்றிலுமாக நீக்கி, “நீயே சிவத்தின் நிலையைப் பெறுவாய்” என்று ஆணையிட்டதோடு, பிரபஞ்சத்தின் ஐந்து தொழில்களையும் எனக்குச் செய்ய அருளிய அருட்பெருஞ்ஜோதியே!


