News
AUGUST 2024
 
          குரு உபதேசம் – 4123
முருகா என்றால், பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், லோபித்தனம் நீங்கும், புலால் உண்ணுகின்ற பழக்கம் நீங்கி சைவ உணவை மேற்கொள்வார்கள். மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். ஆதித்தலைவன் முருகன் அருளால் இவ்வித பழக்கங்களிலிருந்து நீங்கியே பிறவிக்கு காரணமாயுள்ள இப்பழக்கங்களை ஒழித்து பிறவா நிலைதனை அடையும் மார்க்கத்தின் வழிதனிலே சென்று பிறவிப் பிணியையும் நீக்குவார்கள் முருகனின் பக்தர்கள்.
 
         
								 
								





 
															 
															