Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3369

வாழ்வில் சைவ உணவு மேற்கொண்டு, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று காலை பத்து நிமிடங்களும் மாலை பத்து நிமிடங்களும் முடிந்தால் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு பத்து நிமிடமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல இந்த மகாமந்திரத்தை ஜெபித்து வரவேண்டும்.

குரு உபதேசம் – 3368

அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம்.

குரு உபதேசம் – 3367

 செம்மையாம் அருணகிரி செப்பிய அலங்காரம் இம்மைக்கும் மறுமைக்கும் அதுவே துணை. போற்றினால் அது முற்றுப்பெற்ற முனிவனாய் இருக்கவேண்டும்  வணங்கினால் அது மரணத்தை வென்ற வல்லவனாய் இருக்க வேண்டும்.