News
MAY 2023
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்

அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள்
அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல்
இந்த என்னை கிளிக் செய்வதன் மூலம் அந்த எண்ணின் பாடலுக்கு செல்லலாம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்சிவ நெறி சார் அருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி
ஈனம்இன் றிகபரத்து இரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய அருட்பெருஞ்ஜோதி10
உரைமனங் கடந்த ஒருபெரு வெளிமேல்
அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
ஏறா நிலைமிசை ஏற்றி என்றனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ்ஜோதி
ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி20
ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி
ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி
ஒளவியம் ஆதி ஓர் ஆறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி
திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும் ஓர்
அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ்ஜோதி
சுத்த சன்மார்க்க சுகத்தனி வெளி எனும்
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி30
சுத்த மெய்ஞ்ஞானசுகோதய வெளிஎனும்
அத்து விதச்சபை அருட்பெருஞ்ஜோதி
தூய கலாந்தசுகந்தரு வெளிஎனும்
ஆய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
ஞானயோகாந்த நடத்திரு வெளிஎனும்
ஆனியில் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
விமலபோதாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும்
அமல சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
பெரிய நாதாந்தப் பெருநிலை வெளிஎனும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி40
சுத்த வேதாந்தத் துரியமேல் வெளிஎனும்
அத்தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
சுத்த சித்தாந்த சுகப்பெரு வெளிஎனும்
அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளி எனும்
அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி
தத்துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும்
அத்திரு அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி
சச்சிதானந்தத் தனிப்பர வெளிஎனும்
அச்சியல் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி50
சாகாக் கலை நிலை தழைத்திடு வெளிஎனும்
ஆகாயத் தொளிர் அருட்பெருஞ்ஜோதி
காரண காரியங் காட்டிடு வெளி எனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
ஏகம் அனேகம் எனப்பகர் வெளி எனும்
ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம்
ஆதாரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி
என்றாதிய சுடர்க்கு இயல்நிலையாய் அது
அன்றாம் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி60
சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி
முச்சுடர் களும் ஒளி முயங்குற அளித்தருள்
அச்சுடராம் சபை அருட்பெருஞ்ஜோதி
துரியமுங் கடந்த சுக பூரணந்தரும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி
எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள்
அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
இயற்கை உண்மையதாய் இயற்கையின்பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி70
சாக்கிரா தீதத் தனிவெளியாய் நிறைவு
ஆக்கிய சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளி எனும்
அட்டமேற் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
நவந்தவிர் நிலைகளும் நண்ணும் ஓர்நிலையாய்
அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய
அபய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
சேகர மாம்பல சித்திநிலைக்கு எலாம்
ஆகர மாம்சபை அருட்பெருஞ்ஜோதி80
மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம்
அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்
ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
வாரமும் அழியா வரமும் தருந்திரு
ஆரமு தாம்சபை அருட்பெருஞ்ஜோதி
இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள்
அழியாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
கற்பம் பலபல கழியினும் அழிவுறா
அற்புதம் தரும்சபை அருட்பெருஞ்ஜோதி90
எனைத்தும் துன்புஇலா இயலளித்து எண்ணிய
அனைத்தும் தருஞ்சபை அருட்பெருஞ்ஜோதி
பாணிப் பிலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி
ஆணிப்பொன் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி
எம்பலம் எனத்தொழுது ஏத்தினோர்க்கு அருள்புரி
அம்பலத்து ஆடல்செய் அருட்பெருஞ்ஜோதி
தம்பர ஞான சிதம்பரம் எனும்ஓர்
அம்பரத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி
எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி100
வாடுதல் நீக்கிய மணிமன்று இடையே
ஆடுதல் வல்ல அருட்பெருஞ்ஜோதி
நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒருபேர்
ஆடகப் பொது ஒளிர் அருட்பெருஞ்ஜோதி
கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர்
அற்புதச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
ஈன்ற நற்றாயினும் இனிய பெருந்தயவு
ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
இன்புறுநானுளத் தெண்ணியாங்கு எண்ணியாங்கு
அன்புறத் தருசபை அருட்பெருஞ்ஜோதி110
எம்மையும் என்னைவிட்டு இறையும் பிரியாது
அம்மை அப்பனுமாம் அருட்பெருஞ்ஜோதி
பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்
அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி
சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
தனுகர ணாதிகள் தாம்கடந்து அறியும் ஓர்
அனுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
உனும் உணர்வு உணர்வாய் உணர்வெலாம் கடந்த
அனுபவா தீத அருட்பெருஞ்ஜோதி120
பொதுவுணர்வு உணரும் போது அலால் பிரித்தே
அது எனில் தோன்றா அருட்பெருஞ்ஜோதி
உளவினில் அறிந்தால் ஒழியமற்று அளக்கின்
அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி
என்னையும் பணிகொண்டு இறவாவரம் அளித்து
அன்னையில் உவந்த அருட்பெருஞ்ஜோதி
ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த
ஆதியீறு இல்லா அருட்பெருஞ்ஜோதி
படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா
அடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி130
பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும்
அவனுக்கு அவனாம் அருட்பெருஞ்ஜோதி
திவள் உற்ற அண்டத் திரளின் எங்கெங்கும்
அவளுக்கு அவளாம் அருட்பெருஞ்ஜோதி
மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும்
அதனுக்கு அதுவாம் அருட்பெருஞ்ஜோதி
எப்பாலுமாய் வெளிஎல்லாம் கடந்துமேல்
அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
வல்லதாய் எல்லாம் ஆகிஎல்லாமும்
அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி140
எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய்கண்டோர்
அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று
ஆங்குற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்து
அத்திசை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும்
அத்தகை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி150
பெரிதினும் பெரிதாய் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி
இறவா வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய
அறவாழியாம் தனி அருட்பெருஞ்ஜோதி
நான் அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி160
எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை
அண்ணி உள்ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினைநீ அது
ஆயினை என்று அருள் அருட்பெருஞ்ஜோதி
எண்ணிற் செழுந்தேன் இனியதெள்ளமுதுஎன
அண்ணித்து இனிக்கும் அருட்பெருஞ்ஜோதி
சிந்தையில் துன்பொழி சிவம்பெறுக எனத் தொழில்
ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
எங்கெங்கு இருந்து உயிர் ஏதெது வேண்டினும்
அங்கங்கிருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி170
சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்
அகம்புறம் முற்றுமாம் அருட்பெருஞ்ஜோதி
சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும்
அகரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
உபரச வேதியின் உபயமும் பரமும்
அபரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
மந்தணம் இது என மறுஇலா மதியால்
அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ்ஜோதி
எம்புயக்கனி என எண்ணுவார் இதய
அம்புயத்து அமர்ந்த அருட்பெருஞ்ஜோதி180
செடியறுத் தேதிட தேகமும் போகமும்
அடியருக் கேதரும் அருட்பெருஞ்ஜோதி
துன்பு அறுத்துஒரு சிவதுரிய சுகந்தனை
அன்பருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி
பொதுவது சிறப்பது புதியது பழையது என்று
அதுவது வாய்த்திகழ் அருட்பெருஞ்ஜோதி
சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை
ஆதனத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி
ஓமயத் திருஉரு உவப்புடன் அளித்து எனக்கு
ஆமயத் தடைதவிர் அருட்பெருஞ்ஜோதி190
எப்படி எண்ணியது என்கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி
எத்தகை விழைந்தன என்மனம் இங்கு எனக்கு
அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி
இங்குறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு
அங்கையில் கனியாம் அருட்பெருஞ்ஜோதி
பார்உயப் புரிகெனப் பணித்து எனக்கு அருளிஎன்
ஆருயிர்க்குள் ஒளிர் அருட்பெருஞ்ஜோதி
தேவிஉற்று ஒளிர்தரு திருஉருஉடன் எனது
ஆவியில் கலந்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி200
எவ்வழி மெய்வழி என்பவே தாகமம்
அவ்வழி எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி
வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள்
ஐயறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி
சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே
ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி
சத்தியமாம் சிவ சத்தியை ஈந்து எனக்கு
அத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ்ஜோதி
சாவா நிலை இது தந்தனம் உனக்கே
ஆவா என அருள் அருட்பெருஞ்ஜோதி210
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி
மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல்
அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி
தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருள் இயல்
ஆசறத்தெரித்த அருட்பெருஞ்ஜோதி
காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின்
ஆட்டியல் புரியும் அருட்பெருஞ்ஜோதி
எங்குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு
அங்குலம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி220
எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி
கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
ஆறியல் என உரை அருட்பெருஞ்ஜோதி
எண் தர முடியாது இலங்கிய பற்பல
அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ்ஜோதி
சார் உயிர்க்கு எல்லாம் தாரக மாம்பரை
ஆருயிர்க்கு உயிராம் அருட்பெருஞ்ஜோதி
வாழி நீடூழி வாழியென்று ஓங்குபேர்
ஆழியை அளித்த அருட்பெருஞ்ஜோதி230
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்துஇதை
ஆய்ந்திடு என்றுரைத்த அருட்பெருஞ்ஜோதி
எச்சம் நினக்கிலை எல்லாம் பெறுக என்று
அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி
நீடுக நீயே நீள்உலகு அனைத்தும் நின்று
ஆடுக என்ற என் அருட்பெருஞ்ஜோதி
முத்திறல் வடிவமும் முன்னிஆங்கு எய்துறும்
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி240
கருமசித்திகளின் கலைபல கோடியும்
அரசுற எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
யோகசித்திகள் வகை உறுபல கோடியும்
ஆக என்று எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
ஞான சித்தியின் வகைநல்விரிவு அனைத்தும்
ஆனி இன்று எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
புடைஉறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவது என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி
முத்தி என்பது நிலைமுன் உறுசாதனம்
அத்தகவு என்றஎன் அருட்பெருஞ்ஜோதி250
சித்தி என்பதுநிலை சேர்ந்த அநுபவம்
அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி
ஏகசிற் சித்தியே இயல்உற அனேகம்
ஆகியது என்ற என் அருட்பெருஞ்ஜோதி
இன்பசித்தியின் இயல்ஏகம் அனேகம்
அன்பருக்கு என்ற என் அருட்பெருஞ்ஜோதி
எட்டு இரண்டு என்பன இயலும் முற்படியென
அட்டநின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி
இப்படி கண்டனை இனி உறுபடி எலாம்
அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி260
படிமுடி கடந்தனை பார் இதுபார் என
அடிமுடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி
ஜோதியுள் ஜோதியின் சொருபமே அந்தம்
ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி
இந்த சிற்ஜோதியின் இயல்உறு ஆதி
அந்தம் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி
ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி
நல்லமுது என் ஒரு நா உளம் காட்டி என்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி270
கற்பகம் என் உளங் கைதனில் கொடுத்தே
அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி
கதிர்நலம் என் இரு கண்களில் கொடுத்தே
அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி
அருள் ஒளி என்தனி அறிவினில் விரித்தே
அருள்நெறி விளக்கெனும் அருட்பெருஞ்ஜோதி
பரை ஒளி என்மனப் பதியினில் விரித்தே
அரசது இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி
வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி280
ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்
ஆரமுது எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று
ஆரியர் புகழ்தரும் அருட்பெருஞ்ஜோதி
பிறிவேது இனி உனைப் பிடித்தனம் உனக்குநம்
அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி
மாண்டு உழலாவகை வந்து இளங்காலையே
ஆண்டுகொண்டருளிய அருட்பெருஞ்ஜோதி290
பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து எனது
அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
வாய்தற்கு உரித்தெனும் மறை ஆகமங்களால்
ஆய்தற்கு அரிய அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் வல்லசித்தெனக்கு அளித்து எனக்கு உனை
அல்லாது இலையெனும் அருட்பெருஞ்ஜோதி
நவைஇலா உளத்தில் நாடிய நாடிய
அவைஎலாம் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி300
கூற்றுதைத்து என்பால் குற்றமுங் குணங்கொண்டு
ஆற்றல்மிக் களித்த அருட்பெருஞ்ஜோதி
நன்று அறிவு அறியா நாயினேன் தனையும்
அன்று வந்து ஆண்ட அருட்பெருஞ்ஜோதி
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி
எச்சோ தனைகளும் இயற்றாது எனக்கே
அச்சோ என்றருள் அருட்பெருஞ்ஜோதி310
ஏறாநிலைநடு ஏற்றி என்றனை ஈண்டு
ஆறாறு கடத்திய அருட்பெருஞ்ஜோதி
தாபத்துயரம் தவிர்த்து உலகுஉறும் எலா
ஆபத்தும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
மருட்பகை தவிர்த்துஎனை வாழ்வித்து எனக்கே
அருட்குரு ஆகிய அருட்பெருஞ்ஜோதி
உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி
இருளறுத்து என்உளத்து எண்ணியாங்கு அருளி
அருள்அமுது அளித்த அருட்பெருஞ்ஜோதி320
தெருள்நிலை இது எனத்தெருட்டி என்னுளத்திருந்து
அருள்நிலை காட்டிய அருட்பெருஞ்ஜோதி
பொருட்பதம் எல்லாம் புரிந்துமேல் ஓங்கிய
அருட்பதம் அளித்த அருட்பெருஞ்ஜோதி
உருள்சகடு ஆகிய உளஞ்சலி யாவகை
அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ்ஜோதி
வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள்
அருள் விளக்கேற்றிய அருட்பெருஞ்ஜோதி
சுருள்விரி வுடைமனச் சுழல் எலாம் அறுத்தே
அருள் ஒளி நிரப்பிய அருட்பெருஞ்ஜோதி330
விருப்போடு இகல்உறு வெறுப்பும் தவிர்த்தே
அருட்பேறு அளித்த அருட்பெருஞ்ஜோதி
அருட்பேர் தரித்து உலகனைத்தும் மலர்ந்திட
அருட்சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி
உலகெலாம் பரவஎன் உள்ளத்து இருந்தே
அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ்ஜோதி
01 ஐம்பூத இயல்வகை
விண்ணினுள் விண்ணாய் விண்நடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருட்பெருஞ்ஜோதி
விண்உறு விண்ணாய் விண்நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ்ஜோதி340
காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி
காற்றுறு காற்றாய்க் கால்நிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய்
அனல்உற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
அனல்உறும் அனலாய் அனல்நிலை அனலாய்
அனல்உற வயங்கும் அருட்பெருஞ்ஜோதி
புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனை என வயங்கும் அருட்பெருஞ்ஜோதி350
புனலுறு புனலாய்ப் புனல் நிலைப் புனலாய்
அனை எனப் பெருகும் அருட்பெருஞ்ஜோதி
புவியின் உட்புவியாய் புவி நடுப் புவியாய்
அவைதர வயங்கும் அருட்பெருஞ்ஜோதி
புவிஉறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
அவைகொள விரிந்த அருட்பெருஞ்ஜோதி
விண்நிலை சிவத்தின் வியன்நிலை அளவி
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வளிநிலை சத்தியின் வளர்நிலை அளவி
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி360
நெருப்பது நிலைநடுநிலை எலாம் அளவி
அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புவிநிலை சுத்தமாம் பொற்பதி அளவி
அவை உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
02 மண்ணியல் விரி
மண்ணினில் திண்மையை வகுத்து அதில்கிடக்கை
அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
மண்ணினில் பொன்மை வகுத்து அதில்ஐமையை
அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி370
மண்ணினில் ஐம்பூவகுத்து அதில் ஐந்திறம்
அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
மண்ணினில் நாற்றம் வகுத்து அதில் பல்வகை
அண்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
மண்ணினில் பற்பல வகைகருநிலை இயல்
அண்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
மண்ணினில் ஐந்தியல் வகுத்து அதில்பல்பயன்
அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
மண்ணிடை அடிநிலை வகுத்து அதில் பன்னிலை
அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி380
மண்ணினில் ஐந்தைந்துவகையும் கலந்துகொண்டு
அண்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
மண்இயற் சத்திகள் மண்செயற் சத்திகள்
அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
மண்உருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
மண்ஒளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
அண்கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி390
மண்நிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவா
அண்கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி
மண்ணினில் பொருள்பல வகைவிரி வெவ்வெறு
அண்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
மண்உறு நிலைபல வகுத்து அதில்செயல்பல
அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
மண்ணிடைப் பக்குவம் வகுத்து அதில்பயன்பல
அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி400
மண்இயல் பலபல வகுத்து அதில் பிறவும்
அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
03 நீரியல் விரி
நீரினில் தண்மையும் நிகழ்ஊ ரொழுக்கமும்
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரினில் பசுமையை நிறுத்தி அதில்பல
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறவியல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரினில் சுவைநிலை நிரைத்து அதில் பல்வகை
ஆர்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி410
நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடை நான்குஇயல் நிலவுவித்து அதில்பல
ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடை அடிநடு நிலை உறவகுத்து அனல்
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடை ஒளிஇயல் நிகழ்பல குணஇயல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி420
நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல
ஆர்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடை நிலைபல நிலைஉறு செயல்பல
ஆர்கொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீர்உறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆர்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
நீர்இயல் பலபல நிறைத்து அதில் பிறவும்
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி430
04 தீயியல் விரி
தீயினில் சூட்டியல் சேர்தரச்செலவு இயல்
ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தீயினில் வெண்மைத் திகழ்இயல் பலவா
ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடை பூஎலாம் திகழ்உறு திறம் எலாம்
ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடை ஒளியே திகழ் உற அமைத்து அதில்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடை அருநிலை திருநிலை கருநிலை
ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி440
தீயிடை மூவியல் செறிவித்து அதில்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல
ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்
ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி450
தீயிடை உயிர்பல திகழ்உறு பொருள்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தீயினில் பக்குவம் சேர்குணம் இயல்குணம்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுஇயல்
ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தீஇயல் பலபல செறித்து அதில்பலவும்
ஆய்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி460
05 காற்றியல் விரி
காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல்
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றிடைப்பூ இயல் கருதுறு திறவியல்
ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றினில் பெருநிலை கருநிலை அளவில
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றிடை ஈரியல் காட்டி அதில்பல
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி470
காற்றினில் இடைநடு கடைநடு அகம்புறம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றிடைச் சத்திகள் கணக்கில உலப்பில
ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றிடை உயிர்பல கதிபல கலைபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி480
காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும்
ஆற்றுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றிடை உணரியல் கருதியல் ஆதிய
ஆற்றுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றிடைச் செயல் எலாம் கருதிய பயன் எலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றினில் பக்குவக் கதியெலாம் விளைவித்து
ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காற்றினில் காலம் கருதுறு வகைஎலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி490
காற்றியல் பலபல கணித்து அதில்பிறவும்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
06 வெளி இயல் விரி
வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியினில் ஒலிநிறை வியன்நிலை அனைத்தும்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை
அளிகொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி500
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கும் அருட்பெருஞ்ஜோதி
வெளியினில் சத்திகள் வியப்புற சத்தர்கள்
அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல
அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடைபலவே விரித்து அதில் பற்பல
அளிதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வெளியிடை உயிர்இயல் வித்தியல் சித்தியல்
அளிபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி510
வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும்
அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
07 அகப்புற விரி
புறநடு வொடுகடை புணர்ப்பித்து ஒருமுதல்
அறம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புறந்தலை நடுவொடு புணர்ப்பித்து ஒரு கடை
அறம்பெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல்
அகப்பட வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை
அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி520
கருது அக நடுவொடு கடை அணைந்து அகமுதல்
அருள்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
தணிஅக நடுவொடு தலைஅணைந்து அகக்கடை
அணிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகநடு புறக்கடை அணைந்து அகப்புறமுதல்
அகம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகநடு புறத்தலை அணைந்து அகப்புறக்கடை
அகலிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகநடு அதனால் அகப்புற நடுவை
அகம்அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி530
அகப்புற நடுவால் அணிபுற நடுவை
அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி
புறநடு அதனால் புறப்புற நடுவை
அறம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புகல் அரும் அகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புற
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி540
அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்
அகத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகக்கடை முதல் புணர்ப்பு அதனால் அகக்கணம்
அகத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
08 ஐம்பூதக் கலப்பின் விரி
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும்
ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி550
புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும்
அனல்மேல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பகுதிவான் வெளியில் படர்ந்தமா பூத
அகல்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி
09 வெளி வகை விரி
உயிர்வெளி இடையே உரைக்கரும் பகுதி
அயவெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில்
அயல் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த
அலர்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி560
சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பரவெளி அதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பரம்பரவெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில்
அருள்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி570
குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
மனமுதல் கருவிகள் மன்உயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
இவ்வெளி எல்லாம் இலங்க அண்டங்கள்
அவ்வயின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி580
10 அண்டப் பகுதி விரி
ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை
அருள்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
காவல்செய் தலைவரைக் காவல் அண்டங்களை
ஆவகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி
அழித்தல்செய் தலைவரை அவர் அண்டங்களை
அழுக்கற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை
அறத்தொடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி590
தெளிவுசெய் தலைவரைத் திகழும் அண்டங்களை
அளிபெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை
அந்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை
ஆங்காக அமைத்த அருட்பெருஞ்ஜோதி
சத்தத் தலைவரைச் சாற்றும் அண்டங்களை
அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நாதமாம் பிரமமும் நாத அண்டங்களும்
ஆதரம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி600
பகர்பரா சத்தியைப் பதியும் அண்டங்களை
அகம் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பரசிவ பதியைப் பரசிவாண்டங்களை
அரசுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
எண்ணில்பல் சத்தியை எண்ணில் அண்டங்களை
அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அளவில்பல் சத்தரை அளவில் அண்டங்களை
அளவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
14 வித்தும் விளைவும்
வித்தியல் ஒன்றாய் விளைவியல் பலவா
அத்தகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி610
விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க
அளவு செய்து அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வித்தும்பதமும் விளை உப கரிப்பும்
அத்திறல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அத்தக அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
அத்திறம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
அளைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி620
முளையதின் முளையும் முளையினுள் முளையும்
அளைதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
பதமதில் பதமும் பதத்தினுள் பதமும்
அதிர்வற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
15 ஒற்றுமை வேற்றுமை இயல்
ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்
அற்றென வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பொருள்நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய
அருள்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி630
உறவினில் உறவும் உறவினில் பகையும்
அறன்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பகையினில் பகையும் பகையினில் உறவும்
அகைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும்
ஆதியும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
துணையும் நிமித்தமும் துலங்கதின் அதுவும்
அணைவுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உருவதின் உருவும் உருவினுள் உருவும்
அருள்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி640
அருவினுள் அருவும் அருவதில் அருவும்
அருள்இயல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
கரணமும் இடமும் கலைமுதல் அணையும் ஓர்
அரண்நிலை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உருவதில் அருவும் அருவதில் உருவும்
அருள்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வண்ணமும் வடிவும் மயங்கிய வகைபல
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்
அறிதர வகுத்த அருட்பெருஞ்ஜோதி650
பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்
அருள்நிலை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்
அண்மையில் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும்
அன்மை அற்றமைத்த அருட்பெருஞ்ஜோதி
அடியினுள் அடியும் அடியிடை அடியும்
அடிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
நடுவினுள் நடுவும் நடுவதில் நடுவும்
அடர்வுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி660
முடியினுள் முடியும் முடியினில் முடியும்
அடர்தர அமைத்த அருட்பெருஞ்ஜோதி
16 அகப் புறப்பூ
அகப்பூ அகவுறுப் பாக்க அதற்கவை
அகத்தே வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புறப்பூ புறத்தில் புனையுறு வாக்கிட
அறத்துடன் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அகப்புறப் பூஅகப் புறஉறுப் பியற்றிட
அகத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
புறப்புறப் பூவதில் புறப்புற உறுப்புற
அறத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி670
17 நால்வகைத் தோற்ற விரி
பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ்ஜோதி
ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல
அசலற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
அறிவொரு வகைமுதல் ஐவகை அறுவகை
அறிதர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன்உற
அவ்வாறு அமைத்த அருட்பெருஞ்ஜோதி680
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
18 ஆண் பெண் இயல்
பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
பெண்இயல் ஆணும் ஆண்இயல் பெண்ணும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி690
பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும்
அண்டுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பெண்இயல் மனமும் ஆண்இயல் அறிவும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
தனித்தனி வடிவினும் தக்க ஆண்பெண் இயல்
அனைத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உனற்கரும் உயிர்உள உடல்உள உலகுள
அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும்
ஆவகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி700
பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
19 காத்தருள் விரி
தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை
அட்டமே காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்
அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
வேர்வுற உதித்த மிகும் உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி710
உடல்உறு பிணியால் உயிர் உடல் கெடாவகை
அடல்உறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
சிசு முதல் பருவச் செயல்களின் உயிர்களை
அசைவறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
உயிர்உறும் உடலையும் உடல்உறும் உயிரையும்
அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
முச்சுடர் ஆதியால் எச்சக உயிரையும்
அச்சறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி720
வான்முகில் சத்தியால் மழைபொழி வித்து உயிர்
ஆனறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
இன்புறு சத்தியால் எழில்மழை பொழிவித்து
அன்புறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
எண்இயல் சத்தியால் எல்லா உலகினும்
அண்உயிர் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
அண்டப் புறப்புற அமுதம் பொழிந்து உயிர்
அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
தேவரை எல்லாம் திகழ்புற அமுதளித்து
ஆவகை காத்தருள் அருட்பெருஞ்ஜோதி730
அகப்புற அமுதளித்து ஐவர் ஆதிகளை
அகப்படக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
தருமக அமுதால் சத்தி சத்தர்களை
அருளினிற் காக்கும் அருட்பெருஞ்ஜோதி
காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும்
ஆலுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை
அச்சறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
போகமும் களிப்பும் பொருந்துவித்து உயிர்களை
ஆகமுட் காக்கும் அருட்பெருஞ்ஜோதி740
கலையறிவு அளித்துக் களிப்பினில் உயிரெலாம்
அலைவறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
விடய நிகழ்ச்சியால் மிகுமுயிர் அனைத்தையும்
அடைவுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
துன்பளித்து ஆங்கே சுகமளித்து உயிர்களை
அன்புறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
கரணேந் தியத்தால் களிப்புற உயிர்களை
அரண்நேர்ந்து அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி
எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு
அத்தகை அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி750
எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு
அப்படி அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி
ஏங்காது உயிர்த்திரள் எங்கெங்கு இருந்தன
ஆங்காங்கு அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி
சொல்லுறும் அசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
அல்லலில் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
சுத்தமும் அசுத்தமும் தோயுயிர்க் கிருமையின்
அத்தகை காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
வாய்ந்திடும் சுத்த வகையுயிர்க்கு ஒருமையின்
ஆய்ந்துறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி760
எவையெலாம் எவையெலாம் ஈண்டின ஈண்டின
அவையெலாம் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
20 அடக்கியருள் விரி
அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்
அண்டற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
அண்டற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
உயிருறும் மாயையின் உறுவிரிவு அனைத்தும்
அயிரற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
உயிருறும் இருவினை யுறுவிரிவு அனைத்தும்
அயர்வற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி720
காமப் புடைப்புயிர் கண் தொடராவகை
ஆமற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம்
அங்கற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு
அதம்பெற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும்
அடர்பற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
சுத்தமும் அசுத்தமும் தோய்ந்தவா தனைகளை
அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி730
நால்வயிற் றுரிசும் நண்ணுயிர் ஆதியில்
ஆலற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
நால்வயிற் படைப்பும் நால்வயிற் காப்பும்
ஆலற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
மூவிடத்து இருமையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிடத்து அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும்
அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி740
சுத்தமா நிலையில் சூழுறு விரிவை
அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
21 திரை விளக்கம்
கரைவின்மா மாயைக் கரும்பெரும் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பேருறு நீலப்பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி750
பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
கலப்புத் திரையால் கருது அனுபவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி760
திரைமறைப்பெல்லாம் தீர்த்து ஆங்காங்கே
அரசுறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி
22 அருளில் தெருட்டல்
தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின்
ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி
சுத்தமா மாயைத் தொடர்பறுத்து அருளை
அத்தகை காட்டும் அருட்பெருஞ்ஜோதி
எனைத்து ஆணவமுதல் எல்லாம் தவிர்த்தே
அனுக்கிர கம்புரி அருட்பெருஞ்ஜோதி
விடய மறைப்பெல்லாம் விடுவித்து உயிர்களை
அடைவுறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி760
சொருப மறைப்பெலாம் தொலைப்பித்து உயிர்களை
அருளினில் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி
மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே
அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி
எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே
அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி
கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி
சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி770
சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி
படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ்ஜோதி
காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ்ஜோதி
அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும்
அடர்ப்பற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை
அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி780
தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை
அருள்திறம் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி
ஐந்தொழில் ஆதிசெய் ஐவர் ஆதிகளை
ஐந்தொழில் ஆதிசெய் அருட்பெருஞ்ஜோதி
இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்
அறந்தலை அளித்த அருட்பெருஞ்ஜோதி
செத்தவர் எல்லாம் சிரித்து ஆங் கெழுதிறல்
அத்தகை காட்டிய அருட்பெருஞ்ஜோதி
இறந்தவர் எழுகவென்று எண்ணிஆங் கெழுப்பிட
அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி790
செத்தவர் எழுகெனச் செப்பிஆங் கெழுப்பிட
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
சித்தெலாம் வல்ல திறலளித்து எனக்கே
அத்தனென்று ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி
23 தனிப் பொருள்
ஒன்றது இரண்டது ஒன்றின் இரண்டது
ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே
ஒன்றல இரண்டல ஒன்றின் இரண்டல
ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே
ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில
ஒன்றற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே800
24 மெய்ப் பொருள்
களங்கநீத்து உலகம் களிப்புற மெய்ந்நெறி
விளங்க என்னுள்ளே விளங்கு மெய்ப்பொருளே
மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கும் ஒருமை மெய்ப்பொருளே
எழுநிலை மிசையே இன்புறு ஆகி
வழுநிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே
நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமயம் ஆகித் திகழ்ந்த மெய்ப்பொருளே
ஏகா தசநிலை யாதுஅதி னடுவே
ஏகா தனமிசை இருந்த மெய்ப்பொருளே810
திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரைஓ தருசுக வாழ்க்கை மெய்ப்பொருளே
ஈரெண் ணிலைஎன இயம்புமேல் நிலையில்
பூரண சுகமாய்ப் பொருந்து மெய்ப்பொருளே
எல்லாநிலைகளும் இசைந்து ஆங்காங்கே
எல்லாம் ஆகி இலங்கு மெய்ப்பொருளே
மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதி உண்மையதாய் அமர்ந்த மெய்ப்பொருளே
தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கும் ஒரு தனிப்பொருளே820
அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்
உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே
அருவினுள் அருவாய் அருவரு அருவாய்
உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே
அலகிலாச் சித்தாய் அதுநிலை அதுவாய்
உலகெலாம் விளங்கும் ஒருதனிப்பொருளே
பொருளினுள் பொருளாய்ப்பொருளது பொருளாய்
ஒருமையின் விளங்கும் ஒருதனிப்பொருளே830
ஆடுறு சித்திகள் அறுபத்துநான்கெழு
கோடியும் விளங்கக் குலவு மெய்ப்பொருளே
கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
ஆட்டுற விளங்கும் அரும்பெரும்பொருளே
அறிவுறு சித்திகள் அனந்த கோடிகளும்
பிறிவற விளக்கும் பெரும் தனிப்பொருளே
வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க
ஆடல்செய் தருளும் அரும்பெரும் பொருளே
பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க
உற்றருள் ஆடல்செய் ஒரு தனிப்பொருளே840
25 பராபர இயல்
பரத்தினில் பரமே பரத்தின்மேற்பரமே
பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே
பரம்பெறும் பரமே பரம்தரும் பரமே
பரம்பதம் பரமே பரம் சிதம்பரமே
பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
பரஞ்சுக பரமே பரம்சிவ பரமே
பரங்கொள் சிற்பரமே பரஞ்செய் தற்பரமே
தரங்கொள் பொற்பரமே தனிப்பெரும்பரமே
வரம்பரா பரமே வணம்பரா பரமே
பரம்பரா பரமே பதம்பரா பரமே850
26 பதவியல்
சத்தியபதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே
தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுக பதமே
தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
அம்பரம் பதமே அருட்பரம் பதமே
தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே
நவந்தரு பதமே நடந்தரு பதமே
சிவந்தரு பதமே சிவசிவ பதமே860
27 சிவ ரகசியம்
பிரமமெய்க் கதியே பிரமமெய்ப்பதியே
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே
பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
பரமமே பரம பதந்தரும் சிவமே
அவனோடு அவளாய் அதுவாய் அலவாய்
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
எம்பொருளாகி எமக்கருள் புரியும்
செம்பொருளாகிய சிவமே சிவமே
ஒருநிலை இதுவே உயர்நிலை யெனுமொரு
திருநிலை மேவிய சிவமே சிவமே870
மெய்வைத்து அழியா வெறு வெளி நடுவுறு
தெய்வப் பதியாம் சிவமே சிவமே
புரை தவிர்த்து எனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே
கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே
அருளமு தெனக்கே அளித்தருள் நெறிவாய்த்
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே
சத்தெலாம் ஆகியும் தானொரு தானாம்
சித்தெலாம் வல்லதோர் திருவருட்சிவமே880
எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே
யாரே என்னினும் இரங்குகின் றார்க்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே
பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தா தெனையருள்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
கொல்லா நெறியே குருவருள் நெறியெனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே
உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே890
பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே
உயிருள்யாம் எம்முள் உயிர் இவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்த மெய்ச்சிவமே
இயலருள் ஒளிஓர் ஏகதே சத்தினாம்
உயிரொளிகாண்க வென்றுரைத்த மெய்ச்சிவமே
28 திருவருள் வல்லபம்
அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள்நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை
அருளுற முயல்கவென்று அருளியசிவமே900
அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம்
இருள்நெறி யென எனக்கு இயம்பிய சிவமே
அருள்பெறில் துரும்பும் ஓர்ஐந்தொழில் புரியும்
தெருளிது எனவே செப்பிய சிவமே
அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம்
மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே
அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச்சிவமே
அருட்பேறு அதுவே அரும்பெறல் பெரும்பேறு
இருட்பேறு அறுக்கும் என்றியம் பியசிவமே910
அருள்தனி வல்லபம் அதுவே எலாஞ்செய்
பொருள்தனிச் சித்தெனப் புகன்ற மெய்ச்சிவமே
அருளறியார் தமை அறியார் எம்மையும்
பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே
அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை
பொருள்நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே
அருள் வடிவு அதுவே அழியாத் தனிவடிவு
அருள்பெற முயலுகென்று அருளிய சிவமே
அருளே நம்மியல் அருளே நம்முரு
அருளே நம்வடிவாம் என்ற சிவமே920
அருளே நம்மடி அருளே நம்முடி
அருளே நம்நடு வாம் என்ற சிவமே
அருளே நம்மறிவு அருளே நம்மனம்
அருளே நம்குணமாம் என்ற சிவமே
அருளே நம்பதி அருளே நம்பதம்
அருளே நம்மிடமாம் என்ற சிவமே
அருளே நம்துணை அருளே நம்தொழில்
அருளே நம் விருப்பாம் என்ற சிவமே
அருளே நம்பொருள் அருளே நம் ஒளி
அருளே நாம் அறிவாயென்ற சிவமே930
அருளே நம்குலம் அருளே நம்இனம்
அருளே நாம் அறிவாயென்ற சிவமே
அருளே நம்சுகம் அருளே நம்பெயர்
அருளே நாம்அறி வாயென்ற சிவமே
அருளொளி அடைந்தனை அருளமுது உண்டனை
அருண்மதி வாழ்கவென்று அருளிய சிவமே
அருள்நிலை பெற்றனை அருள்வடிவு உற்றனை
அருளரசு இயற்றுகென்று அருளிய சிவமே
29 சிவபதி
உள்ளகத் தமர்ந்தெனது உயிரிற் கலந்தருள்
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே940
நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத்
தகவொடு காக்கும் தனிச் சிவபதியே
சுத்த சன்மார்க்க சுகநிலை தனிலெனைச்
சத்தியன் ஆக்கிய தனிச் சிவபதியே
ஐவரும் காண்டற்கு அரும் பெரும்பொருளென்
கைவரப்புரிந்த கதிசிவ பதியே
துன்பம் தொலைத்தருள் ஜோதியால் நிறைந்த
இன்பம் எனக்கருள் எழிற் சிவபதியே
சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய ஒரு சிவபதியே950
கையறவு அனைத்துங் கடிந்து எனைத்தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே
இன்புறச் சிறியேன் எண்ணுதோ றெண்ணுதோ
றன்பொடுஎன் கண்ணுறும் அருட்சிவபதியே
பிழையெலாம் பொறுத்து எனுள்பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர் சிவபதியே
உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது
குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே
30 அருள் குரு
பரமுடன் அபரம்பகர்நிலை இவையெனத்
திரமுற அருளிய திருவருட் குருவே960
மதிநிலை இரவியின் வளர்நிலை அனலின்
திதிநிலை அனைத்தும் தெரித்த சற்குருவே
கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும்
குணமுறத் தெரித்து உட்குலவு சற்குருவே
பதிநிலை பசுநிலை பாசநிலை எலாம்
மதியுறத் தெரித்து உள்வயங்கு சற்குருவே
பிரம ரகசியம் பேசி என்னுளத்தே
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே
பரம ரகசியம் பகர்ந்து எனதுளத்தே
வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே970
சிவரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே
நவநிலை காட்டிய ஞான சற்குருவே
சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும்
அத்தகை தெரித்த அருட்சிவ குருவே
அறிபவை எல்லாம் அறிவித்து என்னுள்ளே
பிறிவற விளங்கும் பெரிய சற்குருவே
கேட்பவை எல்லாம் கேட்பித்து எனுள்ளே
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே
காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே
மாண்பதம் அளித்து வயங்கு சற்குருவே980
செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே
உய்பவை அளித்தெனுள் ஓங்கு சற்குருவே
உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள்
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே
சாகாக் கல்வியின் தரமெலாம் கற்பித்து
ஏகாக் கரப்பொருள் ஈந்த சற்குருவே
சத்திய மாம்சிவ சித்திகள் அனைத்தையும்
மெய்த்தகை அளித்தெனுள் விளங்கு சற்குருவே
எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம்
வல்லான் எனவெனை வைத்த சற்குருவே990
31 உயிர்த் தாய்
சீருற அருளாம் தேசுற வழியாப்
பேருற என்னைப் பெற்ற நற்றாயே
பொருந்திய அருட்பெரும் போகமே உறுகெனப்
பெருந்தயவால் எனைப் பெற்ற நற்றாயே
ஆன்ற சன்மார்க்கம் அணிபெற எனைத்தான்
ஈன்றமுது அளித்த இனிய நற்றாயே
பசித்திடுதோறும் என்பால் அணைந்து அருளால்
வசித்தமுது அருள்புரி வாய்மை நற்றாயே
தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த ஒருமை நற்றாயே1000
அருளமு தேமுதல் ஐவகை அமுதமும்
தெருளுற எனக்கருள் செல்வ நற்றாயே
இயலமு தேமுதல் எழுவகை அமுதமும்
உயலுற எனக்கருள் உரிய நற்றாயே
நண்புறும் எண்வகை நவவகை அமுதமும்
பண்புற எனக்கருள் பண்புடைத்தாயே
மற்றுள அமுத வகையெலாம் எனக்கே
உற்றுணவு அளித்தருள் ஓங்கு நற்றாயே
கலக்கமும் அச்சமும் கடிந்து என துளத்தே
அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத்தாயே1010
துய்ப்பினி லனைத்தும் சுகம்பெற அளித்தெனக்கு
எய்ப்பெலாம் தவிர்த்த இன்புடைத்தாயே
சித்திகளெல்லாம் தெளிந்திட எனக்கே
சத்தியை அளித்த தயவுடைத் தாயே
சத்தினி பாதந் தனையளித்து எனைமேல்
வைத்தமு தளித்த மரபுடைத்தாயே
சத்தி சத்தர்கள்எலாம் சார்ந்தெனது ஏவல்செய்
சித்தியை அளித்த தெய்வ நற்றாயே
தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே
என்னை மேலேற்றிய இனிய நற்றாயே1020
வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே
அளித்தளித்து இன்புசெய் அன்புடைத் தாயே
எண்அகத் தொடுபுறத்து என்னைஎஞ் ஞான்றும்
கண்ணெனக் காக்கும் கருணை நற்றாயே
இன்னருள் அமுதளித்து இறவாத் திறல்புரிந்து
என்னை வளர்த்திடும் இன்புடைத்தாயே
என்னுடல் என்னுயிர் என்னறிவு எல்லாம்
தன்னவென் றாக்கிய தயவுடைத்தாயே
தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத்
தரியாது அணைத்த தயவுடைத் தாயே1030
சினமுதல் அனைத்தையும் தீர்த்தெனை நனவினும்
கனவினும் பிரியாக் கருணை நற்றாயே
தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும்
ஏக்கமும் நீக்கிய என் தனித் தாயே
32 உயிர்த் தந்தை
துன்பெலாந் தவிர்த்துளே அன்பெலாம் நிரம்ப
இன்பெலாம் அளித்த என்தனித் தந்தையே
எல்லா நன்மையும் என்றனுக்கு அளித்த
எல்லாம் வல்லசித்து என்தனித் தந்தையே
நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய
தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே1040
அறிவிலாப் பருவத்து அறிவெனக்கு அளித்தே
பிறிவிலாது அமர்ந்த பேரருள் தந்தையே
புன்னிகர் இல்லேன் பொருட்டு இவண் அடைந்த
தன்னிகர் இல்லாத் தனிப்பெருந் தந்தையே
அகத்தினும் புறத்தினும் அமர்ந்த அருட்ஜோதி
சகத்தினில் எனக்கே தந்த மெய்த்தந்தையே
இணையிலாக் களிப்புற்று இருந்திட எனக்கே
துணையடி சென்னியில் சூட்டிய தந்தையே
ஆதியீறு அறியா அருளரசு ஆட்சியில்
ஜோதிமா மகுடம் சூட்டிய தந்தையே1050
எட்டிரண்டு அறிவித்து எனைத்தனி ஏற்றிப்
பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே
தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
தன்பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில்
என்பொருள் ஆக்கிய என்றனித் தந்தையே
தன்வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில்
என்வடிவு ஆக்கிய என்றனித் தந்தையே
தன்சித் தனைத்தையும் தன் சமுகத்தினில்
என்சித் தாக்கிய என்றனித் தந்தையே1060
தன்வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும்
என்வசம் ஆக்கிய என்னுயிர்த் தந்தையே
தன்கையில் பிடித்த தனி அருட்ஜோதியை
என்கையில் கொடுத்த என்றனித் தந்தையே
தன்னையும் தன்னருள் சத்தியின் வடிவையும்
என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே
தன்இயல் என்இயல் தன்செயல் என்செயல்
என்ன இயற்றிய என்றனித் தந்தையே
தன்உரு என்உரு தன்உரை என்உரை
என்ன இயற்றிய என்றனித் தந்தையே1070
சதுரப் பேரருள் தனிப்பெரும் தலைவனென்று
எதிரற்று ஓங்கிய என்னுடைத் தந்தையே
மனவாக்கறியா வரைப்பினில் எனக்கே
இனவாக் கருளிய என்னுயிர்த் தந்தையே
உணர்ந்துணர்ந்து உணரினும் உணராப் பெருநிலை
அணைந்திட எனக்கே அருளிய தந்தையே
துரிய வாழ்வுடனே சுகபூரணமெனும்
பெரிய வாழ்வளித்த பெருந்தனித் தந்தையே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
பேறளித்து ஆண்ட பெருந்தகைத் தந்தையே1080
எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிதாம்
அவ்வகை நிலையெனக் களித்த நற்றந்தையே
இனிப் பிறவாநெறி எனக்களித்து அருளிய
தனிப்பெரும் தலைமைத் தந்தையே தந்தையே
33 உயிர்த் துணை
பற்றயர்ந்து அஞ்சிய பரிவுகண் டணைந்து எனைச்
சற்றுமஞ்சேல் எனத் தாங்கிய துணையே
தளர்ந்தவத் தருணம்என் தளர்வெலாம் தவிர்த்துட்
கிளர்ந்திட எனக்குக் கிடைத்த மெய்த்துணையே
துறையிது வழியிது துணிவிது நீசெயும்
முறையிது எனவே மொழிந்த மெய்த்துணையே1050
எங்குறு தீமையும் எனைத்தொடரா வகை
கங்குலும் பகலும் மெய்க்காவல் செய்துணையே
வேண்டிய வேண்டிய விருப்பெலாம் எனக்கே
ஈண்டிருந்து அருள்புரி என்னுயிர்த் துணையே
இகத்தினும் பரத்தினும் எனக்குஇடர் சாராது
அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய்த்துணையே
34 உயிர் நட்பு
அயர்வற எனக்கே அருட்துணை யாகிஎன்
உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே
அன்பினில் கலந்து எனதறிவினில் பயின்றே
இன்பினில் அளைந்தஎன் இன்னுயிர் நட்பே1060
நான் புரிவன எலாம்தான் புரிந்து எனக்கே
வான்பதம் அளிக்க வாய்த்த நன்நட்பே
உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு
எள்ளுறு நெய்யில் என்உள்ளுறும் நட்பே
செற்றமும் தீமையும் தீர்த்துநான் செய்த
குற்றமும் குணமாக் கொண்ட என்நட்பே
குணங்குறி முதலிய குறித்திடாது எனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் நட்பே1070
சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும்
கவலையும் தவிர்த்தெனைக் கலந்தநன் நட்பே
35 உயிர் உறவு
களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்கு
இளைப்பறிந்து உதவிய என்னுயிர் உறவே
தன்னைத் தழுவுறு தரஞ்சிறிது அறியா
என்னைத் தழுவிய என்னுயிர் உறவே
மனக்குறை நீக்கிநல் வாழ்வளித்து என்றும்
எனக்குறவு ஆகிய என்னுயிர் உறவே
துன்னும் அனாதியே சூழ்ந்துஎனைப் பிரியாது
என்னுறவு ஆகிய என்னுயிர் உறவே1080
36 இயற்கை உண்மை (சத்து)
என்றுமோர் நிலையாய் என்றுமோர் இயலாய்
என்றும்உள் ளதுவாம் என்தனிச் சத்தே
அனைத்துலகு அவைகளும் ஆங்காங்கு உணரினும்
இனைத்தென அறியா என்தனிச் சத்தே
பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
இதுவெனற்கு அரிதாம் என்தனிச் சத்தே
ஆகம முடிகளும் அவைபுகல் முடிகளும்
ஏகுதற்கு அரிதாம் என்தனிச் சத்தே
சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே
இத்தகை வழுத்தும் என்தனிச் சத்தே1090
துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருளென
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய்ச்சத்தே
அன்றதன் அப்பால் அதன்பரத்து அதுதான்
என்றிட நிறைந்த என்தனிச் சத்தே
37 இயற்கை விளக்கம் (சித்து)
என்றும் உள்ளதுவாய் எங்கும்ஓர் நிறைவாய்
என்றும் விளங்கிடும் என்தனிச் சித்தே
சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே
தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே1100
படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்
இடிவற விளங்கிடும் என்தனிச் சித்தே
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளக்கிடும் என்தனிச் சித்தே
உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய்
இயலுற விளக்கிடும் என்தனிச் சித்தே
அறிவவை பலவாய் அறிவன பலவாய்
எறிவற விளக்கிடும் என்தனிச் சித்தே
நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவற விளக்கிடும் என்தனிச் சித்தே1110
காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடும் என்தனிச் சித்தே
செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்
எய்வற விளக்கிடும் என்தனிச் சித்தே
அண்டசராசரம் அனைத்தையும் பிறவையும்
எண்தர விளக்கும் என்தனிச் சித்தே
எல்லாம் வல்லசித்து எனமறை புகன்றிட
எல்லாம் விளக்கிடும் என்தனிச் சித்தே
38 இயற்கை இன்பம் (ஆனந்தம்)
ஒன்றதில் ஒன்றென்று உரைக்கவும் படாதாய்
என்றும் ஓர் படித்தாம் என்தனி இன்பே 1120
இதுஅது என்னா இயலுடை அதுவாய்
எதிர்அற நிறைந்த என்தனி இன்பே
ஆக்குறு மவத்தைகள் அனைத்தையும் கடந்துமேல்
ஏக்கற நிறைந்த என்தனி இன்பே
அறிவுக்கு அறிவினில் அதுஅது அதுவாய்
எறிவற்று ஓங்கிய என்தனி இன்பே
விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை
இடையிடை ஓங்கிய என்தனி இன்பே
இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும்
எம்மையும் நிரம்பிடும் என்தனி இன்பே1130
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத் தவர்க்குமாம் என்தனி இன்பே
எல்லாநிலைகளின் எல்லா உயிருறும்
எல்லா இன்புமாம் என்தனி இன்பே
39 அருள் அமுதம்
கரும்புறு சாறும் கனிந்தமுக் கனியின்
விரும்புறும் இரதமும் மிக்கதீம் பாலும்
குணங்கொள் கோல்தேனும் கூட்டி ஒன்றாக்கி
மணங்கொளப் பதஞ்செய் வகை உற இயற்றிய
உணவெனப் பல்கால் உரைக்கினும் நிகரா
வணமுறும் இன்ப மயமே அதுவாய்க்
கலந்து அறிவுருவாய்க் கருதுதற்கு அரிதாய்
நலந்தரு விளக்கமும் நவிலரும் தண்மையும்
உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள்
உள்ளதாய் என்றன் உயிருளம் உடம்புடன்
எல்லாம் இனிப்ப இயலுறு சுவையளித்து
எல்லாம் வல்லசித்து இயற்கைய தாகிச்
சாகா வரமும் தனித்த பேரறிவும்
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத் தருந்திறல் வண்மையதாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கிமேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்தென தறிவாம் கனமேற் சபைநடு
நடந்திகழ் கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே
சத்திய அமுதே தனித்திரு அமுதே
நித்திய அமுதே நிறைசிவ அமுதே
சச்சி தானந்தத் தனி முதல் அமுதே
மெய்ச்சிதா காச விளைவருள் அமுதே
ஆனந்த அமுதே அருளொளி அமுதே
தானந்தம் இல்லாத் தத்துவ அமுதே
நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே
சிவநிலை தனிலே திரண்ட உள்ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர் கடவுள் வானமுதே
அகம்புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்தநான்கு இடத்தும் ஓங்கிய அமுதே
பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுதல் ஆய சிதம்பர அமுதே
உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திறல் அற்புத அமுதே
40 மணி
அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே
பிண்டமும் அதிலுறு பிண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பராபர மணியே
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற
அனைத்தையும் தரும் ஓர் அரும்பெறல் மணியே
விண்பதம் அனைத்தும் மேல்பதம் முழுவதும்
கண்பெற நடத்தும் ககனமா மணியே
பார்பதம் அனைத்தும் பகரடி முழுவதும்
சார்புற நடத்தும் சரவொளி மணியே1180
அண்டகோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக்
கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே
சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்
விராவி யுள்விளங்கும் வித்தக மணியே
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்
தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே
தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா
வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
நவமணி முதலிய நலமெலாம் தருமொரு
சிவமணி எனும் அருட்செல்வமா மணியே1190
41 மந்திரம்
வான் பெறற்கு அரியவகையெலாம் விரைந்து
நான் பெறவளித்த நாத மந்திரமே
கற்பம் பலபல கழியினும் அழியாப்
பொற்புற அளித்த புனித மந்திரமே
அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்
வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே
ஐந்தென எட்டென ஆறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியு மந்திரமே
வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்
ஓதநின்று உலவாது ஓங்கு மந்திரமே1200
42 மருந்து
உடற்பிணி யனைத்தையும் உயிர்ப்பிணி யனைத்தையும்
அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே
சித்திக்கு மூலமாம் சிவமருந்து எனவுளம்
தித்திக்கு ஞானத் திருவருள் மருந்தே
இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும்
சிறந்தவல் லபமுறு திருவருள் மருந்தே
மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீர் உடையநன் மருந்தே1210
என்றே என்னினும் இளமையோடு இருக்க
நன்றே தரும்ஒரு ஞானமா மருந்தே
மலப்பிணி தவிர்த்தருள் வலம்தரு கின்றதோர்
நலத்தகை அதுவென நாட்டிய மருந்தே
சிற்சபை நடுவே திருநடம் புரியும்
அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே
43 மாற்றறியாப் பொன்
இடையுறப் படாத இயற்கை விளக்கமாய்த்
தடை ஒன்றும் இல்லாத் தகவுடை யதுவாய்
மாற்றிவை என்ன மதித்து அளப்பரிதாய்
ஊற்றமும் வண்ணமும் ஒருங்குடை அதுவாய்1220
காட்சிக் கினியநற் கலையுடை அதுவாய்
ஆட்சிக் குரியபன் மாட்சியும் உடைத்தாய்
கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய்ச்
செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்
உளம்பெறும் இடமெலாம் உதவுக எனவே
வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
வடம்படா நலமும் வாய்த்த செம்பொன்னே
மும்மையும் தருமொரு செம்மையை உடைத்தாய்
இம்மையே கிடைத்து இங்கிலங்கிய பொன்னே1230
எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது
அடுத்தடுத்து ஓங்குமெய் அருளுடைப்பொன்னே
தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடு வேமெனக்
கிளர்ந்திட உரைத்துக் கிடைத்த செம்பொன்னே
எண்ணிய தோறும் இயற்றுக என்றெனை
அண்ணி என்கரத்தில் அமர்ந்தபைம் பொன்னே
நீகேண் மறக்கினும் நின்னையாம் விட்டுப்
போகேம் என எனைப் பொருந்திய பொன்னே
எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்குப்
பண்ணிய தவத்தால் பழுத்த செம்பொன்னே1240
விண்ணியல் தலைவரும் வியந்திட எனக்குப்
புண்ணியப் பயனால் பூத்த செம்பொன்னே
நால்வகை நெறியினும் நாட்டுக எனவே
பால்வகை முழுதும் பணித்த பைம்பொன்னே
எழுவகை நெறியினும் இயற்றுக எனவே
முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
44 உலவா நிதி
எண்ணியபடி எலாம் இயற்றுக என்றெனைப்
புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே
ஊழிதோ றூழி உலப்புறாது ஓங்கி
வாழி என்று எனக்கு வாய்த்த நன்னிதியே1230
இதமுற வூழிதோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு
உதவினும் உலவாது ஓங்கு நன்னிதியே
இருநிதி எழுநிதி இயல்நவ நிதிமுதல்
திருநிதி எல்லாம் தரும் ஒருநிதியே
எவ்வகை நிதிகளும் இந்தமா நிதியிடை
அவ்வகை கிடைக்குமென்று அருளிய நிதியே
அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே
கற்பனை கடந்த கருணைமா நிதியே
நற்குண நிதியே சற்குண நிதியே
நிற்குண நிதியே சிற்குண நிதியே1240
45 ஜோதி மலை
பளகிலாது ஓங்கும் பளிக்குமா மலையே
வளம்எலாம் நிறைந்த மாணிக்க மலையே
மதியுற விளங்கும் மரகத மலையே
வதிதரு பேரொளி வச்சிர மலையே
உரைமனம் கடந்தாங்கு ஓங்குபொன் மலையே
துரியமேல் வெளியில் ஜோதிமா மலையே
46 இயற்கைப் பொருண்மை
புற்புதம் திரைநுரை புரைமுதல் இலதோர்
அற்புதக் கடலே அமுதத்தண் கடலே
இருட்கலை தவிர்த்தொளி எல்லாம் வழங்கிய
அருட்பெருங் கடலே ஆனந்தக் கடலே1250
பவக்கடல் கடந்துநான் பார்த்தபோது அருகே
உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே
என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்துளம்
நன்றுற விளங்கிய நந்தனக்காவே
சேற்றுநீர் இன்றிநல் தீஞ்சுவை தரும்ஓர்
ஊற்றுநீர் நிரம்பஉடைய பூந்தடமே
கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
களைப்பறக் கிடைத்த கருணை நன்னீரே
இளைப்பற வாய்த்த இன்சுவை உணவே1260
தென்னைவாய்க் கிடைத்த செவ்விளநீரே
தென்னை வான் பலத்தில் திருகுதீம் பாலே
நீர்நசை தவிர்க்கும் நெல்லியங் கனியே
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே
கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
இட்ட நற்சுவைசெய் இலந்தையங் கனியே
புனிதவான் தருவில் புதுமையாம் பலமே
கனி எலாங் கூட்டிக் கலந்த தீஞ்சுவையே
இதந்தரு கரும்பில் எடுத்த தீஞ்சாறே
பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே1270
சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே
ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே
உலப்புறாது இனிக்கும் உயர்மலைத் தேனே
கலப்புறா மதுரம் கனிந்த கோல்தேனே
நவையிலாது எனக்கு நண்ணிய நறவே
சுவையெலாம் திரட்டிய தூயதீம் பதமே
பதம்பெறக் காய்ச்சிய பசு நறும்பாலே
இதம்பெற உருக்கிய இளம்பசு நெய்யே
உலர்ந்திடாது என்றும் ஒரு படித்து ஆகி
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே1280
இகந்தரு புவிமுதல் எவ்வுலகு உயிர்களும்
உகந்திட மணக்கும் சுகந்த நல்மணமே
யாழுறும் இசையே இனிய இன்னிசையே
ஏழுறும் இசையே இயல் அருளிசையே
திவள்ஒளிப் பருவம் சேர்ந்த நல்லவளே
அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே
நாதநல் வரைப்பில் நண்ணிய பாட்டே
வேதகீதத்தில் விளை திருப்பாட்டே
நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே1290
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே
எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே
என்மனக் கண்ணே என் அருட் கண்ணே
என் இரு கண்ணே என்கணுண் மணியே
என்பெருங் களிப்பே என்பெரும் பொருளே
என்பெருந் திறலே என் பெரும் செயலே
என்பெருந் தவமே என்தவப் பலனே
என்பெரும் சுகமே என்பெரும் பேறே
என்பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே
என்பெரு வழக்கே என்பெரும் கணக்கே1300
என்பெரு நலமே என்பெரும் குலமே
என்பெரு வலமே என் பெரும்புலமே
என்பெரு வரமே என்பெரும் தரமே
என்பெரு நெறியே என்பெரு நிலையே
என்பெரும் குணமே என்பெரும் கருத்தே
என்பெருந் தயவே என்பெரும் கதியே
என்பெரும் பதியே என்னுயிர் இயலே
என்பெரு நிறைவே என்தனி அறிவே
47 தனி அன்பு
தோலெலாம் குழைந்திடச் சூழ் நரம்பனைத்தும்
மேலெலாம் கட்டவை விட்டு விட்டு இயங்கிட1310
என்பெலாம் நெக்குநெக்கு இயலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலாம் மெய்யுறத் தளர்ந்திட
இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட
மடலெலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடலெலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திட
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட
உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால்வழிந்து ஓடிட1320
வாய்துடித்து அலறிட வளர்செவித் துணைகளில்
கூயிசைப் பொறியெலாம் கும்மெனக் கொட்டிட
மெய்யெலாம் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாம் குவிந்திடக் காலெலாம் சுலவிட
மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட
அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப் பமைந்திடச்
சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட
அறிவுறு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்
பொறியுறும் ஆன்மதற் போதமும் போயிடத்1330
தத்துவம் அனைத்தும் தாம்ஒருங்கு ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்துநின்று ஓங்கிட
உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசைமேல் பொங்கிட
என்னுளத் தெழுந்து உயிர்எல்லாம் மலர்ந்திட
என்னுளத்து ஓங்கிய என்தனி அன்பே
பொன்னடி கண்டுஅருட் புத்தமுது உணவே
என்னுளத்து எழுந்த என்னுடை அன்பே
தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே1340
என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை அன்பே
என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடை அன்பே
தன்னுளே நிறைவுறு தரமெலாம் அளித்தே
என்னுளே நிறைந்த என்தனி அன்பே
துன்புள அனைத்தும் தொலைத்து எனதுருவை
இன்புரு ஆக்கிய என்னுடை அன்பே
பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளம் கலந்த என்தனி அன்பே1350
தன்வசமாகித் ததும்பிமேல் பொங்கி
என்வசம் கடந்த என்னுடை அன்பே
தன்னுளே பொங்கிய தண்ணமுது உணவே
என்னுளே பொங்கிய என்தனி அன்பே
48 நித்திய விளக்கு
அருளொளி விளங்கிட ஆணவம் எனும் ஓர்
இருளற என்னுளத்து ஏற்றிய விளக்கே
துன்புறு தத்துவத் துரிசெலாம் நீக்கிநல்
இன்புற என்னுளத்து ஏற்றிய விளக்கே
மயலற அழியா வாழ்வு மேன்மேலும்
இயலுற என்னுளத்து ஏற்றிய விளக்கே1360
இடுவெளி அனைத்தும் இயலொளி விளங்கிட
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
கருவெளி அனைத்தும் கதிரொளி விளங்கிட
உருவெளி நடுவே ஒளிர்தரு விளக்கே
தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
ஏற்றிய ஞான இயலொளி விளக்கே
ஆகம முடிமேல் அருளொளி விளங்கிட
வேகமது அறவே விளங்கொளி விளக்கே
ஆரியர் வழுத்திய அருள்நிலை அனாதி
காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே1370
49 நிறைமதி
தண்ணிய அமுதே தந்து என துளத்தே
புண்ணியம் பலித்த பூரணமதியே
உய்தர அமுதம் உதவி என்னுளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே
பதியெலாம் தழைக்கப் பதம் பெறும் அமுத
நிதியெலாம் அளித்த நிறைதிரு மதியே
பாலெனத் தண்கதிர் பரப்பி எஞ்ஞான்றும்
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
50 கருணை மழை
உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே1380
என்னையும் பணிகொண்டு என்னுளே நிரம்ப
மன்னிய கருணை மழைபொழி மழையே
உளங்கொளும் எனக்கே உவகைமேல் பொங்கி
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
நலந்தர உடலுயிர் நல்லறிவு எனக்கே
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
தூய்மையால் எனது துரிசெலாம் நீக்கிநல்
வாய்மையால் கருணை மழைபொழி மழையே
51 செஞ்சுடர்
வெம்மல இரவது விடிதரு ணந்தனில்
செம்மையில் உதித்துளம் திகழ்ந்த செஞ்சுடரே1390
திரையெலாம் தவிர்த்துச் செவ்விஉற்று ஆங்கே
வரையெலாம் விளங்க வயங்கு செஞ்சுடரே
அலகிலாத் தலைவர்கள் அரசு செய் தத்துவ
உலகெலாம் விளங்க ஓங்கு செஞ்சுடரே
முன்னுறு மலவிருள் முழுவதும் நீக்கியே
என்னுள வரைமேல் எழுந்த செஞ்சுடரே
ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த
ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய்ச்சுடரே
52 அருட் கனல்
உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட்கனலே1400
நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
வலஞ்சுழித்து எழுந்து வளர்ந்த மெய்க்கனலே
வேதமும் ஆகமவிரிவும் பரம்பர
நாதமும் கடந்த ஞானமெய்க் கனலே
எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள்
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே
வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
நலமெலாம் அளித்த ஞானமெய்க் கனலே
53 பரஞ்சுடர்
இரவொடு பகலிலா இயல்பொது நடமிடு
பரம வேதாந்தப் பரம்பரம் சுடரே1410
வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி
பரம சித்தாந்தப் பதிபரஞ் சுடரே
சமரச சத்தியச் சபையில் நடம்புரி
சமரச சத்தியத் தற்சுயம் சுடரே
54 அருட்பெருஞ்ஜோதி
சபைஎன துளமெனத் தானமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி
மருளெலாம் தவிர்த்து வரமெலாம் கொடுத்தே
அருளமுது அருத்திய அருட்பெருஞ்ஜோதி
வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழி ஒன்றளித்த அருட்பெருஞ்ஜோதி1420
என்னையும் பொருளென எண்ணி என்னுளத்தே
அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து
உலகியல் சிறிதும் உளம்பிடி யாவகை
அலகில்பே ரருளால் அறிவது விளக்கிச்
சிறுநெறி செல்லாத் திறனளித்து அழியாது
உறுநெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து
சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச்
சாகா வரத்தையும் தந்துமேன் மேலும்
அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்1430
ஓர்உரு ஆக்கியான் உன்னியபடி எலாம்
சீர்உறச் செய்துயிர்த் திறம்பெற அழியா
அருளமுது அளித்தனை அருள்நிலை ஏற்றினை
அருளறிவு அளித்தனை அருட்பெருஞ்ஜோதி
வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் றோங்கிய அருட்பெருஞ்ஜோதி
உலகுயிர்த் திரளெலாம் ஒளிநெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி1440
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல்எனக் களித்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி
சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே
சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி
உலகினில் உயிர்களுக்கு உறும்இடையூ றெலாம்
விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க1450
சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி1456
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் அகத்தீசாய நம
ஓம் நந்தீசாய நம
ஓம் திருமூலதேவாய நம
ஓம் கருவூர் தேவாய நம
ஓம் பதஞ்சலி தேவாய நம
ஓம் இராமலிங்க தேவாய நம
“ஞானியை பூஜிப்பவன் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி, இல்லறம் சிறப்பதோடு மட்டுமல்லாது ஞானியாவான் என்பது சத்தியம்”.
– தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள்