News
MAY 2023
          மகான் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய கீர்த்தித் திருவகவல்
மகான் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய கீர்த்தித் திருவகவல் (மாணிக்கவாசகர்)
எட்டாம்-திருமுறை-திருவாசகம்
சோழநாடு காவிரி வடகரை
கோயில் (சிதம்பரம், தில்லை)
சிவனது திருவடிப் புகழ்ச்சி முறைமை; நிலைமண்டில ஆசிரியப்பா
 
 துவக்கப்பாடல்
 திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
      திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
      திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
      திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
      சிவமயம் 
திருமந்திரம்-1598
சிவமயம்
மகான் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய 
      கீர்த்தித் திருவகவல்
 தில்லை மூதூர் ஆடிய திருவடி
      பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி
      எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
      மண்ணும் விண்ணும் வானோ ருலகும்
      துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
      05 
 என்னுடை யிருளை ஏறத் துரந்தும்
      அடியா ருள்ளத் தன்புமீ தூரக்
      குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும்
      மன்னு மாமலை மகேந்திர மதனிற்
      சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்
      10 
 கல்லா டத்துக் கலந்தினி தருளி
      நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
      பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
      எஞ்சா தீண்டும் இன்னருள் விளைத்தும்
      கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
      15 
 விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
      கேவேட ராகிக் கெளிறது படுத்தும்
      மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்
      மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்து
      உற்றஐம் முகங்க ளாற்பணித் தருளியும்
      20 
 நந்தம் பாடியில் நான்மறை யோனாய்
      அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும்
      வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும்
      நூறுநூ றாயிரம் இயல்பின தாகி
      ஏறுடை ஈசன் இப்புவனியை உய்யக்
      25 
 கூறுடை மங்கையுந் தானும் வந்தருளிக்
      குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச்
      சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும்
      வேலம் புத்தூர் விட்டே றருளிக்
      கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்
      30 
 தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர் 
      விற்பொரு வேடற் கீந்த விளைவும் 
      மொக்கணி யருளிய முழுத்தழல் மேனி 
      சொக்க தாகக் காட்டிய தொன்மையும் 
      அரியொடு பிரமற் களவறி யொண்ணான்
      35 
 நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
      ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி
      பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
      ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
      ஆண்டான் எம்கோன் அருள்வழி யிருப்பத்
      40 
 தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
      அந்தண னாகி ஆண்டுகொண் டருளி
      இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்
      மதுரைப் பெருநன் மாநக ரிருந்து
      குதிரைச் சேவக னாகிய கொள்கையும்
      45 
 ஆங்கது தன்னில் அடியவட் காகப்
      பாங்காய் மண்சுமந் தருளிய பரிசும்
      உத்தர கோச மங்கையு ளிருந்து
      வித்தக வேடங் காட்டிய இயல்பும்
      பூவண மதனிற் பொலிந்திருந் தருளித்
      50 
 தூவண மேனி காட்டிய தொன்மையும்
      வாத வூரினில் வந்தினி தருளிப்
      பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
      திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக்
      கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்
      55 
 பூவலம் அதனிற் பொலிந்தினி தருளிப்
      பாவ நாச மாக்கிய பரிசுந்
      தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
      நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்
      விருந்தின னாகி வெண்கா டதனில்
      60 
 குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும்
      பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்கு
      அட்டமா சித்தி அருளிய அதுவும்
      வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு
      காடது தன்னிற் கரந்த கள்ளமும்
      65 
 மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு
      தக்கா னொருவ னாகிய தன்மையும்
      ஓரி யூரில் உகந்தினி தருளிப்
      பாரிரும் பாலக னாகிய பரிசும்
      பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்
      70 
 தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவிற்
      கோவார் கோலங் கொண்ட கொள்கையும்
      தேனமர் சோலைத் திருவா ரூரில்
      ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
      இடைமரு ததனில் ஈண்ட இருந்தும்
      75 
 படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்
      ஏகம் பத்தில் இயல்பா யிருந்து
      பாகம் பெண்ணோ டாயின பரிசும்
      திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து
      மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்
      80 
 சேவக னாகித் திண்சிலை யேந்திப்
      பாவகம் பலபல காட்டிய பரிசும்
      கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
      ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
      ஐயா றதனிற் சைவ னாகியும்
      85 
 துருத்தி தன்னில் அருத்தியோ டிருந்தும்
      திருப்பனை யூரில் விருப்ப னாகியும்
      கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்
      கழுக்குன் றதனில் வழுக்கா திருந்தும்
      புறம்பய மதனில் அறம்பல அருளியும்
      90 
 குற்றா லத்துக் குறியா யிருந்தும்
      அந்தமில் பெருமை அழலுருக் கரந்து
      சுந்தர வேடத் தொருமுத லுருவுகொண்டு
      இந்திர ஞாலம் போலவந் தருளி
      எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்
      95 
 தானே யாகிய தயாபரன் எம்மிறை
      சந்திர தீபத்துச் சாத்திர னாகி
      அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுள்
      சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்
      மந்திர மாமலை மகேந்திர வெற்பன்
      100 
 அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
      எந்தமை ஆண்ட பரிசது பகரின்
      ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு
      நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
      ஊனந் தன்னை யொருங்குடன் அறுக்கும்
      105 
 ஆனந் தம்மே ஆறா அருளியும்
      மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
      நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
      அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன்
      கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும்
      110 
 மூலமாகிய மும்மலம் அறுக்கும்
      தூய மேனிச் சுடர்விடு சோதி
      காதல னாகிக் கழுநீர் மாலை
      ஏல்வுடைத் தாக எழில்பெற அணிந்தும்
      அரியொடு பிரமற் களவறி யாதவன்
      115 
 பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
      மீண்டு வாரா வழியருள் புரிபவன்
      பாண்டி நாடே பழம்பதி யாகவும்
      பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன்
      உத்தர கோச மங்கையூ ராகவும்
      120 
 ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந் தருளிய
      தேவ தேவன் திருப்பெய ராகவும்
      இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி
      அருளிய பெருமை அருள்மலை யாகவும்
      எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்
      125 
 அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி
      நாயி னேனை நலமலி தில்லையுள்
      கோல மார்தரு பொதுவினில் வருகென
      ஏல என்னை யீங்கொழித் தருளி
      அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்
      130 
 ஒன்ற வொன்ற உடன்கலந் தருளியும்
      எய்தவந் திலாதார் எரியிற் பாயவும்
      மாலது வாகி மயக்க மெய்தியும்
      பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும்
      கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி
      135 
 நாத நாத என்றழு தரற்றிப்
      பாத மெய்தினர் பாத மெய்தவும்
      பதஞ்சலிக் கருளிய பரமநா டகவென்று
      இதஞ்சலிப் பெய்தநின் றேங்கின ரேங்கவும்
      எழில்பெறும் இமயத் தியல்புடை யம்பொன்
      140 
 பொலிதரு புலியூர்ப் பொதுவினி னடநவில்
      கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
      அருளிய திருமுகத் தழகுறு சிறுநகை
      இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
      பொலிதரு புலியூர்ப் புக்கினி தருளினன்
      ஒலிதரு கைலை உயர்கிழ வோனே.
      145 
திருச்சிற்றம்பலம்
நிறைவுப்பாடல்
 வாழ்கவே வாழ்க என்நந்தி திருவடி
      வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
      வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத் தவன்தாள்
      வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. 
        
								
 

