குரு உபதேசம் 4521
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மும்மலக் கசடை நீக்கினால்தான் காமதேகத்தினில் உள்ள கசடு நீங்கி ஒளிதேகம் பெற முடியும் என்பதும் ஒளி தேகம் பெறவும், மும்மலக் கசடு நீங்கவும், தடையாய் இருப்பது அவரவர் செய்த பாவபுண்ணியங்களே என்பதும், பாவபுண்ணியங்கள் சமமானால்தான் தேகக்கசடை நீக்கும் வாய்ப்பை பெறலாம் என்றும் பாவபுண்ணியங்களை சமன் செய்ய, ஞானிகள் துணையும் ஞானபண்டிதன் முருகன் துணையும் இன்றி ஒருபோதும் முடியாது என்பதும் தெளிவாக உணர்த்தப்படும். ஞானிகள் துணையும், ஞானபண்டிதன் முருகனது துணையும் பெற … Read more
குரு உபதேசம் 4520
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தாய்தந்தையின் காமத்தால் உருவான இந்த காமதேகத்தில் உள்ள கசடாகிய மும்மலக் குற்றம் நீங்க வேண்டுமெனில் ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானின் ஆசி இல்லாமல் ஒருகாலும் முடியாது என்பதும், முருகனே வாசியோடு வாசியாக சாதகனை சார்ந்து வாசி நடத்திக் கொடுத்து இத்தேக கசடை நீக்கினால் அன்றி தேகக்கசடை நீக்கவோ, நீக்கி ஞானம் அடையவோ முடியாது என்பதையும் முருகனது அருளை ஆசியை பெற வழிமுறைகளை உபதேசிப்பார் மகான் அகத்திய பெருமான்.
குரு உபதேசம் 4519
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மகான் அகத்தியர் பெருமானாரும் அவர்தம் திருக்கூட்ட மரபினரும் சரியை, கிரியை, யோக ஞான அறிவை ஊட்டலாம். ஆனால் யோகத்தை நடத்தி ஞானத்தை அளிப்பது சர்வ வல்லமைமிக்க ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்பதை அகத்தியர், சாதகனுக்கு உணர்த்தி ஞானத்தலைவன் திருவடியிலே யோகத்திற்கு தகுதியான பெரும் புண்ணியவான்கள் ஆன்மாவை கிடத்திட ஞானத்தலைவன் முருகனின் கருணையை தயவைப் பெற தூண்டுவார் அகத்தியர், அகத்தியரின் தூண்டலிலே யோகத்திற்கு தயாராகும் புண்ணியவான் முருகனை மனம் உருகி … Read more
குரு உபதேசம் 4518
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை பூஜை செய்ய செய்ய மனம் உருதி பூஜிக்க பூஜிக்க தயவே யோக ஞானத்தை அடையும் சாதனம் என்பதை உணர்த்துவார். தயவை பெறுவதற்கான வழிமுறைகளையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உண்டாக்கித் தருவார். தம் சித்தர் கணங்களுடனே மகான் அகத்தியர் சிறு தயவினை தர்மத்தினை செய்ய வாய்ப்பளித்து அந்த சிறுதயவாகிய தர்மத்தினால் உலக உயிர்களுக்கு உபகாரம் செய்ய வாய்ப்பளித்து தர்மத்தினால் மகிழும் உயிர்களின் ஆசியின் துணையால் மேலும் தயவைப் பெருக்கி, பெருகிய தயவின் … Read more
குரு உபதேசம் 4517
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதன் எடுத்த காமதேகத்தின் இயல்பினால் ஞானம் புலப்படாது. ஞானத்தின் மீதும் நம்பிக்கை உண்டாகாது. முருகப்பெருமானை வணங்க வணங்க காமதேகத்தின் இயல்புகள் குறைந்து, முதலில் தர்ம சிந்தையும், பக்தியும் உண்டாகி, தர்மமும் பக்தியும் பெருக பெருக, யோக ஞான அறிவு உண்டாகி அதன் பின் யோகப்பயிற்சி செய்து, பின் ஞானத்திற்குரிய அறிவும் பரிபக்குவமும் உண்டாகி இறுதியில் முருகனே அந்த தலைசிறந்த பக்தனுடன் வாசியோடு வாசியாக கலந்து காமதேகத்தை முற்றிலும் மாற்றி … Read more
குரு உபதேசம் 4516
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை மனம் உருகி பூஜிக்க பூஜிக்க ஞான நூல் போன்றவை கற்று கடவுள் நம்பிக்கை உண்டாகி முதலில் தர்மம் செய்தால்தான் எல்லாம் சாத்தியம் என்பதை உள்ளுணர்வால் உணர்ந்து கொள்வார்கள். தர்மம் செய்து செய்து தர்மத்தின் மீது நம்பிக்கையும் தர்மம் செய்ய செய்ய இறைவனது உண்மை நிலையை உணர்த்துவார். அகத்தீசன் தயவே வடிவானவன், இறைவன் என்பதும் அவனே, எல்லா ஜீவர்களிடத்தும் நிறைந்துள்ளதையும் உணர்த்துவார். அகத்தீசன் ஜீவர்களுக்கு செய்யும் உபகாரமே இறைவனுக்கு செய்யும் … Read more
குரு உபதேசம் 4515
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானிகள் திருவடிகளை வணங்க வணங்க ஞானியர் கூட்ட தலைவன் சித்தர்கோன் அகத்தியரே சரியை, கிரியை, யோக, ஞானம் குறித்த அறிவை தருபவர் என்பதும், அவரே சித்தர் சபை தலைவன் என்பதும் உணர்த்தப்படும். அகத்தியர் திருவடி பற்றி வணங்க வணங்க ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்றும், முருகனே சரியை, கிரியை, யோக, ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அறியவும், அறிந்து தெளியவும், தெளிந்து பின்பற்றவும், பின்பற்றி கடைப்பிடிக்கவும், கடைப்பிடித்து கடைத்தேறவும் அருள் … Read more
குரு உபதேசம் 4514
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை வணங்க வணங்க பக்தி செலுத்தும் முறை தெரிந்து கொண்டு ஞான நூல்களை படித்து ஞான நூல்கள் அருளிய ஞானிகள் திருவடிகளை பூஜித்து ஆசி பெற பெற, ஞான நூல் ரகசியங்கள் புலப்படும். ஞான நூல்களில் கூறப்பட்ட ரகசியம் புரிய வேண்டுமெனில் அகத்தீசன் தயவு வேண்டுமென்பதும், அகத்தீசனே ஞானத்திற்கான வழிமுறை கூறும் தலைவன் என்பதும் அகத்தீசனே முருகப்பெருமானிடத்து நம்மைக் கொண்டு செல்பவர் என்பதும் முருகனே யோக ஞானம் போதிக்கும் ஆதிஞான … Read more