Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4589

அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட : சைவ உணவும், தூய மனமும், தயை சிந்தையும், பக்தியும் தவமுயற்சிக்கு அடிப்படை ஆதாரம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4588

முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : பாலையும் நீரையும் பிரித்தெடுக்கும் அன்னப்பட்சியைப் போல் தூலதேகத்தின் மாசை நீக்கியும் சூட்சும தேகத்தை ஒளி பெறச் செய்தும் என்றும் அழிவிலாத ஒளி உடம்பை பெறலாம் என்று அறியலாம். மாற்றமாம் மணிவாசகர் மலரடி போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். நந்தனார் திருவடியை நாளும் போற்றவே சிந்தையும் தெளியும் திடமாம் சித்தியே. எந்தை வாசகன் இணையடி போற்றிட சிந்தையும் தெளியும் திடமாம் சித்தியே. சித்தியாம் வாசகம் தினமும் படித்திட முக்தியும் … Read more

குரு உபதேசம் 4587

அகத்தீசனை பூஜை செய்து ஆசிபெற்றிட்டால் : தூலதேகமாகிய நரகத்தையும் சூட்சும தேகமாகிய சொர்க்கத்தையும் அறியலாம்.

குரு உபதேசம் 4586

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட : தன்னையும் அறியலாம் தலைவனையும் அறியக் கூடிய வாய்ப்பை பெறலாம். நெற்றிக்கு மத்தியில் நிலைக்கும் வாசகத்தை உற்றுமே கற்றிட உள்ளம் உருகுமே ஆற்றலாம் மணிவாசகர் அருளை தினமும் போற்றியே மகிழ்வர் புண்ணியரே. வல்லவர் வழங்கிய வாசகம் கற்றிட தில்லையிலாடும் திருவடி தோன்றுமே.

குரு உபதேசம் 4585

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட: பொறாமை, பேராசை, அளவுகடந்த கோபம், பிறர் மனம் புண்படும்படி பேசுவது ஆகியவற்றை உணரச் செய்வதுடன் அதை நீக்கிக் கொள்ளவும் அருள் செய்வார். தவம் என்பதே குணக்கேடுகளை அறிந்து நீக்கி வெற்றி காண்பதே ஆகும். தவமுனிவன் மணிவாசகன் தந்த வாசகத்தை பவம் அகல படித்தே பயன்பெறுவர். தக்கதோர் மணிவாசகன் தந்த வாசகத்தை திக்கெலாம் பரப்ப திடமாம் வாழ்வு. கற்றறிந்த மணிவாசகன் கழலிணை போற்றிட பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் சித்திக்குமே. வல்லவர் வழங்கிய வாசகம் தன்னை … Read more

குரு உபதேசம் 4584

முருகனை பூஜித்து ஆசிபெற்றிட: உயிர்களிடத்து செலுத்துகின்ற அன்பே பக்தியாக மாறும். அந்த பக்தியே இறைவனிடத்து ஆசிபெற உறுதுணையாய் வரும் என்பதையும் அறியலாம். மாசற்ற மணிவாசகன் திருவடியை ஆசற்றார் போற்றியே அகம் மகிழ்வர். கனிவுடைய மணிவாசகன் கழலிணை போற்றிட பணிவான வாழ்வும் பண்பும் உண்டாம். வாட்டமற்ற மணிவாசகன் வழங்கிய வாசகத்தை நாட்டமுற்று படித்திட நலமாம் சித்தியே கல்லும் கனியும் கனிவான வாசகத்தை அல்லும் பகலும் அருளாளரே போற்றுவர்.

குரு உபதேசம் 4583

அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட: மற்ற உயிர்கள் மகிழும்படியான வகையிலே வாழ்கின்ற அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் 4582

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றால்: மும்மலமாகிய சிறையை உடைத்து மும்மலச்சிறையில் அடைப்பட்ட ஆன்மாவை விடுவித்து சித்தி பெறலாம் என்பதும், அந்த மும்மலச் சிறையை உடைத்தெறியும் வல்லவன் முருகனே என்றும் முருகப்பெருமானால்தான் மும்மலச் சிறையை உடைத்து சிறைப்பட்ட ஆன்மாவை விடுவித்து கடைத்தேற்ற முடியுமென்றும் அறியலாம். வல்லவன் முருகனை வாழ்த்துவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம். ஆற்றலாம் முருகனின் அருளை தினமும் போற்றியே மகிழ்வர் புண்ணியரே. மணிவாசகப் பெருமானை மகிழப் பூஜித்தால் கனிவான சித்தியை காண்பார் உண்மையே. வள்ளல் … Read more

குரு உபதேசம் 4581

முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: வாசிக்கு தலைவன் முருகப்பெருமான் தான் என்பதை அறியலாம். அச்சம் தவிர்த்தருளும் அருளாளன் முருகனையே நிச்சயமாக நினைத்திடல் நலமே சத்து அறிந்த முருகனின் தாளிணை போற்றிட சித்து அனைத்தும் திடமாம் சித்தியே.