Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 51

51. வாடுத னீக்கிய மணிமன் றிடையே ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி   வாடுதல் நீக்கிய மணி மன்றின் இடையே ஆடுதல் வல்ல அருட்பெருஞ்ஜோதி !   உடலுக்கும் உயிருக்கும் ஏற்படும் எல்லாவிதமான வாட்டங்களையும், துன்பங்களையும் முற்றிலுமாக நீக்கியருளி, அழகிய திருச்சபையின் நடுவே ஆனந்தமாக நடனமாட வல்லமை கொண்ட அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 50

50. எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள் அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி   எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடம் கொளும் அருட்பெருஞ்ஜோதி !   எந்தச் சபையை (பிரபஞ்சம்) யாவருக்கும் பொதுவானது என்று ஞானிகள் வரையறுத்துச் சொன்னார்களோ, அந்தச் சபையையே நிரந்தர இருப்பிடமாகக் கொண்டுள்ள அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 49

49. தம்பர ஞான சிதம்பர மெனுமோர் அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி   தம் பரஞான சிதம்பரம் எனும் ஓர் அம்பரத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !   அம்பரம் – பரவெளி தம்பரம் – தனது மேலான சிதம்பரம் – சித் + அம்பரம் தனக்குரிய மேலான ஞானத்தினால் நிரம்பி, சிதம்பரம் என்று போற்றப்படும் ஒப்பற்ற ஞான வெளியில் உயர்ந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 48

48. எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி   எம்பலம் எனத் தொழுது ஏத்தினோர்க்கு அருள்புரி அம்பலத்து ஆடல் செய் அருட்பெருஞ்ஜோதி !   “அருட்பெருஞ்ஜோதியே” “என் ஒரே அடைக்கலம்” என்று மனதாரத் தொழுது, போற்றிப் பாடும் அடியவர்களுக்கு உடனே அருள் செய்கின்றவரும், எல்லோரும் காணும்படி அம்பலத்தில் ஆனந்த நடனம் ஆடுகின்றவருமான அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 47

47. பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி ஆணிப்பொ ன்னம்பலத் தருட்பெருஞ் ஜோதி   பாணிப்பு இலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி ஆணிப் பொன்னம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !   பாணிப்பு – தாமதம் தன்னை வணங்குவோருக்கு தாமதம் இல்லாமல் அருளாசி வழங்கக் கூடியவராக உயர்ந்த செம்பொன்னால் ஆன பொது அம்பலத்தில் (சிற்சபையில்) வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 46

46. எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய அனைத்தும் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி !   எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்ட ஒரு மேலான இயல்பான வாழ்வை வழங்கி, வேண்டிய அனைத்தையும் அருளும் சக்தி படைத்த திருச்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 45

45. கற்பம் பலபல கழியினு மழிவுறா அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   கற்பம் பலபல கழியினும் அழிவுறா அற்புதம் தரும் சபை அருட்பெருஞ்ஜோதி !   கற்பம் – யுகம் பல யுகங்கள் கடந்து, அவை முடிந்து போனாலும் கூட, எந்தக் காலத்திலும் அழிவுறாமல் இருக்கின்றவரும், தன்னுடைய அடியார்களுக்கு அற்புதங்களை அருளாசியாக அள்ளி வழங்குகின்ற சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 44

44. இழியாப் பெருநல மெல்லா மளித்தருள் அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   இழியாப் பெரு நலமெல்லாம் அளித்து அருள் அழியாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   ஒருபோதும் குறைந்து போகாத அல்லது அழியாத உயர்ந்த பேரின்ப நலன்கள் அனைத்தையும் அள்ளி வழங்கி அருள் பாலிக்கின்றவரும், காலத்தால் அழியாத ஞானமயமான சிற்சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 43

43. வாரமு மழியா வரமுந் தருந்திரு வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   வாரமும் அழியா வரமும் தரும் திரு ஆரமுதாம் சபை அருட்பெருஞ்ஜோதி !   வாரம் என்பது பக்தி / பக்தர் என்று பொருள்படும். தன்மீது பக்தி கொண்டு நாடி வருகின்ற பக்தர்களுக்கு, காலத்தால் அழியாத மரணமிலாப் பெருவாழ்வு என்னும் வரத்தை அளிக்கும் திருவருள் நிறைந்தவரும், அடியவர்களுக்கு அமுதமாக விளங்கும் சபையில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதியே!