தினம் ஒரு அகவல் 258
எட்டிரண் டென்பன வியலுமுற் படியென அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி – 258 எட்டு இரண்டு என்பன இயலும் முற்படி என அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி ! சீவனாகிய (அகாரம் – 8) உயிரையும், சிவனாகிய (உகாரம் – 2) பரமாத்மாவையும் அறிந்து கொள்வதே ஞானத்தின் முதல்படி என்று நிலையான பொருளாய் இருந்து அருளிய அருட்பெருஞ்ஜோதி !


