Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 26

சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும் ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி   சாகாக்கலை நிலை தழைத்திடும் வெளி எனும் ஆகாயத்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி !   எல்லையற்ற கருணை வடிவான பேரொளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே, மரணமில்லாப் பெருவாழ்வு (சாகாக்கலை) அருளும் வல்லமை படைத்தவராக இருக்கிறார்கள்.

தினம் ஒரு அகவல் 25

சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும் அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி   சச்சிதானந்தத் தனிப் பரவெளி எனும் அச்சியல் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !   குற்றம் ஏதுமில்லா ஞானவெளியில் சத் (உண்மை), சித் (ஞானம்), ஆனந்தம் (பேரின்பம்) ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த இறைநிலையான சச்சிதானந்த நிலையில் எங்கும் வியாபித்துள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

தினம் ஒரு அகவல் 24

தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும் அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி   தத்துவ அதீத தனிப்பொருள் வெளியெனும் அத்திரு அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !   முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்கும் ஒப்பற்ற மெய்ப் பொருளின் ஞான வெளியாகிய, அந்தத் திருவருள் பொருந்திய அம்பலத்திலும் (ஞான சபையிலும்) விளங்கும் அருள்மயமான பேரொளியே!

தினம் ஒரு அகவல் 23

தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும் அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி   தகர மெய் ஞானத் தனிப்பெரு வெளியெனும் அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி !   தகரம் : உள்ளம் அகரம் : மூலம் உள்ளத்தின் உள்ள மெய்ஞ்ஞானமயமான தனிப்பெரு வெளியாகிய, மேலும் அனைத்திற்கும் மூலமான அகரம் நிலைபெற்றிருக்கும் இருப்பிடமாகவும் திகழும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

தினம் ஒரு அகவல் 22

சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும் அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   சுத்த சித்தாந்த சுகப்பெரு வெளியெனும் அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   சித்தாந்தம் : சைவநெறியின் முடிவுநிலை. தூய சைவ சித்தாந்தத்தின் முடிவு நிலையான பேரின்பப் பெருவெளியாகவும், அந்தத் தனிச்சிறப்பு மிக்க ஞானசபையாகவும் திகழும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 21

சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும் அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   சுத்த வேதாந்தத் துரியமேல் வெளியெனும் அத்தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   வேதாந்தம் : வேதங்களின் முடிவு ( வேதம் + அந்தம் ) துரியம் : வேதாந்தத்தின் முடிவு. துரியம் மேல் : துரியாதீதம்.  அத்தகு : அந்த தகுதியுடைய   தூய வேதாந்தத்தின் உயர் நிலையான துரியத்தையும் கடந்து, துரியாதீதத்தில் விளங்கும் ஞான வெளியாகிய, அந்த மகத்தான தகுதியுடைய சிற்சபையாகவும் திகழும் … Read more

தினம் ஒரு அகவல் 20

பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும் அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி   பெரிய நாதாந்தப் பெருநிலை வெளியெனும் அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !   நாதாந்தம் : ஒலியின் முடிவு ( நாதம் + அந்தம் ) – ஓம் சிற்றம்பலம் : சிற்சபை, ஞானசபை.   எல்லாவற்றிற்கும் ஆதாரமான ஒலியாகிய பரம்பொருளை (“ஓம்”) உணரும் நிலையே நாதாந்தமாகும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பெருமை பொருந்திய ஞானவெளியில், “ஓம்” என்ற ஞானசபையில் வீற்றிருக்கிறார்.