குரு உபதேசம் 4628
அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால்…. புண்ணியபலமும், அருள்பலமும் உள்ள மக்கள் மேற்கொள்கின்ற எல்லா செயல்களும் வெற்றி பெறும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4627
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கை கடவுளால் மனிதனுள் வைக்கப்பட்ட அற்புத சக்தியை தட்டி எழுப்ப புண்ணியமும் அருளாசியும் வேண்டும். முருகப்பெருமானைவணங்க வணங்க முருகனது அருள் கூடி நிற்பதோடு புண்ணிய பலத்தின் உதவியால் அந்த சக்தி தட்டி எழுப்பப்படும். அதுவே எல்லாவற்றையும் தரும் என்பதையும் அறியலாம். கோடானு கோடி யுகங்கள் தவம் செய்து தாம் பெற்றிட்ட அற்புத சக்தியின் வெளிப்பாட்டின் மகிமையை தாம் அடைந்த அந்த பேரின்பத்தை மற்றவர்க்கும் அற்புதமாய் பெருந்தாய் பெருங்கருணையோடு வழங்கி அனைவரையும் அடையச் … Read more
குரு உபதேசம் 4626
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இயற்கை கடவுள் மனிதனை படைக்கும்போது அவனுள் அற்புத சக்தியினை வைத்து படைத்துள்ளான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4625
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. கடவுள் முருகன்தான் என்பதை அறியும் உண்மை அறிவைப் பெறலாம். உண்மைக் கடவுளான முருகனை மனமுருகி பூஜிக்கும் வாய்ப்பை பெறலாம், சைவத்தை கடைப்பிடிக்க தக்க சூழ்நிலையும், மன உறுதியும் பெறலாம். சைவத்தை தடையின்றி கடைப்பிடிக்கலாம். அன்னதானம் செய்வதற்குரிய வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெற்று புண்ணியவானாகலாம். புண்ணியத்தைப் பெருக்கி பெருக்கி, மரணமிலாப் பெருவாழ்வை அடைகின்ற மார்க்கத்தையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
குரு உபதேசம் 4623
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானத்தலைவன் முருகப்பெருமானே கடவுள் என்றும், அவனது ஆசியை பெற்றிட்டால், மரணத்தை வென்ற மகான்களான நவகோடி சித்தரிஷி கணங்கள் ஆசியையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் 4624
அகத்தீசனை வணங்கி பூஜித்திட்டால்…. தினம் தினம் கடவுளை பூஜை செய்வது நன்மையை தரும். ஆயினும், அதனினும் நன்மை தரக்கூடியது பிற உயிரை கொன்று தின்னாதிருத்தல், சுத்த சைவ உணவை மேற்கொள்ளல். அதனினும் நன்மை தருவது பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தல் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் 4622
அகத்தீசனை வணங்கி பூஜித்திட்டால்…. ஜீவதயவிற்குரிய அறிவு வரும், உயிர்க்கொலை தவிர்த்து புலால் உண்ணக் கூடாது என்கிற நல்லறிவு உண்டாகும். சைவஉணவை மேற்கொள்ளவும் நல்ல உறுதியுள்ள மனம் உண்டாகி சைவத்தில் நம்பிக்கையும் பாவபுண்ணியத்தின் மீது நம்பிக்கையும் உண்டாகி கடவுள் நம்பிக்கையும் உண்டாகும்
குரு உபதேசம் 4621
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தக்க ஆசானின் துணையைப் பெறுவார்கள், ஆன்மீகத்தில் முன்னேறி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.


