Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 05

5. ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய் ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி   ஈனம் இன்றி இக பரத்தின் இரண்டின் மேற் பொருளாய் ஆனல் இன்றோங்கிய அருட்பெருஞ்ஜோதி !   ஈனம் – குறைகள் ஈனமின்றி – குறைபாடுகளற்ற ஆனல் இன்றி – நிகரில்லா இகம் – இந்தப் பிறவியில் உள்ள இன்ப துன்பங்கள் – நிலையற்றவை பரம் – முக்தி,                            மோட்சம் – நிலையானவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையற்ற உலக இன்பங்கள் (இகம்), நிலையானதாகக் கருதப்படும் … Read more

தினம் ஒரு அகவல் 04

4. இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய் அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய் அகம் அறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி ! இகநிலைப் பொருள் : இந்த உலகத்தில் உள்ள பொருள் பரநிலைப் பொருள் : பிரபஞ்சத்தில் உள்ள பொருள் அகம் அற : உள்ளேயும் வெளியேயும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பிரபஞ்சத்தின் அணுவிலும் அண்டத்திலும் (உள்ளேயும் வெளியேயும்) எவ்வித பேதமும் இன்றிப் பூரணமாக நிறைந்திருக்கும் சத்தியப் பொருளாவார்.

தினம் ஒரு அகவல் 03

ஆகம முடிமேல் ஆரண முடிமேல் ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !   ஆகமம் :  சைவ சித்தாந்தம் ஆரணம் : வேதாந்தம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சைவ சித்தாந்த தத்துவங்கள் மற்றும் வேதங்கள் போன்ற வரையறைக்குள் அடங்காத உயர்ந்த பேரொளியாவார்.

தினம் ஒரு அகவல் மகான் இராமலிங்க சுவாமிகள் 02

2. அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ் அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி அருட் சிவநெறி சார் அருட்பெருநிலை வாழ் அருட் சிவபதியாம் அருட்பெருஞ்ஜோதி !   அருட்சிவ நெறி : இதுவே சுத்த சன்மார்க்கம். இங்கு ‘சிவம்’ என்பது அழியாத பேரின்ப நிலையைக் குறிக்கிறது. அருட்பெருநிலை : மரணமில்லாப் பெருவாழ்வு நிலை, முத்தி நிலை. அருட் சிவபதி : இறைவன் இந்த உயர்ந்த நெறிக்கும், அந்த அழிவற்ற நிலைக்கும் தலைவன். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இறைவன்தான், ஞானிகள் அடைய … Read more

தினம் ஒரு அகவல் மகான் இராமலிங்க சுவாமிகள் 01

“அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை !!” 1. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி இறைவனின் உண்மை வடிவம் பேரொளியான அருட்பெருஞ்ஜோதியாகும். அந்த ஒளியின் தன்மை ஜீவகாருண்யமான பெருங்கருணையாகும். இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் கருணையோடு அன்பு செலுத்துவதே இறைவனின் தனித்தன்மையாகும். இதை மனிதன் உணர்ந்து கடைப்பிடித்து செயலாற்றுவதே மீண்டும் பிறவாமையான மரணமில்லாப் பெருவாழ்வு நிலைக்கு அழைத்துச் செல்லும். இறைவன் வடிவம் : பேரொளி (அருட்பெருஞ்ஜோதி). இறைவன் தன்மை : எல்லையற்ற கருணை (தனிப்பெருங்கருணை). … Read more

குரு உபதேசம் 4628

அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால்…. புண்ணியபலமும், அருள்பலமும் உள்ள மக்கள் மேற்கொள்கின்ற எல்லா செயல்களும் வெற்றி பெறும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4627

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கை கடவுளால் மனிதனுள் வைக்கப்பட்ட அற்புத சக்தியை தட்டி எழுப்ப புண்ணியமும் அருளாசியும் வேண்டும். முருகப்பெருமானைவணங்க வணங்க முருகனது அருள் கூடி நிற்பதோடு புண்ணிய பலத்தின் உதவியால் அந்த சக்தி தட்டி எழுப்பப்படும். அதுவே எல்லாவற்றையும் தரும் என்பதையும் அறியலாம். கோடானு கோடி யுகங்கள் தவம் செய்து தாம் பெற்றிட்ட அற்புத சக்தியின் வெளிப்பாட்டின் மகிமையை தாம் அடைந்த அந்த பேரின்பத்தை மற்றவர்க்கும் அற்புதமாய் பெருந்தாய் பெருங்கருணையோடு வழங்கி அனைவரையும் அடையச் … Read more