Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 30

30. என்றா தியசுடர்க் கியனிலை யாயது வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி   என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது அன்றாம் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி !   என்றுமே ஆதியாக மூலமாக இருக்கும் பேரொளியாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஞானத் திருச்சபையில் வீற்றிருக்கிறார்.

தினம் ஒரு அகவல் 29

29. வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம் ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி   வேத ஆகமங்களின் விளைவுகட்கு எல்லாம் ஆதாரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி !   வேதங்கள், ஆகமங்கள் போன்றவற்றில் உள்ள ஞான உபதேசங்களுக்கும், வழிகாட்டுதலுக்கும் ஆதாரமான ஞான வெளியில் வீற்றிருக்கும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 28

28. ஏக மனேக மெனப்பகர் வெளியெனும் ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   ஏகம் அனேகம் எனப் பகர் வெளி எனும் ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், இந்த உலகில் நிலைத்திருக்கும் ஒரே நித்திய உண்மைப் பொருளாகவும், இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின் ஆன்மாகவும் , சிற்சபை எனும் ஞான வெளியில் பேரொளியாக திகழ்கிறார்.

தினம் ஒரு அகவல் 27

27. காரண காரியங் காட்டிடு வெளியெனும் ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி   காரண காரியம் காட்டிடு வெளி எனும் ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், இந்த உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பொருட்களின், உயிர்களின் காரணங்களையும் காரியங்களையும்  வெளிச்சம் போட்டுக் காட்டும் ஞான வெளியாக, வேதங்களால் போற்றப்படும் சிற்சபையில் ஒளி வீசித் திகழ்கிறார்.

தினம் ஒரு அகவல் 26

26. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும் ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி   சாகாக்கலை நிலை தழைத்திடும் வெளி எனும் ஆகாயத்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி !   எல்லையற்ற கருணை வடிவான பேரொளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே, மரணமில்லாப் பெருவாழ்வு (சாகாக்கலை) அருளும் வல்லமை படைத்தவராக இருக்கிறார்கள்.

தினம் ஒரு அகவல் 25

சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும் அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி   சச்சிதானந்தத் தனிப் பரவெளி எனும் அச்சியல் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !   குற்றம் ஏதுமில்லா ஞானவெளியில் சத் (உண்மை), சித் (ஞானம்), ஆனந்தம் (பேரின்பம்) ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த இறைநிலையான சச்சிதானந்த நிலையில் எங்கும் வியாபித்துள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

தினம் ஒரு அகவல் 24

தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும் அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி   தத்துவ அதீத தனிப்பொருள் வெளியெனும் அத்திரு அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி !   முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நிற்கும் ஒப்பற்ற மெய்ப் பொருளின் ஞான வெளியாகிய, அந்தத் திருவருள் பொருந்திய அம்பலத்திலும் (ஞான சபையிலும்) விளங்கும் அருள்மயமான பேரொளியே!