Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் மகான் இராமலிங்க சுவாமிகள் 01

“அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை !!” 1. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி இறைவனின் உண்மை வடிவம் பேரொளியான அருட்பெருஞ்ஜோதியாகும். அந்த ஒளியின் தன்மை ஜீவகாருண்யமான பெருங்கருணையாகும். இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் கருணையோடு அன்பு செலுத்துவதே இறைவனின் தனித்தன்மையாகும். இதை மனிதன் உணர்ந்து கடைப்பிடித்து செயலாற்றுவதே மீண்டும் பிறவாமையான மரணமில்லாப் பெருவாழ்வு நிலைக்கு அழைத்துச் செல்லும். இறைவன் வடிவம் : பேரொளி (அருட்பெருஞ்ஜோதி). இறைவன் தன்மை : எல்லையற்ற கருணை (தனிப்பெருங்கருணை). … Read more

குரு உபதேசம் 4628

அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால்…. புண்ணியபலமும், அருள்பலமும் உள்ள மக்கள் மேற்கொள்கின்ற எல்லா செயல்களும் வெற்றி பெறும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4627

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. இயற்கை கடவுளால் மனிதனுள் வைக்கப்பட்ட அற்புத சக்தியை தட்டி எழுப்ப புண்ணியமும் அருளாசியும் வேண்டும். முருகப்பெருமானைவணங்க வணங்க முருகனது அருள் கூடி நிற்பதோடு புண்ணிய பலத்தின் உதவியால் அந்த சக்தி தட்டி எழுப்பப்படும். அதுவே எல்லாவற்றையும் தரும் என்பதையும் அறியலாம். கோடானு கோடி யுகங்கள் தவம் செய்து தாம் பெற்றிட்ட அற்புத சக்தியின் வெளிப்பாட்டின் மகிமையை தாம் அடைந்த அந்த பேரின்பத்தை மற்றவர்க்கும் அற்புதமாய் பெருந்தாய் பெருங்கருணையோடு வழங்கி அனைவரையும் அடையச் … Read more

குரு உபதேசம் 4626

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இயற்கை கடவுள் மனிதனை படைக்கும்போது அவனுள் அற்புத சக்தியினை வைத்து படைத்துள்ளான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4625

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. கடவுள் முருகன்தான் என்பதை அறியும் உண்மை அறிவைப் பெறலாம். உண்மைக் கடவுளான முருகனை மனமுருகி பூஜிக்கும் வாய்ப்பை பெறலாம், சைவத்தை கடைப்பிடிக்க தக்க சூழ்நிலையும், மன உறுதியும் பெறலாம். சைவத்தை தடையின்றி கடைப்பிடிக்கலாம். அன்னதானம் செய்வதற்குரிய வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெற்று புண்ணியவானாகலாம். புண்ணியத்தைப் பெருக்கி பெருக்கி, மரணமிலாப் பெருவாழ்வை அடைகின்ற மார்க்கத்தையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

குரு உபதேசம் 4623

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானத்தலைவன் முருகப்பெருமானே கடவுள் என்றும், அவனது ஆசியை பெற்றிட்டால், மரணத்தை வென்ற மகான்களான நவகோடி சித்தரிஷி கணங்கள் ஆசியையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4624

அகத்தீசனை வணங்கி பூஜித்திட்டால்…. தினம் தினம் கடவுளை பூஜை செய்வது நன்மையை தரும். ஆயினும், அதனினும் நன்மை தரக்கூடியது பிற உயிரை கொன்று தின்னாதிருத்தல், சுத்த சைவ உணவை மேற்கொள்ளல். அதனினும் நன்மை தருவது பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தல் என்பதை அறியலாம்.