தினம் ஒரு அகவல் 27
காரண காரியங் காட்டிடு வெளியெனும் ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி காரண காரியம் காட்டிடு வெளி எனும் ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், இந்த உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பொருட்களின், உயிர்களின் காரணங்களையும் காரியங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் ஞான வெளியாக, வேதங்களால் போற்றப்படும் சிற்சபையில் ஒளி வீசித் திகழ்கிறார்.


