Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 314

தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – 314   தாபத்துயரம் தவிர்த்து உலகுறும் எல்லா ஆபத்தும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !   தாபத்துயரம் – ஏக்கம் / வெப்பத்துன்பம் தவ வெப்பத்தால் தேகத்தில் ஏற்படும் துன்பமான சூட்டையும், ஆன்மக் கொதிப்பையும் நீக்கி, இந்த உலகத்தில் ஏற்படும் எல்லாவிதமான துன்பங்கள், பிணிகள் மற்றும் ஆபத்துகளையும் விலக்கி அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 312

ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண் டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி – 312   ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு ஆறாறு கடத்திய அருட்பெருஞ்ஜோதி !   மனித முயற்சிகளால் எளிதில் அடைய முடியாத உயர்ந்த நடுநிலைப் பகுதியில் என்னை ஏற்றி, முப்பத்தாறு (ஆறாறு) தத்துவங்களைக் கடந்து சென்று, நித்திய நிலையை அடையச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 310

எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 310   எச்சோதனைகளும் இயற்றாது எனக்கே அச்சோ என்று அருள் அருட்பெருஞ்ஜோதி !   எந்தவிதமான கடுமையான சோதனைகளையும், ஆன்மீகப் பரீட்சைகளையும் செய்யாமல், ‘ஆச்சரியமே!’ என்றோ “அய்யோ பாவம்” என்றோ, அருள் வழங்கிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 308

தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன் ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி – 308   தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன் ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி !   ஆத்திரம் – ஆ + திரம் – வியந்திடும் வல்லபம் உன்னை வணங்கி உன்னுடைய புகழைச் சொல்லத் தெரியாதவனாகவும், உனது அருளைப் பெறுவதற்கு தகுந்த பாத்திரமாக இல்லாதவனாகவும் இருந்த என்னிடத்தில், மிகுந்த ஆன்மீக வல்லபத்தையும், ஆர்வத்தையும் அளித்து அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 306

நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன் ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி – 306   நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி !   நாயை விட, மலத்தில் இருக்கும் ஈயைவிட,  இழிவாக நான் இருப்பினும் எனக்கு அருள் செய்த அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 304

நன்றறி வறியா நாயினேன் றனையும் அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி – 304   நன்று அறிவு அறியா நாயினேன் என்றனையும் அன்று வந்து ஆண்ட அருட்பெருஞ்ஜோதி !   நன்மை எது என்று அறிந்துகொள்ளும் ஞானம் கூட இல்லாத நாயைப் போன்றவனான என்னையும் கூட, அந்நாளிலேயே தேடி வந்து ஆட்கொண்டு அருள் செய்த அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 302

கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண் டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி – 302   கூற்றுதைத்து என்பால் குற்றமும் குணங்கொண்டு ஆற்றல் மிக்க அளித்த அருட்பெருஞ்ஜோதி !   எமனை அழித்து (கூற்றுவனை உதைத்து), என்னுடைய குற்றங்களையும் (குறைகளையும்) தன் கருணையால் குணங்களாக மாற்றி, மிகுந்த வல்லமையை எனக்கு வழங்கி அருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 300

நவையிலா வுளத்தி னாடிய நாடிய வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி – 300   நவையிலா உளத்தில் நாடிய நாடிய அவையெலாம் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி !   எதுவும் தேவையில்லை என்ற மனப்பக்குவம் அடைந்த பின் ஞானத்திற்கு உரிய தேடுதல்களை உடனே அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 298

எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி – 298   எல்லாம் வல்ல சித்து எனக்களித்து எனக்கு உனை அல்லாது இலை எனும் அருட்பெருஞ்ஜோதி !   எல்லாவிதமான வல்லமைகளையும் கொண்ட ஞான ஆற்றலை எனக்கு அளித்து, “இனி உனக்கு நம்மைத் தவிர வேறு துணை இல்லை” என்று உறுதியளித்து அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!