Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4622

அகத்தீசனை வணங்கி பூஜித்திட்டால்…. ஜீவதயவிற்குரிய அறிவு வரும், உயிர்க்கொலை தவிர்த்து புலால் உண்ணக் கூடாது என்கிற நல்லறிவு உண்டாகும். சைவஉணவை மேற்கொள்ளவும் நல்ல உறுதியுள்ள மனம் உண்டாகி சைவத்தில் நம்பிக்கையும் பாவபுண்ணியத்தின் மீது நம்பிக்கையும் உண்டாகி கடவுள் நம்பிக்கையும் உண்டாகும்

குரு உபதேசம் 4621

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தக்க ஆசானின் துணையைப் பெறுவார்கள், ஆன்மீகத்தில் முன்னேறி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.

குரு உபதேசம் 4620

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு மேல்நிலை அடைய முயற்சித்தாலும் தக்க ஆசானின் வழிகாட்டல் இல்லாவிடில் எந்தவிதத்திலும் முன்னேற முடியாது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4619

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. புண்ணியமும் அருள்பலமும் உள்ள மக்களுக்குத்தான் ஞானசித்தர் கால ஞான ஆட்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4618

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…. ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்து, காப்பாற்றிக் கொண்டிருப்பவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம். முருகப்பெருமானின் ஆசிபெற விரும்பினால் அவனால் படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு எவன் தொண்டு செய்கின்றானோ அவனுக்கு ஞானவாழ்வை தந்து, மரணமிலாப் பெருவாழ்வையும் தருவான் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4617

அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிற உயிர்களுக்கு செய்கின்ற உதவிகளே ஞானமாக மாறும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4616

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. உயிர் வாழ உணவு உண்பது மிகமிக அவசியம். ஒவ்வொரு உயிரும் தாம் வாழ எல்லா வகையிலும் போராடி வாழ்கிறது. ஒவ்வொரு உயிரும் வாழத்தான் விரும்பும், சாகுவதற்காக அல்ல. உயிர்கள் வாழ உணவு அவசியம். உயிர் வாழ உணவு உண்பது, என்பது தேவைதான். அதற்காக இயற்கை மனிதனுக்கு இவ்வுலகினில் ஏராளமான காய் வகை, கனி வகை, கீரைகள், பருப்புகள், இலைகள், கிழங்குகள் என பலபலவிதமான தாவரங்களை படைத்து அவற்றை பயிர் செய்யும் முறையும் … Read more

குரு உபதேசம் 4615

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மனிதன் எழுத்தாளன், ஓவியன், கவிஞன், விஞ்ஞானி, கல்வியாளன், பேச்சாளன் என மிகச்சிறந்த வகையிலே திறமைகள் பெற்றிருந்தாலும் அவர்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திலே இறந்துதான் போவார்கள். என்றும் அழியாத முருகனது திருவடிகளைப் பற்றினால்தான் எதனாலும் பாதிப்படையாமல் மனிதன் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் 4614

அகத்தீசனைவணங்கி பூசித்து ஆசிபெற்றிட்டால்…. தாய்தந்தையர், உடன்பிறந்தோர், உறவினர், நட்பு என அனைத்தும் ஒருகால எல்லைக்குள்தான் நம்முடன் வர முடியும். அவரவர் காலம் முடிந்து விட்டால் வரமுடியாது, காலத்தால் அனைவரும் மரணமடைவார்கள். ஆனால் முதுபெரும் ஞானிகள் திருவடியைப் பற்றினோர்க்கு ஞானியர் துணை எக்காலத்தும் எச்சென்மத்திலும் விடாது தொடர்ந்து பற்றி வரும் என்பதை அறியலாம்.