தினம் ஒரு அகவல் 57
57. பிறிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென் னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி பிறிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என் அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி ! எந்தக் காலத்திலும் பிரிந்து போவதையோ அல்லது விலகி இருப்பதையோ அறியாத மகத்தான பரம்பொருளாக விளங்குகின்றவரும், எனது அறிவினுள் இருந்து சுத்த அறிவைச் செலுத்துகின்ற அறிவாகவே இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே!


