admin
தினம் ஒரு அகவல் 304
நன்றறி வறியா நாயினேன் றனையும் அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி – 304 நன்று அறிவு அறியா நாயினேன் என்றனையும் அன்று வந்து ஆண்ட அருட்பெருஞ்ஜோதி ! நன்மை எது என்று அறிந்துகொள்ளும் ஞானம் கூட இல்லாத நாயைப் போன்றவனான என்னையும் கூட, அந்நாளிலேயே தேடி வந்து ஆட்கொண்டு அருள் செய்த அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 302
கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண் டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி – 302 கூற்றுதைத்து என்பால் குற்றமும் குணங்கொண்டு ஆற்றல் மிக்க அளித்த அருட்பெருஞ்ஜோதி ! எமனை அழித்து (கூற்றுவனை உதைத்து), என்னுடைய குற்றங்களையும் (குறைகளையும்) தன் கருணையால் குணங்களாக மாற்றி, மிகுந்த வல்லமையை எனக்கு வழங்கி அருளிய அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 300
நவையிலா வுளத்தி னாடிய நாடிய வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி – 300 நவையிலா உளத்தில் நாடிய நாடிய அவையெலாம் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி ! எதுவும் தேவையில்லை என்ற மனப்பக்குவம் அடைந்த பின் ஞானத்திற்கு உரிய தேடுதல்களை உடனே அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி !
தினம் ஒரு அகவல் 298
எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி – 298 எல்லாம் வல்ல சித்து எனக்களித்து எனக்கு உனை அல்லாது இலை எனும் அருட்பெருஞ்ஜோதி ! எல்லாவிதமான வல்லமைகளையும் கொண்ட ஞான ஆற்றலை எனக்கு அளித்து, “இனி உனக்கு நம்மைத் தவிர வேறு துணை இல்லை” என்று உறுதியளித்து அருளிச் செய்த அருட்பெருஞ்ஜோதியே!
தினம் ஒரு அகவல் 296
வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால் ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி – 296 வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால் ஆய்தற்கு அரிய அருட்பெருஞ்ஜோதி ! வாய்மையை உரைக்கக்கூடியவை என்று சொல்லப்படும் வேதங்கள், ஆகமங்கள் போன்றவையாலும் ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்ள முடியாத அருட்பெருஞ்ஜோதி !
தினம் ஒரு அகவல் 294
சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி – 294 சமயம் குல முதல் சார்பு எலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி ! சமயம், குலம் போன்ற சார்பு நிலையை விட்டு விலகியவுடன் அத்தருணத்தில் ஞானப் பிரகாசமாய் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி!
தினம் ஒரு அகவல் 292
பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி – 292 பற்றுகள் அனைத்தையும் பற்று அறத் தவிர்த்து எனது அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி ! உலக வாழ்க்கையின் பற்றுகள் அனைத்தையும் தவிர்த்து, எனது மரணத்தையும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி !
தினம் ஒரு அகவல் 290
மாண்டுழ லாவகை வந்திளங் காலையே ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி – 290 மாண்டு உழலா வகை வந்து இளங்காலையே ஆண்டு கொண்டு அருளிய அருட்பெருஞ்ஜோதி ! பிறப்பு இறப்பு எனும் சுழற்சியில் இருந்து இளமையிலேயே என்னை காப்பாற்றி ஆட்கொண்ட அருட்பெருஞ்ஜோதி !


