Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 382

மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண் டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 382   மண்ணில் ஐந்து ஐந்து வகையும் கலந்து கொண்டு அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி !   நிலம் என்னும் பூதத் தத்துவத்தில், மற்ற நான்கு பூதங்களின் கூறுகளையும் ஐந்தாகக் கலந்து, அவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பொருந்தும்படி செய்தருளிய அருட்பெருஞ்ஜோதியே!

தினம் ஒரு அகவல் 380

மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 380   மண்ணிடை அடிநிலை வகுத்து அதில் பல நிலை அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !   பஞ்சபூதங்களில் மண் தத்துவம் அடியாகவும், ஆகாயம் முடியாகவும் குறிப்பிடப்படுகிறது. அந்த நிலையில் பல நிலைகளையும் வகுத்து பொருந்துமாறு அமைத்த அருட்பெருஞ்ஜோதி!

தினம் ஒரு அகவல் 378

மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன் அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 378   மண்ணினில் ஐந்தியல் வகுத்து அதில் பல்பயன் அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !   நிலப் பூதத்தில் ஐம்புலன்களுக்குரிய ஐவகை இயல்புகளைப் பகுத்து, அந்த இயல்புகளிலிருந்து மனித வாழ்வுக்குத் தேவையான பலதரப்பட்ட நன்மைகளும் பயன்களும் கிடைக்கப்பெறும்படி செய்தருளிய பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.

தினம் ஒரு அகவல் 376

மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல் அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி  – 376   மண்ணினில் பற்பல வகை கருநிலை இயல் அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி !   மண்ணில் பலவகை உயிரினங்களும் அதன் இயல்பு தன்மைக்கு ஏற்றவாறு பொருந்தி வாழ வகை செய்த அருட்பெருஞ்ஜோதி!

தினம் ஒரு அகவல் 374

மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி – 374   மண்ணினில் நாற்றம் வகுத்து அது பல்வகை அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி !   நிலப் பூதத்தின் மணம் (நாற்றம்) என்பதை பல வகைகளாகப் பிரித்து, உலகப் பொருள்களில் அவற்றின் இயல்புக்கேற்பப் பொருந்தும்படிச் செய்த பேரருள் வடிவே அருட்பெருஞ்ஜோதி.

தினம் ஒரு அகவல் 372

மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம் அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 372   மண்ணினில் ஐம்பூ வகுத்து அதில் ஐந்திறம் அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !   நிலமாகிய பூதத்தில் மற்ற நான்கு பூதங்களின் (நீர், தீ, காற்று, ஆகாயம்) தன்மைகளையும் கலந்து, அவற்றுக்கான ஐந்திறங்களான குணங்களையும் பொருந்தச் செய்து உலகைப் படைத்த பேரருள் வடிவமே அருட்பெருஞ்ஜோதி.

தினம் ஒரு அகவல் 370

மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 370   மண்ணினில் பொன்மை வகுத்து அதில் ஐமையை அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி !   ஐமை – அழகு பொருந்திய / ஐந்து நிறங்கள் பொன் கூட விளையும்படி இந்த பூமியை வகுத்து அதில் பல்வேறு தன்மைகளை கொண்ட மண் வளங்களை உண்டாக்கி அவற்றை இந்த பூமியோடு பொருந்தி அமைத்த அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 368

மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி – 368   மண்ணினில் திண்மையை வகுத்து அதில் கிடக்கை அண்ணுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி !   மண் தத்துவமான இந்த பூமியை உறுதியானபடி வைத்து, அதன் மேல் உள்ள அசையும் அசையா பொருள்களை பூமியுடன் நெருக்கமாக வைத்து அமைத்துள்ள அருட்பெருஞ்ஜோதி !

தினம் ஒரு அகவல் 366

புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 366   புவி நிலை சுத்தமாம் பொற் பதி அளவி அவையுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி   பூமி என்னும் இந்த தத்துவ நிலையை, பரிசுத்தமான பொன் உலகத்தின் தன்மையாக அளவீடு செய்து அதை நாம் அனுபவிக்கும்படி அமைத்த அருட்பெருஞ்ஜோதியே!