தினம் ஒரு அகவல் 201 – 202
201-202 எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம் அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி எவ்வழி மெய்வழி என்ப வேதாகமம் அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி ! (வேதங்களும், ஆகமங்களும்) எந்த வழியை உண்மையான முக்திக்கு வழி (மெய்வழி) என்று போற்றிக் கூறுமோ, சரியான அந்த வழியையே எனக்குத் தெளிவாகக் காட்டி அருளிய அருட்பெருஞ்ஜோதி!


