Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3270

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானநூல் என்பவை ஞானியர் திருவடிகளைப் பற்றி பூஜிக்க தூண்டுவதாயும், ஞானமளிக்க வல்லதாயும் இருக்க வேண்டும். அதுவும் ஞானபண்டிதனது பெருமைகளையும், ஞானபண்டிதன் திருவடிகளைப் பற்ற ஏதுவாய் உள்ள நூல்கள் மிகவும் பயனுள்ளதாகும்.

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…

ஞானசித்தர்கள் ஆட்சி புண்ணியவான்களின் ஆட்சி, புனிதமான ஆட்சி, தயவு பெருகும் ஆட்சி, தர்மம் ஓங்கி நிற்கும் ஆட்சி என்பதையும் அறியலாம்.

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசிபெற்றி

தாய்மை குணம் மிக்க முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பின்தொடரும் மக்களுக்கு லோபித்தனம் இருக்காது, செல்வநிலை பெருகும்.

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…

“முருகா” என்று சொல்கின்ற ஒரு மந்திரத்திலேயே அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய நான்கும் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…

ஒரு கணப்பொழுதினில் உலகினில் திடீரென தோன்றி இந்த உலகையே தனது ஆட்சிக்கு கீழ்கொண்டு வந்து ஆட்சி செய்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…

கோடானுகோடி யுகங்கள் தவம் செய்திட்ட சர்வவல்லமை பெற்ற முருகப்பெருமானே நேரில் ஆட்சி செய்ய இருப்பதினாலே எல்லா மக்களும் அச்சமின்றி வாழலாம் என்பதை அறியலாம்.

எது ஆன்மீகம்?

பசியாற்றக்கூடிய எண்ணம் எங்கிருக்கிறதோ? அது அறம். அந்த சிந்தனையே கடவுள் வாழுகின்ற இடம். பிறருக்கு பசியாற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலே அங்கே கடவுள் இருக்கிறான். கடவுளை எங்கேயும் தேடிப்போக வேண்டியதில்லை. தூயமனம் உள்ளவனே கடவுள். உண்மைப் பொருளுணர்ந்தவன் எந்த அளவுக்கு பிறர் மகிழ நடந்து கொள்கின்றானோ? அதுவே அறம், அதுவே தவம், அதுவே ஞானம், அதுவே முக்தி. அதுவே உண்மை ஆன்மீகம்.