Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4048

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், உலகத்தில் சென்ற காலம், வருங்காலம், நிகழ் காலம் என்கிற முக்காலமும் உணர்ந்த முருகப்பெருமான் பிரச்சனைகள் உருவாவதற்கு முன்னரே, உணர்ந்து பிரச்சனைகள் வருவதற்கு முன்பே தீர்த்து விடுவான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4047

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால், பக்திக்கும், யோகத்திற்கும், ஞானத்திற்கும், வீடுபேற்றிற்கும் முருகப்பெருமான்தான் தலைவன் என்று அறிகின்ற அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 4046

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கடவுள் முருகப்பெருமான்தான் என்பதை அறிய வேண்டும். முருகப்பெருமான் ஜாதி, மதம், இனம் கடந்த முழுமுதற் கடவுள் என்பதை அறிவதே சிறப்பு அறிவாகும்.

குரு உபதேசம் – 4045

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால், பொறாமை குணமும், பேராசையும், அளவு கடந்த கோபமும், பிறர் மனம் புண்படும்படி பேசுதலும் ஆகிய குணக்கேடுகளெல்லாம் பல ஜென்மங்களிலே செய்திட்ட பாவங்களினாலேதான் உண்டானது என்பதை அறியலாம். மாபெரும் தன்னிகரற்ற புண்ணியவானாகிய முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி பூஜித்தால் பொறாமை குணம் நீங்கும், பேராசை நீங்கும், கோபம் நீங்கும், பிறர் மனம் புண்படும்படி பேசுகின்ற குணக்கேடு நீங்கிவிடும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4044

முருகனை பூஜித்து ஆசிபெற்றிட, உயிர்களிடத்து செலுத்துகின்ற அன்பே பக்தியாக மாறும். அந்த பக்தியே இறைவனிடத்து ஆசிபெற உறுதுணையாய் வரும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 4043

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், ஆறறிவு உள்ள மனிதனுக்கு மிகமிக பொருத்தமானது சைவ உணவே என்பதும், அதுவே இயற்கை அவனுக்கு அளித்த நியதி என்பதையும் அறியாமல் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணுவது என்பது கடவுள் கொடுத்த அறிவை புரிந்து கொள்ளவில்லை என்றும், ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாமல் உயிர்க்கொலை செய்த பாவத்தால் மீண்டும் மீண்டும் பிறவிப்பிணிக்கு ஆளாகி கடவுள் அருளிய மரணமிலாப் பெருவாழ்வை கடைசி வரை பெற முடியாமல் போய்விடுகிறான் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் திருவடிகளைப் … Read more

குரு உபதேசம் – 4042

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், ஒரு நொடிக்குள் உலகினில் உள்ள எல்லா செயல்களையும் அறிந்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் அற்புதமான ஆற்றல் உடையவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4041

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், எல்லாவற்றையும் நொடியில் ஆராய்ந்து நிலையான முடிவை சிறப்பாக எடுத்து ஆட்சி செய்திடுவார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4040

முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால், முனிவர்களுக்கெல்லாம் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற அறிவை பெறலாம்.