Prasanna
குரு உபதேசம் – 3712
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஆன்மீகம், அரசியல், விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம், இசை, ஓவியம் என கலைகள் அனைத்திற்கும் முருகனே தலைவன் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3711
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. புண்ணிய செயல்களை செய்து புண்ணியத்தை பெறுவதற்கும், பூஜைகள் செய்து பூஜாபலத்தை பெறுவதற்கும் புண்ணியபலத்தால், பூஜைபலத்தால் ஞானிகள் ஆசியைப் பெற்று இனிபிறவா நிலையை அடையும் மார்க்கத்தை அறியவும் முருகப்பெருமான் அருள் இருந்தால்தான் முடியும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3710
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பாதிக்கப்பட்டோரெல்லாம், தடுமாறுகின்றோரெல்லாம் முருகன் திருவடிகளைப் பற்றி மனமுருகி பூஜித்திட்டால் எல்லாம்வல்ல பரப்பிரம்ம நாயகன், சர்வ வல்லமை பெற்ற முருகப்பெருமானால் பக்தர் தம் வேண்டுகோள் ஏற்கப்பட்டு தக்க பாதுகாப்பையும், தக்க நீதியையும் அந்த ஆதிமூல ஞானத்தலைவன் முன்னின்று வழங்குவதாடு மக்களை கதறச் செய்தவர்களுக்கு தக்க பதிலும் தருவான் என்பதையும் அறியலாம்.