Prasanna
குரு உபதேசம் – 3703
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. புண்ணியபலம், அருள்பலம் என்ற சொல்லிற்கே மூலகாரணமாக இருப்பவனே முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3702
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. காலையில் எழுந்த உடனேயே பன்னிரண்டு முறை “ஓம் அகத்தீசாய நம” என்றும், இரவு படுக்கும் முன் பன்னிரண்டு முறை “ஓம் அகத்தீசாய நம” என்றும் கூறி நாமஜெபம் செய்து வரவர, நோயற்ற வாழ்வும், வறுமையில்லா வாழ்வும் பெற்று நீடிய ஆயுளையும், விபத்தில்லா வாழ்வை வாழும் வாய்ப்பையும் பெறுவார்கள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3701
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கடவுள் முருகன்தான் என்பதை அறியும் உண்மை அறிவைப் பெறலாம். உண்மைக் கடவுளான முருகனை மனமுருகி பூஜிக்கும் வாய்ப்பை பெறலாம், சைவத்தை கடைப்பிடிக்க தக்க சூழ்நிலையும், மன உறுதியும் பெறலாம். சைவத்தை தடையின்றி கடைப்பிடிக்கலாம். அன்னதானம் செய்வதற்குரிய வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெற்று புண்ணியவானாகலாம். புண்ணியத்தைப் பெருக்கி பெருக்கி, மரணமிலாப் பெருவாழ்வை அடைகின்ற மார்க்கத்தையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.