Prasanna
குரு உபதேசம் – 3613
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஜோதி வழிபாட்டில் மட்டுமே அபிஷேகம் என்ற பெயரிலே உணவுப்பொருளை வீணாக்க தேவையில்லை, மலர்கள் தேவையில்லை, அபிஷேகம் தேவையில்லை, அலங்காரம் தேவையில்லை, பொருள் செலவில்லை, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்க தேவையில்லை, எந்தவொரு சடங்கோ, சம்பிரதாயமோ தேவையில்லை, இப்படி எல்லாவிதத்திலும், எந்த மதத்தினருக்கும், எந்த இனத்தவருக்கும் ஏற்றதும், உருவமற்றதும், கடவுளின் உண்மைநிலையை உணர்த்த வல்லதுமான ஜோதி வழிபாடு மட்டுமே. அதுவே உண்மையும் கூட. கடவுளின் வடிவம் ஜோதி வடிவமே என்பதை … Read more
குரு உபதேசம் – 3612
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானின் முழுமையான ஆசியைப் பெற, உலக உயிர்களுக்கு தொண்டு செய்தால்தான் முடியும் என்பதையும், உலக உயிர்களுக்கு அயராது தொண்டு செய்தால்தான் உலக உயிர்களின் ஆசியைப் பெற முடியும் என்பதையும் உணர்வார்கள். அப்படி உலக உயிர்களுக்கு தொண்டு செய்யுங் காலத்து வேறெதிலும் நாட்டமாக இல்லாமல் கிடைத்ததைக் கொண்டு திருப்திபடுத்திக் கொள்ளும் மனோநிலையை பெறுவார்கள்.
குரு உபதேசம் – 3611
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… கடவுள் இல்லை, பாவ புண்ணியம் இல்லையென்று சொல்கின்றவனைவிட, கடவுள் பெயரால் உயிர்க்கொலை செய்பவனே பாவி என்பதை அறியலாம்.