Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3607

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானிகள் நாமங்களை சொல்லி பூஜித்து ஆசி பெறுகின்ற மக்களுக்கு, முருகனருளால் உணவு, உடை, தங்குமிடம் மற்றும் தகுதியுள்ள நட்பும் அமையப்பெற்று நலமான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3606

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இவ்வுலகம் தோன்றியது முதல் இதுவரையிலும் பலபல யுகங்கள் கடந்துள்ள போதும், இனியும் யுகயுகமாக ஞானத்தின் தலைவனாக இருந்து அருள் செய்வது முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3605

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அறம், பொருள், இன்பம், வீடுபேற்றினை அறிவதற்கும், அதை கடைப்பிடித்து வெற்றி பெறுவதற்கும் முருகப்பெருமானின் திருவடியே துணை என்று அறிகின்ற அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 3604

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஆறறிவு படைத்த மனிதன் பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணர்வதும், அந்த உயிர் படுகின்ற துன்பத்திலிருந்து, அவ்வுயிர்களை காக்கவும் செய்வதே சிறப்பறிவு என்று அறியலாம். அவ்வாறு செய்யாமல் இருப்பதும், உணர முடியாமல் இருப்பதும் அறிவு பெற்றதன் பயன் யாதுமில்லை என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3603

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானநூல் என்பவை ஞானியர் திருவடிகளைப் பற்றி பூஜிக்க தூண்டுவதாயும், ஞானமளிக்க வல்லதாயும் இருக்க வேண்டும். அதுவும் ஞானபண்டிதனது பெருமைகளையும், ஞானபண்டிதன் திருவடிகளைப் பற்ற ஏதுவாய் உள்ள நூல்கள் மிகவும் பயனுள்ளதாகும். அதிலும் மகான் அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம், திருப்புகழ், நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுபடை போன்ற நூல்கள் படிப்பது, முருகனது அருளை பெற மிகவும் பயனுள்ளது என்பதும், முருகனைப் பற்றிய இந்த நூல்களை படித்து அதன்படி நடந்திட வெகுவிரைவில் ஞானமடையலாம் என்பதையும் … Read more

குரு உபதேசம் – 3602

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… நவகோடி சித்தரிஷி கணங்கள் அனைவருமே முருகப்பெருமானின் தாயினும் மிக்க தயவுடை தனிக்கருணையைப் பெற்று முருகனை வணங்கி வணங்கி ஞானிகளானார்கள் என்பதும், ஞானிகள் முற்றுப்பெற்று முருகப்பெருமானோடு இரண்டற கலந்து விட்டனர் என்பதையும் அறியலாம். ஆதலினால் ஞானபண்டிதனின் திருவடியைப் பற்றி பூஜிப்பதும், அகத்தியர் முதல் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், அரங்கர் வரையிலான ஞானிகளில் எவர் திருவடியைப் பற்றி பூஜித்தாலும் அந்த பூஜையும் முருகனை வணங்கினதாகவே ஆகும் என்றும், ஞானிகள் இயற்றிய நூல்கள் எதுவாயினும் … Read more