Prasanna
குரு உபதேசம் – 3601
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானை பூஜிக்க பூஜிக்க குருவருளைப் பெற்று, ஞானசித்தர் காலத்தில் வாய்ப்பை பெற்றும், பெற்ற வாய்ப்பை பயன்படுத்தி கடைத்தேறிடவும் அருள்வான் முருகன்.
குரு உபதேசம் – 3600
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… நமக்கு வருகின்ற பிரச்சனைகளை விரைந்து புரிந்து கொள்ளவும், அதற்கான முடிவுகளையும், தீர்வுகளையும் உடனுக்கு உடன் செய்து முடிக்கலாம் என்பதையும் அறியலாம்..
குரு உபதேசம் – 3599
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… எந்த அளவிற்கு முருகப்பெருமான், அகத்தியர் முதல் வள்ளல் பெருமானார் வரையான முற்றுப்பெற்ற ஞானிகள் நாமங்களை நாமஜெபம் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு அறிவு தெளிவும், ஜீவதயவும், ஞானமும் பெருகும் என்பதை அறியலாம்.