Prasanna
குரு உபதேசம் – 3589
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஆசிபெறுபவனுக்கு உணவு, உடை, தங்கும் வசதிகளை அருள்வதோடு அவனது சுற்றத்தார்களும் இந்த வாய்ப்பையும் ஆசியையும் பெறுவார்கள் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3588
முருகனை வணங்கிட, தொன்மையான இந்த உலகத்தில் ஞானம் என்ற சொல்லும், அதைத் தொகுத்து சொல்கின்ற நூல்களும், முருகப்பெருமானால் தான் உண்டாயின என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3587
முருகனை வணங்கிட, உயிர்க்கொலை செய்து உண்பது பாவம் என்று முருகப்பெருமானால் உணர்த்தப்பட்டு, உயிர்க்கொலை செய்து உண்ணும் கொடிய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள் என்பதை அறியலாம்.