Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3573

முருகா என்றால், பிற உயிர்கள் படுகின்ற துன்பத்தை உணரவும், அதை நீக்கவும், அதற்குரிய வாய்ப்பினைப் பெற்றும், ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். பிற உயிர்கள் படுகின்ற துன்பங்களைக் கண்டு மனமிரங்கி, அவ்வுயிர் படுகின்ற துன்பத்தை உணர்ந்து, அவ்வுயிரின் துன்பத்திலிருந்து அவ்வுயிரை காப்பாற்றி அவ்வுயிர்களை மகிழ்வித்து வாழ வைப்பதே தவம் என்பதை அறியலாம். இப்படிப்பட்ட தவமே ஜீவதயவாகும். ஜீவதயவு பெருக பெருக மனிதனாய் பிறந்து மிருகமாய் வாழ்கின்றவன்கூட, மிருகாதி தன்மையை இழந்து மனிதன் மனிதனாவான். மனிதனாகிய மனிதன் ஜீவதயவு பெருக … Read more

குரு உபதேசம் – 3572

முருகா என்றால், அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றைப் பற்றி அறியச் செய்து, அதற்குரிய அறிவையும் தந்து, வைராக்கியமும் அளித்து நம்மை நிலை உயரச் செய்வான் முருகன் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3571

முருகா என்றால், சிந்தையும் தூய்மையாகும், சொல்லும் தூய்மையாகும், செயலும் தூய்மையாகும், மற்றைய அனைத்தும் தூய்மையாகி முருகனது ஆசியைப் பெறலாம்.

குரு உபதேசம் – 3570

முருகா என்றால், சைவ உணவில் நம்பிக்கையும், உயிர்க்கொலை செய்வதால் வருகின்ற பாவத்தையும் முழுமையாக உணர்ந்து, உயிர்க்கொலை செய்து உண்கின்ற பாவத்திலிருந்து விடுபடுவதோடு, ஏற்கனவே செய்த பாவங்களிலிருந்து விடுபட, உயிர்களுக்கு இரங்கி இதம் புரிந்து ஜீவதயவை பெருக்கி முன்ஜென்ம பாவங்களிலிருந்து விடுபடும் வாய்ப்பையும் பெறுவான். நம்பிய தொண்டன் வேண்டுகோளை ஏற்று பெருங்கருணை கொண்டு முருகன் முன்னிறங்கி எந்த உயிர்களை கொன்று பாவியானோமோ அந்த உயிர்கள் வாழ்வதற்கு ஆதரவளித்து தொண்டுகள் செய்து பிற உயிர்களது ஆசியைப் பெற்று உயிர்களின் சாபங்களிலிருந்து … Read more