Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3537

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி, தொடர்ந்து பூஜை செய்யசெய்யத்தான் முருகப்பெருமான் தான், ஞானத்தின் கடவுள் என்றும், யாருக்கும் எளிதில் அகப்படாத முருகனே ஞானத்தலைவன், அவனே அனைத்திற்கும் காரணமாகியுள்ளான் என்பதையும் உணர்ந்து முருகனது திருவடி துணையின்றி யாதொன்றும் ஆகாது என்பதையும் அறிந்து தெளியலாம். தெளிந்து தொடர்ந்து பூஜை செய்ய, பூஜை செய்ய முருகனது திருவருளை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

குரு உபதேசம் – 3536

முருகனை வணங்கிட, இப்பிறப்பு, மறுபிறப்பு, இனி பிறவாமை ஆகிய மூன்றையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 3535

முருகனை வணங்கிட, காமத்திற்கு காரணமாக இருக்கின்ற இந்த உடம்பே, ஞானத்திற்கும் காரணமாக இருக்கின்றது என்பதை அறிகின்ற அறிவும், மரணமிலாப் பெருவாழ்விற்குரிய வாய்ப்பையும் இந்த உடம்பினால்தான் பெற முடியும் என்றும் அறியலாம்.