குரு உபதேசம் – 3495
முருகனை வணங்கிட, கொடுக்கக் கூடிய மனமும், அதற்குரிய வாய்ப்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக்கூடிய அறிவையும் முருகப்பெருமான்தான் அருள்வான் என்பதையும் அறியலாம்.
முருகனை வணங்கிட, கொடுக்கக் கூடிய மனமும், அதற்குரிய வாய்ப்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக்கூடிய அறிவையும் முருகப்பெருமான்தான் அருள்வான் என்பதையும் அறியலாம்.
முருகனை வணங்கிட, எந்த உடம்பு காமத்திற்கு காரணமாக இருக்கின்றதோ, அந்த உடம்பே ஞானத்திற்கும் காரணமாக உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
முருகனை வணங்கிட, யோகத்துக்கும், ஞானத்திற்கும் தலைவன் முருகப்பெருமானே. முருகப்பெருமான் அன்றி, மனிதர்கள் வாசி நடத்தி கொடுப்பது என்பதெல்லாம் வெறும் பொய்யென்றும், ஏமாற்று வேலை என்றும், அவர்களை முருகப்பெருமான் தண்டிப்பார் என்பதையும் அறியலாம்.