Prasanna
குரு உபதேசம் – 4018
முருகப்பெருமானை வணங்கிட, இந்த பிரபஞ்சத்திலே எந்த ஒன்று தோன்றினாலும் அது இயற்கை நியதிக்கு உட்பட்டு தோன்றிய அனைத்தும் ஒரு கால பரியந்தத்தில் அழிந்தே தீரும். ஆனால் எல்லாம்வல்ல முருகன் அருள் கிடைக்குமானால் அழியாது அழிவிலிருந்து மீண்டு, மீண்டும் தோன்றாமல் தம்மை காத்து என்றும் அழியா நிலைதனை பெறலாம். அதாவது பழமானது மேலும் பழுத்தால் வீழ வேண்டும் என்பது இயற்கை நியதி. ஆனால் ஞானபண்டிதன் ஆசியை பெற்றால் பழம் மீண்டும் காயாகும். காயான பழம் மீண்டும் பழம் ஆகவே … Read more
குரு உபதேசம் – 4014
முருகனை வணங்கிட, ஞானவாழ்வை பெறவும், மரணமிலாப் பெருவாழ்வை பெறவும், மனிதனாய் பிறந்த அனைவருக்கும் வாய்ப்புகள் இருந்தும் அவர்களால் பெற முடியாமல் போனதற்கு காரணம் என்னவெனில் அவரவர் முன்ஜென்மங்களே உயிர்களை கொன்றதாலும், புலால் உண்டதாலும், பிறர் சொத்தை அபகரித்ததாலும், நன்றி மறந்ததாலும், வஞ்சனை செய்து ஏமாற்றியதாலும் இப்படி பலபல வழிகளிலே அவர்கள் செய்திட்ட பாவங்களெல்லாம் பாவவினைகளாக மாறி வாய்ப்பிருந்தும் ஞானத்தைப் பற்றியோ மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றியோ அறியவொட்டாமல் தடை செய்கிறது. அப்படியே அறிந்து கொண்டாலும் அந்த துறையில் அவன் … Read more
குரு உபதேசம் – 4013
முருகனை வணங்கிட, காலத்தையும் காலனையும் வென்ற கந்தபெருமான் திருவடியைப் போற்றி வணங்கிட காலனை வெல்லும் உபாயத்தினை பெறலாம். அதுவே சிறப்பறிவாகும்.
குரு உபதேசம் – 4012
முருகனை வணங்கிட , ஜீவதயவு, ஜீவகாருண்யம், அன்பு செலுத்தல், தயவு காட்டல், கருணை செய்தல், விட்டுக் கொடுத்தல், மன்னித்தல், தீயன மறத்தல், அரவணைத்தல், ஒத்து போதல் என ஜீவர்களுக்கு மகிழ்வையும், நன்மையும் பயக்கக்கூடிய அனைத்து நல்ல பண்புகளுமே முருகன்தான் என்பதை அறியலாம். ஆதலின் உலகினிலுள்ள அனைத்து நற்பண்புகளுமே முருகன் அருள்கொடைதான் அவனே நற்பண்பாய் நம்முள் தோன்றுகிறான், நற்பண்பே முருகனாயும் ஆகிறான் என்பதை அறிவதே சிறப்பறிவு அதை கற்பதே சாகாக்கல்வி. தயவு என்பதே முருகனாகும், முருகப்பெருமானே தயவாகும்.