Prasanna
குரு உபதேசம் – 3420
உடல் மாசையும், உயிர் மாசையும் அறிந்து நீக்கி மனமாசற்றவனான மாபெரும் தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3419
முன் செய்த வினைகள் காரணமாக வறுமை, நோய், பிணி, பகை இன்னும் அநேக துன்பங்கள் வந்தாலும் அதை முருகப்பெருமானின் ஆசியால் வெல்லலாம் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3418
முருகா என்றால், வெல்லற்கரிய மாமாயை வென்று வெற்றிகண்ட வேல்முருகனைப் போற்றி துதித்து வாழ்வதே சிறப்பறிவாகும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3417
முருகா என்றால், முதன் முதலில் காமதேகத்தை வென்று ஒளி உடம்பைப் பெற்ற மாவீரன் முருகப்பெருமான் என்று அறியலாம். முருகப்பெருமானின் ஆசிபெற்ற மக்களுக்கு, காமதேகம் நீங்கி ஒளிதேகம் பெற்று என்றும் அழிவிலாத மரணமிலாப் பெருவாழ்வைப் பெறலாம் என்றும் அறியலாம்.