Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3394

முருகப்பெருமானே முற்றுப்பெற்ற முனிவன் என்றும், நம்மை காத்து இரட்சிக்க கூடிய கடவுள் என்றும் அறிகின்ற அறிவைப் பெறலாம்.

குரு உபதேசம் – 3393

மனித வர்க்கம், சிந்திக்கவும் செய்ய முடியாத மிகப்பெரிய தவத்தை செய்து, காமதேகத்தை நீர்த்து ஒளிதேகம் பெற்ற முருகப்பெருமான் திருவடியை பூசித்து ஆசிபெற நினைப்பதுவே சிறந்த அறிவாகும். முருகப்பெருமான் உலக நலம் கருதியே அவதரித்த முதுபெரும் ஞானியும், கடவுளும் ஆவான். முருகா என்று சொல்லுகின்ற அத்தனைபேரும் எத்தகைய பாவம் செய்திருந்த போதிலும் சரி, அத்தனை பாவங்களும் நீங்கி தன்னைப் பற்றி அறியக் கூடிய சிறப்பு அறிவு உண்டாகும். முருகன் திருவடியை பூசிக்காதவனுக்கு முக்தி இல்லை, இல்லை என்பது சத்தியமாகும்.

குரு உபதேசம் – 3392

மும்மலமாகிய சிறையில் ஆன்மா அகப்பட்டதை அறிந்து, அந்த சிறையிலிருந்து விடுபட்ட முதல் தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறிந்து, முருகப்பெருமானின் திருவடியைப் பற்றி பூசித்து ஆசி பெற்றாலன்றி மும்மல சிறையில் அகப்பட்ட ஆன்மாவை விடுவிக்க முடியாது என்பதை உறுதியாக நம்பி தெளிவடைய வேண்டும். இந்த தெளிவை பெறுவதே சிறப்பறிவாகும். இதை கற்பதே சாகாக்கல்வியாகும்.