Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3385

சைவத்திற்கும், பக்திக்கும், முக்திக்கும் சித்திக்கும் முற்றுப்பெற்ற மரணமிலாப் பெருவாழ்விற்கும் முருகனே தலைவன் என்று அறியலாம். முருகப்பெருமானின் ஆசியைப் பெற்று, சித்திபெற்ற மக்கள் அநேகம் அநேகம். இனி சித்திபெற இருப்பவரும் அநேகம் அநேகம். முக்திக்கும் சித்திக்கும் முருகன் திருவடியே துணை என்று அறிவதே அறிவாகும்.

குரு உபதேசம் – 3384

பூஜை செய்வதற்குரிய அறிவும், அதற்குரிய தக்க சூழ்நிலையும் அமைந்து, முருகன் அருள் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறலாம்.

குரு உபதேசம் – 3383

மரணமிலாப் பெருவாழ்வையும், ஞானத்தையும் முதன் முதலாக கண்டுபிடித்தவனும், அறிந்தவனும், அறிந்து கடைத்தேறி வெற்றி பெற்ற முதல் மனிதனும் முருகனே என்றும், மனிதன் கடவுளும் ஆகலாம் என்ற பேருண்மையையும் அவன்தான் முதன்முதலில் கண்டவனும், அடைந்தவனும் ஆவான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3382

இருவினையற்ற பெருந்தெய்வம் முருகன் திருவடியே, இருவினையறுக்க துணையாய் வரும் என்பதை அறியலாம். வினை வென்ற திருமுருகன் திருவடித் துணையின்றி, வேறொன்றாலும் வினை வெல்ல முடியாது என்பதையும் அறியலாம்.