Prasanna
குரு உபதேசம் – 4005
முருகா என்றால், பதி ஞானம் பெற்ற முருகன் திருவடியே கதி பெற காட்டுமே உண்மை.
குரு உபதேசம் – 4004
முருகா என்றால், வீடு கட்டுதல், சுப செயல்கள் செய்தல், ஆக்க பணிகள் செய்தல் என்ற அனைத்திற்கும் கடன் வாங்கி செய்யாமல் இருக்கின்ற சூழ்நிலைக்கேற்ப வாழ்கின்ற மனவலிமை பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
குரு உபதேசம் – 4003
முருகா என்றால், பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணக் கூடிய வாய்ப்பையும், சந்தர்ப்பத்தையும் நமக்கு உண்டாக்கி அமைத்துத் தருவான் முருகப்பெருமான்.