Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3952

முருகா என்றால், முதன்மைத் தலைவன் முருகன் என்பதை அறிந்தும், அவரது ஆசியினால்தான் நவகோடி சித்தர்களும் உருவாகியுள்ளனர் என்பதையும் அறியலாம். எனவே அகத்தீசா என்றாலும், அருணகிரிநாதா என்றாலும் பதஞ்சலிமுனிவா என்றாலும், பட்டினத்தடிகள் என்றாலும், நந்தீசா என்றாலும், நந்தனார் என்றாலும் நவகோடி சித்தர்களுள் யாரை அழைத்தாலும், அழைப்பது யாரை அழைத்தாலும் அந்த அழைப்புகள் அனைத்தும் முருகனது திருவடிகளையே சென்றடையும். “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று சொல்லுங்கள். நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசியை பெறுங்கள்.

குரு உபதேசம் – 3951

முருகா என்றால், ஏழைகளுக்கும், பிற உயிர்களுக்கும் பசியாற்றுவிப்பதற்குரிய வாய்ப்பையும் பெறலாம். தாம் அறிந்த உண்மைப் பொருளாம் ஞானக்கருத்தை சொல்வதற்கான அறிவையும் பெறலாம். ஞானமென்பதே முருகன் திருவடிதான் என்றும், அவன் திருவடியைப் பற்றி பூசிப்பதே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்றும், அவன் திருவடிப் பூசையே மரணமிலாப் பெருவாழ்வை தரும் என்றும் அறியலாம். முருகப்பெருமான் மரணமிலாப் பெருவாழ்வை முதன் முதலில் பெற்றவன் என்று உணர்வதோடு ஒரே தன்மை உடையவனாய் இருப்பவன். முருகப்பெருமானுக்கு உடல் வளர்ச்சியும், உடல் தளர்ச்சியும் இல்லை. ஓவியம் போன்று … Read more

குரு உபதேசம் – 3950

முருகா என்றால், அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம்.