Prasanna
குரு உபதேசம் – 3923
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானிகள் அத்துணைபேரும் நரை, திரை, மூப்பு, பிணி, மரணத்தை வென்றவர்கள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3920
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… மனிதவர்க்கத்திலேயே முதன்முதலில் உடல்மாசு, உயிர்மாசு, மனமாசுகளை கண்டறிந்து நீக்கி வெற்றி பெற்று மகானாக மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றவனாக யாவருக்கும் எட்டா அருட்ஜோதி நிலைதனை அடைந்து முற்றுப்பெற்றவன் மகான் முருகப்பெருமான் மட்டுமே. அவனே இவ்வுலகின் தோன்றிய உயிர்கள் ஏன் தோன்றுகிறது? ஏன் வளர்கிறது? ஏன் இறக்கிறது? என்பதற்கும் அவை வாழும் போது சீராக வாழாமல் நரை, திரை, மூப்பை அடைவது ஏன்? ஏன் நோயுறுகிறது? ஈளை இருமல் எதனால் வந்தது? மூப்பை … Read more
குரு உபதேசம் – 3919
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம்.
குரு உபதேசம் – 3918
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் ஆசியைப் பெற வேண்டுமானால், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், முருகனது அருளால் வருகின்ற ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறலாம் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3917
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பக்திக்கு தலைவன் முருகப்பெருமான்தான் என்றும், முருகனது ஆசியை பெறுவதே ஜென்மத்தைக் கடைத்தேற்ற துணை என்பதையும் அறியலாம்.