குரு உபதேசம் – 3868
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… எல்லா ஞானிகளுக்கும் மூத்தோனும், ஞானவர்க்கத்தின் தலைவனுமாகிய முருகப்பெருமானது நாமங்களை மனம் உருகி “முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ பூஜித்திட்டால், பூசிப்பவர் பஞ்சமா பாவியாகினும் சரி, அவனது பாவங்கள் பொடியாகுவதோடு, முருகன் நாமங்களை சொல்லிய அக்கணமே நவகோடி சித்தரிஷி கணங்களின் பார்வைக்கும் அவன் ஆளாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றும் மார்க்கமதிலே வந்துவிடுவான்.