Prasanna
குரு உபதேசம் – 3724
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கடல்கொந்தளிப்பு, நிலநடுக்கம், புயல், மிகுதி மழை ஆகியவை முருகப்பெருமானின் ஆசியால் கட்டுப்படுத்தப்படும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3723
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சைவ உணவை கடைப்பிடித்து, முருகப்பெருமான் மீதும் ஞானிகள் மீதும், பக்தி செலுத்தி அன்னதானம் செய்கின்ற மக்களுக்கு ஞானசித்தர் ஆட்சியிலே முருகனருளால் பதவியைப் பெறுகின்ற வாய்ப்பு கிடைக்கும் என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 3722
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. திரைப்படங்களில் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, வழிப்பறி, பழிக்கு பழி வாங்குதல் என்று பலவகையிலும் மனதை பாதிக்கக்கூடிய நிகழ்ச்சிகள் மிகுதியாக இருப்பதால் அதை பார்க்காமல் இருந்தால் மனம் அமைதியுறும் என்பதை அறியலாம்.