Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

தினம் ஒரு அகவல் 11

11. ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி   ஒன்று என இரண்டு என ஒன்றிரண்டு என இவை அன்று என விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !   இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள எவ்வித தத்துவங்களிலும் அடக்க முடியாமல் தனித்து பிரகாசிக்கும் அருட்பெருஞ்ஜோதியே !

தினம் ஒரு அகவல் 10

10. ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள் ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி   ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள் ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி   ஆன்ம குழப்பமான சந்தேகங்களையும், மயக்கத்தையும் மற்றும் பசி, தாகம், பிணி, நோய், முதுமை, அச்சம் போன்ற ஐந்துவகையான உடல் துன்பங்களையும் முற்றிலும் நீக்கி பூரணத்தை அருளியவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

தினம் ஒரு அகவல் 07

7. ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும் ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி   ஊக்கமும் உணர்ச்சியும் ஒளி தரும் ஆக்கையும் ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி !   தவத்திற்கான ஊக்கத்தையும், உண்மையான ஆன்ம உணர்ச்சியையும் கொடுத்து நிலையான ஒளி தேகத்தை தர வல்லவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

தினம் ஒரு அகவல் 06

6. உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல் அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி   உரை மனம் கடந்த ஒரு பெருவெளி மேல் அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி !   உரைமனங் கடந்த:  உரைக்கும் மொழிகளுக்கும், சிந்திக்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட இறைவன். அரைசுசெய்: ஆட்சி செய்யும். ஒப்பற்ற பிரபஞ்சத்தில் ஆட்சி செய்யும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லாலும், சிந்தனையாலும் அறிய முடியாதவராவார்.

தினம் ஒரு அகவல் 05

5. ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய் ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி   ஈனம் இன்றி இக பரத்தின் இரண்டின் மேற் பொருளாய் ஆனல் இன்றோங்கிய அருட்பெருஞ்ஜோதி !   ஈனம் – குறைகள் ஈனமின்றி – குறைபாடுகளற்ற ஆனல் இன்றி – நிகரில்லா இகம் – இந்தப் பிறவியில் உள்ள இன்ப துன்பங்கள் – நிலையற்றவை பரம் – முக்தி,                            மோட்சம் – நிலையானவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையற்ற உலக இன்பங்கள் (இகம்), நிலையானதாகக் கருதப்படும் … Read more

தினம் ஒரு அகவல் 04

4. இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய் அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய் அகம் அறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி ! இகநிலைப் பொருள் : இந்த உலகத்தில் உள்ள பொருள் பரநிலைப் பொருள் : பிரபஞ்சத்தில் உள்ள பொருள் அகம் அற : உள்ளேயும் வெளியேயும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பிரபஞ்சத்தின் அணுவிலும் அண்டத்திலும் (உள்ளேயும் வெளியேயும்) எவ்வித பேதமும் இன்றிப் பூரணமாக நிறைந்திருக்கும் சத்தியப் பொருளாவார்.

தினம் ஒரு அகவல் 03

ஆகம முடிமேல் ஆரண முடிமேல் ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !   ஆகமம் :  சைவ சித்தாந்தம் ஆரணம் : வேதாந்தம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சைவ சித்தாந்த தத்துவங்கள் மற்றும் வேதங்கள் போன்ற வரையறைக்குள் அடங்காத உயர்ந்த பேரொளியாவார்.

தினம் ஒரு அகவல் மகான் இராமலிங்க சுவாமிகள் 02

2. அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ் அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி அருட் சிவநெறி சார் அருட்பெருநிலை வாழ் அருட் சிவபதியாம் அருட்பெருஞ்ஜோதி !   அருட்சிவ நெறி : இதுவே சுத்த சன்மார்க்கம். இங்கு ‘சிவம்’ என்பது அழியாத பேரின்ப நிலையைக் குறிக்கிறது. அருட்பெருநிலை : மரணமில்லாப் பெருவாழ்வு நிலை, முத்தி நிலை. அருட் சிவபதி : இறைவன் இந்த உயர்ந்த நெறிக்கும், அந்த அழிவற்ற நிலைக்கும் தலைவன். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இறைவன்தான், ஞானிகள் அடைய … Read more

தினம் ஒரு அகவல் மகான் இராமலிங்க சுவாமிகள் 01

“அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை !!” 1. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி இறைவனின் உண்மை வடிவம் பேரொளியான அருட்பெருஞ்ஜோதியாகும். அந்த ஒளியின் தன்மை ஜீவகாருண்யமான பெருங்கருணையாகும். இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களிடத்தும் கருணையோடு அன்பு செலுத்துவதே இறைவனின் தனித்தன்மையாகும். இதை மனிதன் உணர்ந்து கடைப்பிடித்து செயலாற்றுவதே மீண்டும் பிறவாமையான மரணமில்லாப் பெருவாழ்வு நிலைக்கு அழைத்துச் செல்லும். இறைவன் வடிவம் : பேரொளி (அருட்பெருஞ்ஜோதி). இறைவன் தன்மை : எல்லையற்ற கருணை (தனிப்பெருங்கருணை). … Read more