Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4443

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. பிற உயிர்களுக்கு கருணை காட்டுதல், விட்டுக் கொடுத்தல், அனுசரித்து போதல், மன்னித்தல், மறத்தல் போன்ற பண்புகள் பெருக பெருக இயற்கை சீற்றம் வராது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4442

முருகப்பெருமான் திருவடிபற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. வறுமையற்ற வாழ்வும், கவலையற்ற வாழ்வும், விஷஜந்துகளால், விபத்தினால், இயற்கை சீற்றங்களினால், முன்ஜென்ம பாவங்களினால், மரண கண்டங்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏதும் அணுகாத அமைதியான வாழ்வை வாழலாம். மனஅமைதியுடன் கூடிய ஆரோக்கியமும் நீடிய ஆயுளைப் பெறலாம். மனக்குழப்பத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் மருந்து முருகனின் நாமங்களே என்பதையும் அறியலாம். மன அழுத்தமும், மனக்குழப்பமும், முன்ஜென்ம பாவங்களினால்தான் வருகின்றதனால் பயிற்சிகளை செய்வதின் மூலம் ஒருபோதும் மனக்குழப்பத்திலிருந்து விடுபட முடியாது, மனஅழுத்தமும் தீராது. ஜென்மஜென்மமாய் செய்த பாவத்தை பொடிப்பொடியாக்கும் … Read more

குரு உபதேசம் 4441

முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முதுபெரும் ஞானிகள் அருளிய, சிவபுராணம், திருமந்திரம், திருஅருட்பா போன்ற ஞான நூல்களை படித்து பூஜிக்கின்ற ஆர்வம் உண்டாகி பக்தி நூல்களைப் படித்து, மனமுருகி பூஜித்து முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றுகின்ற வைராக்கியம் வரும். முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றி பூஜிக்க பூஜிக்க குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள், சூதாடமாட்டார்கள், பிறர் மதிக்க ஆடம்பரமாக நடந்து கொள்ள மாட்டார்கள், வருவாய்க்கு உட்பட்டு செலவு செய்து சிக்கன வாழ்வை மேற்கொள்வார்கள், கடன் வாங்க மாட்டார்கள், எல்லாம்வல்ல இறைவன் … Read more

குரு உபதேசம் 4440

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. இதுவரை இவ்வுலகின் நிலவி வந்த சமய, சாதி, மத, ஆசாரங்களெல்லாம் வழக்கொழிந்துபோய் சமரச சுத்த சன்மார்க்க கொள்கையே நிலைப்படும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4439

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. இப்பிரபஞ்சத்தில் இன்று ஒருவன் ஒரு செயலை, அது நன்மையோ தீமையோ செய்வானாகில் அது மீண்டும் அவனுக்கே வந்து சேரும் என்பது மாற்ற முடியாத, மறுக்க முடியாத உண்மையாகும். அது சற்று முன்பின்னாகவோ அல்லது பல ஜென்மங்களிலோ அவனது ஆன்மாவைப் பற்றி கண்டிப்பாக தொடர்ந்து அதன் விளைவுகள் அவனை அடைந்தே தீரும் எனும் மாற்ற முடியாத மறுக்க முடியாத உண்மையை முருகனருளால் உணர்வார்கள். கடவுளின் பெயரால் ஆடு, கோழி போன்ற உயிர்களை பலியிட்டால் … Read more

குரு உபதேசம் 4438

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. ஞானத்திற்கு தலைவன் முருகனே என்பதை உணரலாம். ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான் உண்மைக் கடவுள் என்பதை உணர்ந்து வழிபட்டு கடைத்தேறிட உண்மை ஆன்மீகவாதிகளால் நாட்டினில் முருகனை வணங்குகின்ற மக்கள் அதிகரிப்பதினாலே முருகனை ஏராளமானோர் வணங்க வணங்க முருகனருளை அந்நாடு முழுமையாக பெறும். முருகனருளை பெற பெற மக்களிடையே ஜீவதயவு பெருகும், ஜீவதயவு பெருக பெருக உயிர்க்கொலை தவிர்க்கப்பட்டு சுத்த சைவநெறி பரவும், சுத்த சைவ நெறி பரவபரவ உலக உயிர்களெல்லாம் மகிழ்வுறும்.உலக உயிர்கள்மகிழ்வுற … Read more

குரு உபதேசம் 4437

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. தானமும், தவமும், யோகமும், ஞானமும் என மனிதன் கடைத்தேறி மரணத்தை வெல்லுகின்ற மார்க்கத்தின் படிநிலைகளையும், மனிதனின் வாழ்வை நெறிப்படுத்தும் சமுதாய சீர்திருத்த வழிமுறைகளையும் ஆதிமூலமாய் விளங்கி மனிதவர்க்கத்தின் ஒப்பற்ற தனிப்பெரும் தலைவனாய் விளங்கி ஞானமே வடிவினனாய் நின்று அருட்பெருஞ்ஜோதி சுடராய் சதகோடி சூரியபிரகாசமுடைய பேராற்றல் ஞானஜோதியாய் விளங்கி நின்று எல்லா உயிர்களுக்கும் இரங்கி இதம் புரிந்து அருளிக் காக்கின்ற ஆதிஞானத்தலைவன் முருகப்பெருமான்தான் தானத்திற்கும், தவத்திற்கும், யோகத்திற்கும், ஞானத்திற்கும் தலைவன் என்பதை அறியாமலும், … Read more

குரு உபதேசம் 4436

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. கண்மூடி மௌனமாக அமர்ந்திருப்பது தியானம் அன்று. மனதினுள் முருகப்பெருமான் திருவடிகளை எண்ணி முருகனது திருநாமங்களை மந்திர ஜெபமாக சொல்லி வணங்குவதே தியானம் என்று பொருள்படும். அதுவே தவமும் ஆகும். அதுவே ஆசி பெறும் வழியும் என்பதை உணரலாம்.

குரு உபதேசம் 4435

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. நவகோடி சித்தரிஷிகணங்களுக்கு தலைவனாய், முப்பத்து முக்கோடி தேவரிஷிகளுக்கும் தலைவனாய், நவகிரக நாயகர் தலைவனாய், மும்மூர்த்திகளுக்கும் மேலாய், சப்தரிஷிகளுக்கும் தலைவனாய், அஷ்டதிக்கு பாலகர்களுக்கும் தலைவனாய், நாற்பத்தி எட்டாயிரம் ரிஷிமார்களுக்கும், பதினான்கு லட்ச தேவர்களுக்கும் தலைவனாய் விளங்கி நின்று அருட்பேராற்றலாய் சதகோடி சூரியபிரகாசத்துடன் உலக உயிர்களிடத்தெல்லாம் நீக்கமற நிறைந்து நிற்கின்றவனும் மும்மூர்த்திகளுக்கும் எட்டாத முருகப்பெருமான் கலியுகத்தின் கொடுமைகளைக் கண்டு தானே நேரில் அவதாரமாக தோன்றி மனித ரூபத்திலே இவ்வுலகினில் வருகை தந்து உலகப்பெருமாற்றத்தை ஏற்படுத்தி … Read more