Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4594

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட்டால் : ஞானத்தலைவர் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற மக்களுக்கெல்லாம் ஞானவாழ்வு சித்திக்கும் என்பதை சத்தியமாக அறியலாம். ……………… சத்தியவான் நந்தனார் தாளிணை போற்றிட சித்தியும் உண்டாம், திடமாம் வாழ்வு. ஆற்றலாம் நந்தனார் அருளைப் போற்றிட ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். மாசற்ற நந்தனார் மலரடி போற்றவே ஆசற்ற வாழ்வும் அருளும் உண்டாம். வந்தித்தேன் நந்தனாரை வாழ்த்தினேன் சிந்தித்தேன் சித்தியும் பெற்றேனே. பாடுபெறும் நந்தனார் பாதம் பணிந்திட வீடுபேறு உண்டாம் விளம்பு. ஆற்றலாம் நந்தனார் அருளைப் … Read more

குரு உபதேசம் 4593

அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால் : ஞானிகள் திருவடியே நம்மை கடைத்தேற்றும் என்று அறியலாம்.

குரு உபதேசம் 4592

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட : நரகமும், சொர்க்கமுமாக இருக்கின்ற இந்த உடம்பை அறிந்து தவமுயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பதே ஞான சித்தியாகும் என்று அறியலாம்.

குரு உபதேசம் 4591

அகத்தீசனை பூஜை செய்து ஆசிபெற்றிட : ஞானம் என்பதே உடம்பு மும்மலத்தால் மாசுபட்டுள்ளதை அறிந்து, நீக்க முடியாத மும்மலத்தை நீக்கி உடம்பினை தூய உடம்பாக மாற்றுவதே ஞானம் என்கிற தவமாகும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4590

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட : சைவ உணவை கடைப்பிடிக்கவும், தூய மனதினை பெறவும், தயைசிந்தை பெற்று பெருகிடவும், பக்தி செலுத்திடவும் அருள் செய்து தவமுயற்சியினை மேற்கொள்ள செய்து முருகன் அருள் கூடிட தவத்தோன் ஆகிடலாம் என்பதை அறியலாம். ஒரு மனிதன் இகவாழ்வாகிய இல்லறம் சிறப்படைய சைவ உணவை கடைப்பிடித்தும், தூய மனதோடு தயைசிந்தையுடன் பக்தி செலுத்தினால்தான் இல்லறமும் சிறக்கும். இப்பண்புகளை தீவிரமாக கடைப்பிடித்தால்தான் துறவறமாகிய பரவாழ்வும் சிறக்கும். ஆதலினால் முருகன் அருளால்தான் ஒருவன் சைவ உணவை மேற்கொள்ளவும், … Read more

குரு உபதேசம் 4589

அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட : சைவ உணவும், தூய மனமும், தயை சிந்தையும், பக்தியும் தவமுயற்சிக்கு அடிப்படை ஆதாரம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4588

முருகப்பெருமானை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : பாலையும் நீரையும் பிரித்தெடுக்கும் அன்னப்பட்சியைப் போல் தூலதேகத்தின் மாசை நீக்கியும் சூட்சும தேகத்தை ஒளி பெறச் செய்தும் என்றும் அழிவிலாத ஒளி உடம்பை பெறலாம் என்று அறியலாம். மாற்றமாம் மணிவாசகர் மலரடி போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். நந்தனார் திருவடியை நாளும் போற்றவே சிந்தையும் தெளியும் திடமாம் சித்தியே. எந்தை வாசகன் இணையடி போற்றிட சிந்தையும் தெளியும் திடமாம் சித்தியே. சித்தியாம் வாசகம் தினமும் படித்திட முக்தியும் … Read more

குரு உபதேசம் 4587

அகத்தீசனை பூஜை செய்து ஆசிபெற்றிட்டால் : தூலதேகமாகிய நரகத்தையும் சூட்சும தேகமாகிய சொர்க்கத்தையும் அறியலாம்.

குரு உபதேசம் 4586

முருகப்பெருமானை பூஜித்து ஆசிபெற்றிட : தன்னையும் அறியலாம் தலைவனையும் அறியக் கூடிய வாய்ப்பை பெறலாம். நெற்றிக்கு மத்தியில் நிலைக்கும் வாசகத்தை உற்றுமே கற்றிட உள்ளம் உருகுமே ஆற்றலாம் மணிவாசகர் அருளை தினமும் போற்றியே மகிழ்வர் புண்ணியரே. வல்லவர் வழங்கிய வாசகம் கற்றிட தில்லையிலாடும் திருவடி தோன்றுமே.