Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4358

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்திட்டால்… ஒருவனது இலட்சியம் உலக நன்மைக்காக இருக்குமானால், உயர்ந்த நோக்கமாக இருக்குமானால் அதை முருகப்பெருமான் அருளால் செய்து முடிக்கலாம். …………….. பாலனாம் முருகனை பணிந்தே போற்றிட ஞாலத்தை ஆள்வார் நமனும் அஞ்சுவன்.

குரு உபதேசம் 4357

முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெற்றிட்டால் … சிவராஜயோகம், ராஜயோகம் என்பவை பெரும் தவசிகளுக்கே, முருகனது அருளை முழுமையாக பெற்றவர்களுக்கே உரியது என்றும் மண், பெண், பொன்னாசைகளை விட்டவர்க்கே இவை கைகூடும் என்றும் சிவராஜயோகம், ராஜயோகம் என்ற பெயரிலே சொல்லிக் கொடுப்பதாக மக்களை நம்ப வைப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்றும், ராஜயோகம் உணர்வால் உணர்த்த ஆசான் உடம்பின் உள்ளே சார்ந்திருந்து செய்யப்படுகின்ற மிகப்பெரும் யோகம் என்பதையும் அறியலாம். யோகம் கற்றுக் கொடுப்பதல்ல, ஆசான் உள்ளிருந்து உணர்த்த உணர்ந்து வழிநடத்த … Read more

குரு உபதேசம் 4356

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் … சைவ உணவில் நம்பிக்கையும், சைவ உணவை உண்ணுகின்ற வாய்ப்பையும் அசைவத்தை உண்ணாது சைவத்தில் தொடர்ந்து வைராக்கியமாக வருகின்ற வாய்ப்பையும் பெறுவதோடு முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி இடைவிடாது தொடர்ந்து பூஜை செய்கின்ற வாய்ப்பையும், சூழ்நிலையையும் பெறலாம் என்று அறியலாம். …………….. சைவத் தலைவன் சண்முகனைப் போற்றிட வையகம் போற்ற வாழ்வார் திண்ணமே. தூய்மையாம் முருகனை தோத்திரம் செய்திட வாய்மை குணமோடு வருகுமே நன்மை.

குரு உபதேசம் 4355

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இனிவரும் காலமெல்லாம் பந்தபாசத்தினால் உந்தப்பட்டு மயக்கத்தினால் ஆட்சி செய்தோர் விலகி, பந்த பாசமற்ற பொதுநலனில் அக்கறையும் தன்னலமற்ற தொண்டர்களும் முருகனது தலைமையிலே இவ்வுலகை ஆட்சி செய்வார்கள் என்பதை அறிவதோடு அந்தவித ஞான ஆட்சியில் முருகப்பெருமானின் அருளைப் பெற்ற சான்றோர்களே, பண்பாளர்களே இவ்வுலகை வழிநடத்தி அற்புதமாய் ஆட்சி செய்வார்கள் என்பதையும், முருகனது அருளைப் பெற்றால் நாமும் அந்த அற்புத உலகினிலே தொண்டு செய்கிற வாய்ப்பை பெறலாம் என்பதையும் அறியலாம். …………….. … Read more

குரு உபதேசம் 4354

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால்… ஞானசித்தர்கள் ஆட்சியான முருகப்பெருமானே நேரில் தலைமையேற்கிற ஆட்சியிலே தவறு செய்பவர்கள் எவ்வளவு புகழ் வாய்ந்தவராயினும் சரி, எவ்வளவு செல்வம் படைத்தவராயினும் சரி, எவ்வளவு ஆள் பலம் உள்ளவராயினும் சரி, எவ்வளவு அதிகார பலம் உள்ளவராயினும் சரி, தவறு செய்துவிட்டால் புலியைக் கண்ட ஆடு நடுங்குவது போல தண்டனைக்கு பயந்தே ஆக வேண்டும். உறுதியாக நீதியின் முன் அவருக்கு தண்டனை கிடைக்கும் என்பதை உறுதியாக அறியலாம். …………….. உறுதியாம் முருகனை உருகியே … Read more

குரு உபதேசம் 4353

முருகப்பெருமான் திருவடிகளை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால் : மரணமிலாப் பெருவாழ்வை அடைய முருகனது அருள் இல்லையேல் அணுவளவும் முடியாது என்பதையும். முருகனது ஆசியையும் அருளையும் பெற வேண்டுமென்றால் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவதயவை மேற்கொண்டு சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதும் தினம் தினம் காலை பத்து நிமிடமும் மாலை பத்து நிமிடமும் இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, … Read more

குரு உபதேசம் 4352

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற்றிட்டால் : முருகப்பெருமானின் திருவடிகளுக்கு யார் கொத்தடிமையாக இருக்கின்றார்களோ அவர்களுக்கே சகல பாதுகாப்பும் முருகப்பெருமானால் தரப்படும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4351

முருகப்பெருமான் திருவடி பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால் : விவசாயிகள், தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், அலுவலர்கள் என அனைவரது பிரச்சினைகளுக்கும் ஞானபண்டிதனை வணங்க வணங்க ஞானபண்டிதன் ஆட்சியாம் சித்தர்கள் ஆட்சி மலர்ந்து உடனடியாக அவரவர் பிரச்சினைகளெல்லாம் முருகனது அருளாலே தீர்க்கப்பட்டு நல்ல முடிவை உடனே அடைவார்கள். நீதி பெறவோ, தீர்வு பெறவோ, காலதாமதமோ, லஞ்சமோ, தடைகளோ இல்லாமல் உடனடி நீதி கிடைக்கும் என்பதை அறியலாம். ……………… ஆற்றலாம் முருகனின் அருளைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். … Read more