குரு உபதேசம் 4583
அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட: மற்ற உயிர்கள் மகிழும்படியான வகையிலே வாழ்கின்ற அறிவைப் பெறலாம்.
அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட: மற்ற உயிர்கள் மகிழும்படியான வகையிலே வாழ்கின்ற அறிவைப் பெறலாம்.
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றால்: மும்மலமாகிய சிறையை உடைத்து மும்மலச்சிறையில் அடைப்பட்ட ஆன்மாவை விடுவித்து சித்தி பெறலாம் என்பதும், அந்த மும்மலச் சிறையை உடைத்தெறியும் வல்லவன் முருகனே என்றும் முருகப்பெருமானால்தான் மும்மலச் சிறையை உடைத்து சிறைப்பட்ட ஆன்மாவை விடுவித்து கடைத்தேற்ற முடியுமென்றும் அறியலாம். வல்லவன் முருகனை வாழ்த்துவோம் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்வோம். ஆற்றலாம் முருகனின் அருளை தினமும் போற்றியே மகிழ்வர் புண்ணியரே. மணிவாசகப் பெருமானை மகிழப் பூஜித்தால் கனிவான சித்தியை காண்பார் உண்மையே. வள்ளல் … Read more
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: வாசிக்கு தலைவன் முருகப்பெருமான் தான் என்பதை அறியலாம். அச்சம் தவிர்த்தருளும் அருளாளன் முருகனையே நிச்சயமாக நினைத்திடல் நலமே சத்து அறிந்த முருகனின் தாளிணை போற்றிட சித்து அனைத்தும் திடமாம் சித்தியே.
அகத்தீசன் ஆசிபெற்றிட்டால்: ஞானிகள் அத்தனைபேரும் முருகப்பெருமானின் ஆசி பெற்றே வாசி வசப்பட்டவர்கள் என்று அறியலாம்.
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து உண்பதே உண்மையான சைவம் என்று அறியலாம். வீடுபேறு அருளும் வேலவன் திருவடியை நாடியே போற்றிட நன்மை உண்டாம். கற்றறிந்த முருகனின் கழலிணை போற்றிட கற்றறிந்தார் கற்ற கல்வியின் பயனே. கல்வியின் பயனே கழலிணை பணிதல்.
அகத்தீசன் ஆசிபெற்றிட்டால்: ஜீவதயவு பெருகுவதற்கு சைவ உணவே சிறந்தது என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்: முனிவர்களுக்கெல்லாம் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற அறிவை பெறலாம். நற்றவ முருகனை நாளும் போற்றிட உற்ற தவமது ஓதி உணர்வீர். ஆற்றலாம் முருகனின் அருளைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம்.
அகத்தீசன் ஆசி பெற்றிட்டால்: ஞானிகளின் திருவடிகளைப் பற்றி பூசிப்பதே உண்மையான பக்தி என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட: காமதேகத்தின் கசடுகளை நீக்கவும், சிறப்பறிவு பெறவும் முருகப்பெருமான்தான் அருள்செய்வான் என்பதை அறியலாம். பயனுடைய முருகனின் பாதம் பணிந்திட நயனுடைய வாழ்வும் நல்கும் முக்தியே. கருணையே வடிவான கந்தனைப் போற்றிட வருணனும் வந்து வழங்குவான் மழையே. சத்தியவான் முருகனின் தாளைப் போற்றிட நித்திய வாழ்வும் நிலைக்கும் முக்தியே. பரிவுடைய முருகனின் பாதம் போற்றிட செறிவுடைய வாழ்வும் சித்திக்கும் முக்தியே.