Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4371

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றிட்டால்…. தற்காலத்தில் தவறு செய்வோர் தமக்கு உண்டான பணபலத்தாலும், ஆள்பலத்தாலும், செல்வாக்கினாலும் தவற்றின் தண்டனையிலிருந்து தப்புவதோடு, தவறு செய்யவும் அஞ்சுவதில்லை. ஆனால் வருங்காலங்களிலே தவறு செய்தோர் ஞானிகளால் கண்டிப்பாக தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதையும் அறியலாம். மணிவாசகப் பெருமானின் மலரடி போற்றிட அணிமா சித்தியும் அடைவார் திண்ணமே. மகத்துவம் மிக்கதோர் மணிவாசகப் பெருமானை அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம்.

குரு உபதேசம் 4370

முருகப்பெருமான் திருவடிகளை பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தொல்லுலகில் நல்லோர்கள் படுகின்ற துன்பத்தை காணச் சகியாமல் ஞானபண்டிதனே நேரில் தோன்றி நல்லோரை காப்பான் என்பதும் உண்மையே, கலியுகம் முடித்து ஞானயுகமதனை அமைப்பான் என்பதும் உண்மையே.  

குரு உபதேசம் 4369

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பொது சொத்தை அபகரிக்காமல் தப்பிக்கலாம், பொதுசேவை மனப்பான்மையுடையவராய் ஆகலாம், தேச விரோதமான செயல்களை செய்யாமல் தப்பிக்கலாம், தமக்கு கொடுக்கப்பட்ட பதவி அதிகாரங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு நன்மைகள் செய்யும் எண்ணம் வரும். அதன் மூலம் அவரவரும் தம்மை காப்பாற்றிக் கொள்ளலாம்.  

குரு உபதேசம் 4368

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு மனிதனுக்கு விடாத பிறவிகளை உண்டுபண்ணுவது அவனது காமதேகமே காரணம் என்பதை அறியலாம். …………….. காமனைக் கடிந்த கந்தனின் நாமத்தைச் சொல்லிட நமனும் அஞ்சுவன்.

குரு உபதேசம் 4367

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பஞ்சமகா சக்திகளும் முருகனின் ஆணைக்கு உட்பட்டு நடப்பதினாலே, நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடு செழிக்கும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4366

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், நவகோடி சித்தரிஷி கணங்களுக்கும், தலைவனான முருகப்பெருமான் நேரில் தோன்றி ஞானசித்தர் காலத்தை வழி நடத்துவான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் 4365

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானசித்தர்கள் காலமாகிய வருங்காலங்களிலே பண்புடையோர்களால்தான் ஆட்சி செய்யப்படும் என்பதையும், அத்தகைய பண்புடையோரை முருகப்பெருமானால் அரூபநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அற்புதமாய் ஆட்சி பொறுப்பிலே அமர்த்தப்படுவார்கள் என்பதையும் அறியலாம். ஆட்சி பொறுப்பை பண்புள்ளவர்கள் தகுதிகளை பெற, அவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவத்தை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டுமென்றும், பொது சொத்து அனைத்தும் மக்களது வரிப்பணத்தினால் ஆக்கப்பட்டது என்பதனால் அது இறை சொத்து, அதாவது சிவன் சொத்தாகும் என்பதை அறிந்தவராயும், பொது … Read more