Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4178

முருகப்பெருமானை வணங்கிட: பக்தியும், சித்தியும், முக்தியும் தருவது முருகப்பெருமானின் திருவடிதான் என்று அறியலாம். புலன் ஐந்து வென்ற புண்ணியன் முருகனை நலம் பெறவே போற்றுவோம் நாளும் துதித்தே. சத்தியவான் முருகன் தாளைப் போற்றிட நித்திய வாழ்வு நிலைத்திடும் உண்மையே. காயத்தை அமுதாய் கண்ட முருகனை மாயத்தே காண்டல் மாண்பு.

குரு உபதேசம் – 4177

முருகனை வணங்கி பூஜைகள் செய்து : ஆறுவகையான சைவங்களையும் அதன் தன்மையையும் அறிந்து அதை கடைப்பிடிப்பதற்கான சூழ்நிலை வாய்ப்புகள் அனைத்தையும் பெற்று அதிவீர சைவத்திலே சென்று வீரசைவ வாழ்வை வாழ்ந்து சைவத்தலைவன் முருகனது திருவடியை பற்றிடலாம். உயிர்களை வதைத்து சாப்பிடாது தாவர வர்க்கங்களை மட்டுமே உண்பது சைவமாகும். உப்பு சேர்த்து உண்பதும் சைவமாகும் ஆனால் சுவை கூட்டக் கூடிய உப்பு, புளி, காரம் என்ற தாவர உணவினையும் நீக்கி சுவையற்றதும் உடம்பினை வலுக்கூட்டி மும்மல சேட்டைகளை தூண்டக்கூடிய … Read more

குரு உபதேசம் – 4176

முருகப்பெருமானை வணங்கிட: புண்ணியவான்கள்தான் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசிபெற முடியும் என்பதை அறியலாம். வாழும் கலையை வழங்கிய முருகனை நாளும் போற்றியே நலம் பெறுதல் நலமே! கனிவேலன் தந்த கனிவான தமிழை கனியாக்கி தருதல் கடனே! நஞ்சை அமுதாக்கிய நாயகன் முருகனை நெஞ்சில் நினைக்க நினைத்தவை சித்தியே!

குரு உபதேசம் – 4175

முருகனை வணங்கிட: மனம், வாக்கு, காயத்தால் செய்த பாவங்களை உணரச் செய்தும் மீண்டும் அதுபோன்ற குற்றங்கள் ஏற்படாவண்ணம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய அறிவைப் பெறலாம். மகத்துவம் பொருந்திய மணிவாசகப் பெருமானை அகத்துள் வைத்தே ஆராதனை செய்வோம். முற்றும் உணர்ந்த முருகன் திருவடியை பற்றிக் கொள்வதே பயனுடைய செயலாகும். தாய்மை குணம் தந்த முருகனை வாய்மையாய்ப் போற்றி வழிபடுதல் நலமே. கற்றதன் பயனே கழல் பணிதல் என்றே உற்றநல் அறிவென்றே உண்மை உணர்வோம்.

குரு உபதேசம் – 4174

முருகனை வணங்கிட: என்றும் நிலைப்பெற்று அருளுகின்ற முருகப்பெருமான் திருவடியே உண்மை என்று அறியலாம். பகலவனாம் முருகனின் பாதம் பணிந்திடவே இகல்எல்லாம் விலகியே இன்பம் உண்டாம்.

குரு உபதேசம் – 4173

முருகனை வணங்கிட: சதானந்த நிலை நின்று அருட்பெருஞ்ஜோதி வடிவினனாகி எண்ணிலா கோடி பரந்து விரிந்து அருள் பிரகாசமாய் சொல்லொண்ணா பேரானந்த நிலை நின்று அருளும் முருகப்பெருமான் அமைதியுடன் பேரானந்த நிலை நின்று அருள் புரிகின்றனன். பேரானந்த நிலை நிற்கும் முருகனை அழைத்தாலன்றி நம்மீது அவன்தன் அருட்கண் பார்வை திரும்பாது. இவ்வுலகினிலே உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு ஜீவதயவின் வழியில் தூய நெறி வழி நடந்து, எவ்வுயிருக்கும் தீங்கு நினையாது உள்ள மென்மையான … Read more

குரு உபதேசம் – 4172

முருகப்பெருமான் திருவடிகள் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், கடல்கொந்தளிப்பு, நிலநடுக்கம், புயல், மிகுதி மழை ஆகியவை முருகப்பெருமானின் ஆசியால் கட்டுப்படுத்தப்படும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 4171

முருகனை வணங்கிட: உலகத்தில் அதர்மம் மிகுதியாகும் போதெல்லாம் ஞானத்தலைவன் முருகப்பெருமானே விஷ்ணுபகவானாகவும், அகத்தியராகவும், அவதாரங்களாகவும் தோன்றி அதர்மத்தை அழித்து நீதியை நிலை நாட்டினான் என்பதை அறியலாம். தாயினும் மிக்க தயவுடை தனிப்பெருங்கருணை தெய்வம் முருகப்பெருமானே வேற்படை கொண்டு அதர்மத்தை அழித்து பண்புடையோரை காப்பான் என்பதையும் அறியலாம். பொல்லா மாமாயை சூழ் கலியுகம் காக்க மக்களை மீட்க ஞானயுகம் அமைக்க அவனே ஞானியாக அரங்கர் வடிவினில் அவதரித்துள்ளதையும் அறியலாம். பூரணமாக பூவுலகை ஆளவே வாரணக்கொடியோன் வருவான் உண்மையே.