Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 4036

வாழ்வில் சைவ உணவு மேற்கொண்டு, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று காலை பத்து நிமிடங்களும் மாலை பத்து நிமிடங்களும் முடிந்தால் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு பத்து நிமிடமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல இந்த மகாமந்திரத்தை ஜெபித்து வரவேண்டும்.

குரு உபதேசம் – 4032

உலக மகா தலைவன் முருகப்பெருமான்தான் என்றும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியை பற்றினாலன்றி, அவனருள் பெற்றாலன்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்ற நிதர்சனமான உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

குரு உபதேசம் – 4017

முருகன் அருள்கூடி தான தருமங்களை தவறாது செய்து செய்து, முருகனின் அருளாசிகளைப் பெற்றும் பிற உயிர்களின் மனமகிழ்வை பெற்றாலும், நாம் அருள் பெற தடையாய் இருப்பது முதலில் நாம் உண்ணுகின்ற உணவிலேதான் பெரும்பாவம் செய்கிறோம் என்பதை உணர்வான். ஆதலினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து முதலில் சைவத்திற்கும், பிறகு சுத்த சைவத்திற்கும் அதன் பின் வீரசைவ நெறிக்கும் அதன்பின் அதிவீர சைவநெறிக்கும் வந்து காமத்திற்கு காரணமாய் உள்ள இத்தேகத்தினை கட்டுப்படுத்தி காமத்தினால் விளையும் வினைகளை குறைத்திடுவான்.

குரு உபதேசம் – 4016

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் ஆசியைப் பெற வேண்டுமானால், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், முருகனது அருளால் வருகின்ற ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறலாம் என்பதையும் அறியலாம்.