குரு உபதேசம் 4228
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி, தொடர்ந்து பூஜை செய்யசெய்யத்தான் முருகப்பெருமான் தான், ஞானத்தின் கடவுள் என்றும், யாருக்கும் எளிதில் அகப்படாத முருகனே ஞானத்தலைவன், அவனே அனைத்திற்கும் காரணமாகியுள்ளான் என்பதையும் உணர்ந்து முருகனது திருவடி துணையின்றி யாதொன்றும் ஆகாது என்பதையும் அறிந்து தெளியலாம். தெளிந்து தொடர்ந்து பூஜை செய்ய, பூஜை செய்ய முருகனது திருவருளை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.


