admin
குரு உபதேசம் – 4139
முருகா என்றால்: உலக நன்மைக்காகவே அவதாரம் செய்தவன்தான் முருகப்பெருமான் என்றும் அவன் திருவடியை பற்றி பூசித்து ஆசிபெறுவதே அறிவு என்றும் அதுவே சாகாக் கல்வி என்பதையும் அறியலாம்.
குரு உபதேசம் – 4138
முருகா என்றால்: பொருள் மீது பற்றறச் செய்தும், பொது சேவையில் ஆர்வத்தை உண்டு பண்ணியும், தன் திருவடியை தொடர்ந்து பற்றச் செய்தும், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய ஆர்வத்தை உண்டு பண்ணியும் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொள்வான் முருகப்பெருமான்.
குரு உபதேசம் – 4137
முருகா என்றால்: வீடு கட்டுதல், சுப செயல்கள் செய்தல், ஆக்க பணிகள் செய்தல் என்ற அனைத்திற்கும் கடன் வாங்கி செய்யாமல் இருக்கின்ற சூழ்நிலைக்கேற்ப வாழ்கின்ற மனவலிமை பெற்று நலமுடன் வாழ்வார்கள்.
குரு உபதேசம் – 4136
முருகா என்றால்: சைவ உணவை மேற்கொள்ள செய்தும், தொடர்ந்து அன்னதானம் செய்ய வைத்தும், தன் திருவடியை தொடர்ந்து பூஜிக்க வாய்ப்பு தந்தும், வன்மனத்தை நீக்கி உயர்ந்த பண்புள்ள தாய்மை குணத்தை தந்தருள்வான் முருகப்பெருமான். முருகப்பெருமான் திருவடியே கதியென்று நம்பி பூஜை செய்கின்ற மக்களுக்கே இந்த வாய்ப்பை அருள்வான் முருகப்பெருமான். சான்றோன் நட்பே ஆன்ற துணையாகும்
குரு உபதேசம் – 4126
முருகா என்றால், பற்றற்ற ஞானியும், முற்றுப்பெற்ற முனிவனுமாகிய முருகப்பெருமான் திருவடியைப் பற்றுவதே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று அறியலாம்.
குரு உபதேசம் – 4125
முருகா என்றால் – முருகப்பெருமானே முழுமுதற் கடவுள் என்றும் முருகனது அருளைப் பெற ஆசியைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தால் அவன் அருள் பெறலாம் என்பதை உணர்ந்து வாழ்ந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.


