குரு உபதேசம் 4213
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : இகவாழ்வாகிய இல்லறத்திற்கும் பரவாழ்வாகிய ஞானத்திற்கும் ஆதி ஞானத்தலைவன், ஞானபண்டிதன் முருகப்பெருமானைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதை அறியலாம். அறக்கடவுளாம் ஆறுமுகப் பெருமானை மறவாமல் பூசிக்க மனமும் செம்மையே. அகிலத் தலைவன் ஆறுமுகப் பெருமானை மகிழப் பூசித்தால் மனமும் செம்மையே.


