Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4266

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : சிந்தையும் தூய்மையாகும், சொல்லும் தூய்மையாகும், செயலும் தூய்மையாகும், மற்றைய அனைத்தும் தூய்மையாகி முருகனது ஆசியைப் பெறலாம். தூய முருகனை தோத்திரம் செய்திட ஆய நல்வாழ்வு அருள்வான் முருகனே. முற்றும் உணர்ந்த முனிவர்கள் திருவடியே பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் தரும்.

குரு உபதேசம் 4265

கொல்லா நெறியே குருவருள் நெறி அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : மனிதன் உணவு உண்பதற்கென்று இயற்கை எல்லையில்லாத வகையிலே அருளி நிற்கிறது. பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கீரை வகைகளும், கனி வகைகளையும், இது தவிர காளான் உணவுகளும், கிழங்கு வகைகளையும், பால், தேன் போன்ற துணை உணவுகளும் என ஏராளமாய் இருக்கும் போது, ஒரு உயிரை துடிக்க துடிக்க கொடுமை செய்து கொன்று, அதன் உடம்பை சுவைக்காக உண்பது பெரும் பாவச்செயல் என்பது … Read more

குரு உபதேசம் 4264

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : அறிவு என்ற ஒன்று இருக்குமானால் அது முருகப்பெருமானால் தான், தோன்றக் கூடும் என்பதையும், அந்த அறிவும் இகவாழ்வியல் அறிவு என்றும், பரவாழ்வியல் அறிவு என்றும், இரண்டு வகைப்படும் என்றும், அந்த இரண்டு வகையான அறிவையும் தோற்றுவித்தவன் முருகப்பெருமானே என்றும் அறியலாம். இக வாழ்வாகிய இல்லறத்திற்கும் பரவாழ்வாகிய ஞான வாழ்விற்கும் தலைவன் முருகனே என்பதையும் அறியலாம். ஆகவே ஜென்மத்தைக் கடைத்தேற்ற விரும்புகின்றவர்கள் படுக்கும் போதும், காலை எழும் போதும், … Read more

குரு உபதேசம் 4263

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : அஞ்ஞானியையும், மெய்ஞானியையும் அறிந்து கொள்ளலாம். அந்திவண்ணன் அழகன் முருகனை சிந்திக்கவே உண்டாம் சித்தி.

குரு உபதேசம் 4262

முருகப்பெருமானைப் பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உயிரின் மீதும் குற்றமில்லை, உடம்பின் மீதும் குற்றமில்லை என்பதையும் இவ்வாறு ஏற்பட காரணம் நம்மை தோற்றுவித்த இயற்கைதான் இவ்விதம் செய்துள்ளது என்றும், இயற்கையன்னை மனிதனைத் தோற்றுவிக்கும் போதே காமதேகத்தையும் சேர்த்துத்தான் தோற்றுவித்தாள் என்பதையும் அறியலாம். ஏன் காமதேகத்தை தோற்றுவிக்க வேண்டும். மற்றைய எந்த ஜீவராசிகளும் தோன்றி மறைந்து தோன்றி மறைவதான பரிணாமத்தினை உடையது. ஆனால் இயற்கையை வென்று மரணமிலாப் பெருவாழ்வைப் பெறவும் ஒரு உயிரினம் வேண்டும் என்பதினாலே தான், மனிதனைத் … Read more

குரு உபதேசம் 4261

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள விரும்பினால் முருகப்பெருமான் திருவடிகளை வணங்கினால்தான் அறிய முடியும் என்றும், முருகப்பெருமானின் ஆசியைப் பெற்றால்தான் இவை நான்கையும் அடைந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அறியலாம். அறம் பொருள் இன்பம் அருளிய முருகனை திறம்பட பூஜிக்க சித்தியே உண்டாம். சித்தியும் உண்டாம் திருவடி பூஜையால் முக்தியும் உண்டாம் மோட்சமும் உண்டாம். உண்டாம் நல்வினை … Read more

குரு உபதேசம் 4260

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : வீடு பேறு என்ற மோட்ச இலாபம் உண்டென்றால் அது முருகப்பெருமானின் திருவருளால்தான் முடியும் என்பதை அறியலாம். முருகப்பெருமான் திருவடியை வேண்டினால் வேண்டிய அனைத்தையும் பெற்று வெற்றியை எளிதில் அடையலாம். ஆண்டியாம் முருகனை அன்புடன் பூஜிக்க வேண்டிய அனைத்தும் விரைந்தே அருள்வான்.? வயலூர் முருகனை வாழ்த்தி வணங்கிட இயல்பான வாழ்வும் இன்பமும் உண்டாம்.

குரு உபதேசம் 4259

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கடினமான மும்மலத் திரையை விலக்க செய்து உள்ளேயுள்ள பெருஞ்ஜோதிச் சுடரை வெளிப்படச் செய்வான், ஜோதியை நம்முள்ளே தோன்றச் செய்து மரணமிலாப் பெருவாழ்வையும் நமக்கு அருள்வான் குருபரனே! குருவே என்றே கூவி அழைத்திட வருவேன் என்றே வரமும் அருள்வான். அருள்வான் முருகனும் அன்போடு அழைக்க இருளும் இல்லை இன்பமும் உண்டாம். உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட கண்டார்க்கு உண்டாம் காட்சி.