குரு உபதேசம் 4266
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : சிந்தையும் தூய்மையாகும், சொல்லும் தூய்மையாகும், செயலும் தூய்மையாகும், மற்றைய அனைத்தும் தூய்மையாகி முருகனது ஆசியைப் பெறலாம். தூய முருகனை தோத்திரம் செய்திட ஆய நல்வாழ்வு அருள்வான் முருகனே. முற்றும் உணர்ந்த முனிவர்கள் திருவடியே பற்றற்ற வாழ்வும் பரவாழ்வும் தரும்.


